சனி, 23 டிசம்பர், 2017

வராக்கடன் சுமை

தனியார்மயமா தீர்வு?


* பொதுத்துறை வங்கிகளிலுள்ள அரசின் பங்குகளை 33 சதவீதத்திற்கு குறைக்க வேண்டுமென்று தொழிலதிபர்கள் அமைப்பான சி.ஐ.ஐ கோரியுள்ளதே!

ஆமாம். பொதுத்துறை வங்கிகளின் வராக்கடன் சுமையும், மூலதனத் தேவையிலேற்படுகிற மோசமான நெருக்கடியும் தலைப்புச் செய்திகளாக மாறியுள்ளன. ஒரு புறம் அந்நெருக்கடியைச் சமாளிக்க கூடுதல் மூலதன அளிப்பை அரசு தருவதற்கான விவாதம் நடந்தேறுகிறது. 

மறுபுறமோ பொதுத்துறை வங்கிகளைத் தனியார்மயமாக்குவதே தீர்வு என்கிற வாதமும் ஆர்வத்தோடு முன் வைக்கப்படுகிறது.
பொதுத்துறை வங்கிகளில் மெத்தனம், திறமையின்மை, ஊழல் இருக்கிற தென்றும் தனியார் உடமையானால் அது தானாகவே திறமையை, சீரான நிதி நிர்வாகத்தை, திறம்பட்ட செயல்பாட்டைக் கொண்டு வந்து விடும் எனவும் ஓர் கருத்தை முன் வைக்கிறார்கள். ஆனால் இந்திய அனுபவம் அதற்கு மாறானது.

* அது என்ன இந்திய அனுபவம்?

இன்றைய வங்கித் தொழில் நெருக்கடிக்கு முழு முதற்காரணம் தனியார் கார்ப்பரேட் நிறுவனங்களே! வராக்கடன் சுழலில் சிக்க வைத்தவர்களும் அவர்களே! வங்கிகளின் வராக்கடன் 5,50,000 கோடிகளில் 90 சதவீதமானவை அரசு வங்கிகள் தந்த கடன்களே. ஆனால் அதில் கிட்டத்தட்ட 100 சதவீதமும் தனியார்கள் கட்டத்தவறிய கடன்களே.

“ கிரெடிட் சூசி ” வெளியிட்டுள்ள ‘கடன்களின் இல்லம்’ என்ற அறிக்கை இந்திய வங்கிகளின் கடன்கள் பற்றிய ஆழமான ஆய்வைச் செய்துள்ளது. இந்த ஆய்வு ஒன்றைத் தெளிவாகச் சொல்கிறது. “ சந்தை எழுச்சி ” இருந்த காலத்தில் தனியார் பெரும் தொழிலகங்கள் அதீத ஆசையோடு செய்த முதலீடுகளே காரணம் என்பதே அதன் செய்தி.
* யார் யார் இந்நெருக்கடியின் காரண கர்த்தாக்கள்?

உலக நிதி நெருக்கடிக்கு பிந்தைய ஐந்து ஆண்டுகளில் (2007 - 12) இந்தியாவின் மிகப்பெரும் 10 தொழிலகங்கள் கடன் சார்ந்த விரிவாக்கத்தில் ஈடுபட்டது. ஒரு சில பெரிய பெயர்களைச் சொல்லலாம். ரிலையன்ஸ் ஏ.டி.ஏ.ஜி, வேதாந்தா, எஸ்ஸார், ஜெய்பி, லாங்கோ போன்ற நிறுவனங்கள் மின்சாரம், உலோகம், ஆதாரத் தொழில்களில் மெகா முதலீடுகளை செய்தன. 

உள்நாட்டு மொத்த உற்பத்தி விகிதங்களின் வளர்ச்சி விகிதங்கள் நிலைத்து நீடித்து நிற்குமென்ற நம்பிக்கையில் கடன் கிணற்றுக்குள் குதித்தார்கள் . 
அவர்களின் கடன்கள் 1 லட்சம் கோடிகளிலிருந்து 5,50,000 கோடிகளாக ஐந்து மடங்கு உயர்ந்தது. சிலர் அயல் நாட்டு நிறுவனங்களைக் கூட வாங்கினர். உள்நாட்டு வங்கிகளும் “ இந்தியப் பெருமிதம் ” பேசி இத்திட்டங்களுக்கு பணத்தை வாரி இறைத்தன. 

10 தொழிலகங்களின் கடன்கள் மட்டும் மொத்த வங்கிக் கடனில் ஐந்தாண்டுகளில் 6 சதவீதத்திலிருந்து 13 சதவீதமாக வளர்ந்தன.


* அவர்களுக்கு என்ன நேர்ந்தது?

2013 ல் உலகளாவிய பொருளாதார நெருக்கடி உள்நாட்டின் நிதிச்சந்தையையும் நகர முடியாத தேக்கத்தில் கொண்டு வந்து நிறுத்திவிட்டது. ஊழல்களும் இத்திட்டங்களைச் சிதைத்தன. பல திட்டங்கள் ஆரம்ப நிலையிலேயே உயிரை விட்டன.

கடன்களைத் திருப்பிச் செலுத்துவதற்கான வாய்ப்புகள் சுருங்கிப் போய்விட்டதால் கடன் வலைக்குள் சுருண்டுவிட்டன. 2012ல் கடன் வட்டியையாவது செலுத்த முடிகிற நிலைமையில் இருந்த இந்த கார்ப்பரேட் நிறுவனங்கள் மேலும் கடன்களை வாங்கின. 2015 நிதியாண்டில் இது 7.3 லட்சம் கோடிகளைத் தொட்டது. இவை வராக்கடன்களாக மாறிப் போயின.

* இவ்வளவு பெரிய நெருக்கடி இப்போதுதான் தெரிகிறதா?

2013 நிதியாண்டிற்குப் பிறகு சிக்கல் நிறுவனங்களுக்கு கடன் தருவதை நிறுத்தினாலும், கடன் மறுசீரமைப்பு என்ற பெயரால் வராக்கடனைக் குறைத்துக் காண்பிக்கிற நடைமுறைகள் கையாளப்பட்டன. பிறகு ரிசர்வ் வங்கி கொஞ்சம் ஸ்குரூக்களை டைட் பண்ண ஆரம்பித்தது. இதற்குப் பின்னர்தான் நெருக்கடியின் முழுப் பரிமாணம் வெளியில் தெரிய ஆரம்பித்துள்ளது.

ஆனால் மேலோட்டமாக அரசு வங்கிகள் எச்சரிக்கையாக கடன் தந்திருக்க வேண்டும், திட்டங்கள் குறித்து சரியான மதிப்பீடுகளைச் செய்திருக்க வேண்டும் என்று பேசுகிறார்கள். அரசு வங்கிகளின் எச்சரிக்கையற்ற கடன் நிர்வாகம் குற்றம் எனில், அதீதமான நிதி இடர்களை ஆசையின் காரணமாக மேற்கொண்டு இச்சிக்கலுக்கு காரணமாக இருந்த பெரும் தொழிலகங்களும் குற்றவாளிகள் அல்லவா!

* இருந்தாலும் வங்கி உயர்மட்ட நிர்வாகிகளும் பொறுப்பு ஏற்க வேண்டுமே!

அவர்களின் தவறுகளுக்கும் உள்நோக்கங்கள் இருந்திருக்கலாம். பொதுத்துறை வங்கிகளின் தலைவர்கள் அரசியல் நிர்பந்தத்திற்கு ஆளாகியிருக்கலாம். அல்லது கைமாறாக ஏதாவது எதிர்பார்த்திருக்கலாம். ரிசர்வ் வங்கி அதிகாரிகள் தனிப்பட்ட முறையில் பேசும்போது அரசு வங்கிகளின் கடன் முடிவுகளில் அரசியல் தலைவர்களின் தொலைபேசி அழைப்புகள் பெரும் பங்கு வகித்துள்ளன என்பதை ஒத்துக் கொள்கிறார்கள்.

ஆனால் எவ்வளவு அரசியல் தலையீட்டால், எவ்வளவு கையூட்டுக்காக, எவ்வளவு தவறான மதிப்பீடுகளால் என வராக்கடன்களைப் பிரிப்பதற்கு ஆழமான ‘ரேகை’ ஆய்வு தேவைப்படுகிறது.

*தனியார்வங்கிகளின் நிலைமை என்ன?

கார்ப்பரேட்டுகளின் இடர் கடன்களுக்கு தனியார் வங்கிகளும் தப்பவில்லை. ரிசர்வ் வங்கி அவர்களை
நெருக்குகிற வரை இத்தகவல்கள் வெளிவராமல் இருந்தன. மார்ச் 2017 ல் தனியார் வங்கிகளின் கடனிலும் 9.3 சதவீதம் இடர் கடன்களாக மாறியுள்ளது என்ற உண்மை வெளியே வந்துள்ளது. 

ஆக்சிஸ் வங்கி, யெஸ் வங்கி, ஆர்.பி.எல் வங்கி, ஐசிஐசிஐ வங்கி ஆகியன கடந்த சில காலாண்டுகளில் தங்களின் பாரம்பரியக் கடன்கள் பல இடரில் சிக்கியுள்ளதை ஒப்புக் கொண்டுள்ளன. ஏன், அந்நிய நிதி நிறுவனங்களின் கடன்கள் கூட சிக்கலுக்கு ஆளாகியுள்ளதை ரிலையன்ஸ் ஏ.டி.ஏ.ஜி, ஜெய் பிரகாஷ் இண்டஸ்ட்ரீஸ் ஆகியவற்றின் ஆவணங்கள் தெரிவிக்கின்றன.

* அரசு நிறுவனங்கள் வங்கிக் கடன்கள் வாங்கியிருக்குமே!

மின்சாரம், உலோகம், ஆதாரத் தொழில்களில் ஈடுபட்ட தனியார் பெரு நிறுவனங்கள் வராக்கடன் சுமைக்குப் பெரும் காரணங்களாக உள்ளன. ஆனால் இதே ‘சந்தை எழுச்சி’ காலத்தில் (2007- 12) என்.டி.பி.சி, கோல் இந்தியா, என்.எம்.டி.சி, நால்கோ, என்.பி.சி.சி போன்றவை அதிக ஆசைப்படாமல் முதலீடு செய்து வலுவான இறுதிக் கணக்குகளோடு திகழ்கின்றன. 
எனவே தனியார் மயம் நல்ல நிர்வாகத்தைத் தரும் என்பது உண்மையும் அல்ல... நெருக்கடிக்கு தீர்வும் அல்ல...
                                                                                                              - ஆர்த்தி கிருஷ்ணன்
                                                                                                                                                                               ( பிசினஸ் லைனில் )
 "மோசடி கண்காணிப்பு குழு சமர்ப்பித்த அறிக்கையின்படி கடந்த நிதியாண்டில் (2016-17) மட்டும் வங்கிகளுக்கு நிதி மோசடி காரணமாக 16,786 கோடி ரூபாய் வரையில் இழப்பு ஏற்பட்டுள்ளது."
                                                                                                                                         -ரிசர்வ் வங்கி 
=======================================================================================
===========================================================================================================================


நாடு முழுவதும் 10பைசாவில் பேசவைத்த ஆ.ராசா கெட்டவர். 
இட்டிலிக்கு வரி போட்ட மோடி நல்லவர்.

ஞாயிறு, 17 டிசம்பர், 2017

ஹாலிவுட்டை கலக்கியகமல்ஹாசன்

ஆங்கிலப்படங்களை கமல்ஹாசன் தழுவுகிறார் என்று சொல்பவர்களுக்கு இது சரியான ஆதார பதிலடி.





ராஜீவுக்கு போஃபர்ஸ் ! மோடிக்கு ரபேல் !!

714-ஐ விட 1611 அதிகமென்பதை ஐந்தாம் வகுப்பு மாணவன்கூடச் சொல்லிவிடுவான். ஆனால், இது ஐந்தாம் வகுப்பு பாடப்புத்தகத்தில் வரும் கணக்கல்ல. ரபேல் போர் விமான பேரம் தொடர்பான கணக்கு. அதனால் 1611 குறைவானது எனப் பாரதப் பிரதமர் மோடி, நிதியமைச்சர் அருண் ஜெட்லி உள்ளிட்டு பா.ஜ.க.வைச் சேர்ந்த அனைவரும் சாதிக்கிறார்கள்.
மன்மோகன் சிங் ஆட்சியின் இறுதியாண்டுகளில் பிரெஞ்சு நிறுவனமான தஸ்ஸால்டிடம் இருந்து 90,000 கோடி ரூபாய் மதிப்பில் 126 மத்திய ரக பல்நோக்குப் போர் விமானங்கள் (MMRCA – Medium Multi-Role Combat Aircraft) வாங்குவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்தியாவின் பொதுத்துறை இராணுவ தளவாட உற்பத்தி நிறுவனங்களுக்கு விமானத் தொழில்நுட்பங்களை மாற்றித் தருவது, 108 விமானங்களை இந்தியாவிலேயே தயாரிப்பது, இந்த ஒப்பந்தத்தின் மூலம் தஸ்ஸால்ட் நிறுவனத்திற்கு கிடைக்கும் மொத்த வருவாயில் 50 சதவீதத்தை இந்தியாவில் முதலீடு செய்வது ஆகிய விதிகள் அந்த ஒப்பந்தத்தில் இடம்பெற்றிருந்தன.
ரபேல் போர்விமானங்களை வாங்குவது தொடர்பாக அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் பிராண்டு அதிபர் ஃபிரான்கோயிஸ் ஹாலண்டே இடையே நடந்த பேச்சுவார்த்தை.(கோப்புப் படம்)
பிரான்சு நாட்டைத் தவிர, பிற நாட்டு விமானப் படைகள் ரஃபேல் விமானங்களைச் சீந்தாத காரணத்தால், தஸ்ஸால்ட் நிறுவனத்திற்கு இந்த ஒப்பந்தம் வரப்பிரசாதமாக அமைந்தது. இதன் காரணமாகப் பாதுகாப்புத் துறை வல்லுநர்கள் உள்ளிட்டுப் பல்வேறு தரப்பிலிருந்து இந்த ஒப்பந்தத்திற்கு எதிராக விமரிசனங்கள் எழுந்தன.
நியாயமாகப் பார்த்தால், பா.ஜ.க. ஆட்சியைப் பிடித்த பிறகு இந்த ஒப்பந்தத்தைக் கைகழுவியிருக்க வேண்டும். ஆனால் மோடி, 2012-இல் 126 விமானங்களை வாங்க காங்கிரசு அரசு செய்திருந்த ஒப்பந்தத்தைக் கைவிட்டு,  36 விமானங்களை வாங்குவதற்கு ஒரு புதிய ஒப்பந்தத்தைப் பேசி முடித்தார். பழைய ஒப்பந்தத்தின்படி 126 விமானங்களின் விலை 90 ஆயிரம் கோடி ரூபாய். இதன்படி ஒரு விமானத்தின் விலை 714 கோடி ரூபாய். மோடியின் புதிய ஒப்பந்தத்தின்படி 36 விமானங்களுக்கான விலை 58 ஆயிரம் கோடி, ஒரு விமானத்தின் விலை 1611 கோடி ரூபாய்.
சந்தை விலையைவிடக் குறைவான விலைக்கு 2ஜி அலைக்கற்றைகளை விற்றது காங்கிரசு கூட்டணி அரசு. சந்தை விலையைவிடக் கூடுதல் விலைக்குப் போர் விமானங்களை வாங்குகிறது மோடி அரசு. முன்னது ஊழல் என்றால், பின்னது..? அப்படி யாரும் விமரிசிக்கக் கூடாதென்ற முன்னெச்சரிக்கையோடு, “இந்தப் பேரத்தைக் கேள்விக்குள்ளாக்குவது, நாட்டின் பாதுகாப்பைக் கேள்விக்குள்ளாக்குவதற்கு ஒப்பானது” என ஒரே போடாகப் போட்டுவிட்டார், பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன். மாமிக்கு வாய்த்த இந்த வாய்த்திறமை, ஆ.ராசாவுக்கு இல்லாமல் போய்விட்டது.
விலை போகாத சரக்கை அதிக விலை கொடுத்து வாங்கியதோடு மட்டும் இந்தப் புதிய பேரம் நின்றுவிடவில்லை. பழைய ஒப்பந்தப்படி, பொதுத்துறை நிறுவனமான இந்துஸ்தான் ஏரோனாடிக்சுடன் இணைந்து 108 விமானங்களைத் தயாரிக்கவும், அந்நிறுவனத்துக்கு தொழில்நுட்பங்களை மாற்றிக் கொடுக்கவும் இசைந்திருந்த தஸ்ஸால்ட், இப்பொழுது, தனது தொழில்நுட்பங்களை இந்திய நிறுவனங்களுக்கு மாற்றித் தர முடியாதென்றும், இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் தயாரிக்கும் விமானங்களில் கோளாறுகளோ, விபத்துக்களோ ஏற்பட்டால், அதற்குத் தஸ்ஸால்ட் நிறுவனம் பொறுப்பேற்றுக் கொள்ளாது என்றும் புதுப்புது நிபந்தனைகளை விதித்து வருகிறது.
இந்திய பிரதமர் நரேந்திரமோடி மற்றும் பிரான்சு அதிபர் ஃபிரான்கோயிஸ் ஹாலண்டே இடையே ரபேல் பேர ஒப்பந்தத்தை மாற்றியமைப்பது தொடர்பாக பாரீஸ் நகரில் நடந்த பேச்சுவார்த்தை.(கோப்புப் படம்)
இந்த ஒப்பந்தம் வியாபாரமின்றிக் காத்துவாங்கி வரும் தஸ்ஸால்ட் நிறுவனத்திற்கு மட்டுமின்றி, உள்ளூர் தரகு முதலாளிகளுக்கும் அடித்திருக்கும் பம்பர் பரிசாகும். காங்கிரசு ஆட்சியில் தஸ்ஸால்ட் நிறுவனத்துடனான ஒப்பந்தம் கையெழுத்தானவுடனேயே, முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனமும், அனில் அம்பானியின் அனில் திருபாய் அம்பானி குழுமமும் தஸ்ஸால்ட் நிறுவனத்துடன் உதிரி பாகங்களைத் தயாரிக்கும் ஒப்பந்தங்களைச் செய்து கொண்டன.
நரேந்திர மோடி காங்கிரசு அரசு போட்ட ஒப்பந்தத்தைக் கைவிட்டாலும், அம்பானிகளைக் கைவிடவில்லை. தஸ்ஸால்டுடன் புதிய ஒப்பந்தத்தைப் பேசி முடிப்பதற்கு மோடி பாரீஸ் சென்றபோது, அம்பானியையும் கையோடு அழைத்துச் சென்றார். இப்புதிய ஒப்பந்தப்படி, அம்பானியின் நிறுவனங்களுக்கு 22,000 கோடி ரூபாய் பெறுமான உதிரி பாகங்களைத் தயாரிக்கும் ஆர்டர்கள் கிடைக்கும் எனக் கூறப்படுகிறது. கடனில் தத்தளித்துக் கொண்டிருக்கும் அம்பானிகளுக்கு, மோடி படைத்திருக்கும் கறி விருந்து இது.
அரசுத் துறை கொள்முதல்களில் வழக்கமாக பின்பற்றப்படும் டெண்டர் விதிமுறைகளின் படி, விற்பனைக்கான உத்தேச கோரிக்கையின் (Request for Proposal – RFP) அடிப்படையில் விலை, விற்பனைப் பொருளின் இறுதிக் கட்டமைப்பு (configuration), பொருட்களின் எண்ணிக்கை, அளவு ஆகியவற்றை ஒப்பந்தம் கையெழுத்தான பின் மாற்றக்கூடாது. இவற்றுள் ஏதாவது ஒன்றை மாற்றினாலும், புதிதாக டெண்டர் விடவேண்டும். இந்த விதியைக் கடாசிவிட்டு புதிய ஒப்பந்தத்தைச் செய்து கொண்டிருக்கிறார், மோடி. தஸ்ஸால்ட் நிறுவனமோ முந்தைய ஒப்பந்தத்தில் தான் ஒப்புக்கொண்ட  நிபந்தனைகளை நிறைவேற்ற மறுத்துவருகிறது.
அலைக்கற்றை விற்பனையில் ஏல நடைமுறையை மீறினார் என்பது ஆ.ராசாவின் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு. யோக்கியர் மோடி டெண்டர் விதிமுறைகளை மீறி, தஸ்ஸால்ட் நிறுவனத்திடமிருந்து அதிக விலை கொடுத்துப் போர் விமானங்களை வாங்கும் ஒப்பந்தம் போட்டுக் கொண்டிருக்கிறார். அம்பிகளுக்கு அது ஊழலாம், இது தேசத் தொண்டாம்!
***
தஸ்ஸால்ட் நிறுவனத்தோடு கூட்டுத் தயாரிப்பு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ள அம்பானி சகோதரர்கள்.
இந்திய இராணுவத்திற்கு 126 விமானங்கள் வாங்குவதற்குக் கையெழுத்தான ஒப்பந்தத்தை மோடி கைவிட்டதற்குக் காரணம் சுவாரசியமானது. அம்பானிகளின் நிறுவனங்கள் தஸ்ஸால்ட் நிறுவனத்துடன் கூட்டுச் சேர்ந்திருப்பதைப் போல, டாடா குழுமம் எப்.16 இரக போர் விமானங்களைத் தயாரிக்கும் அமெரிக்காவைச் சேர்ந்த லாக்ஹீட் மார்டின் நிறுவனத்துடனும், அதானி குழுமம் கிரிப்பென் ரக போர் விமானங்களைத் தயாரிக்கும் இன்னொரு அமெரிக்க நிறுவனமான சாப் உடனும் கூட்டுத் தயாரிப்பு ஒப்பந்தங்களைச் செய்து கொண்டுள்ளன. தஸ்ஸால்ட் நிறுவனத்திடம் 126-க்குப் பதிலாக  36 போர் விமானங்களை வாங்குவதற்கு ஒப்பந்தம் செய்திருக்கும் மோடி அரசு, மீதி விமானங்களை டாடாவும் அதானியும் கூட்டுச் சேர்ந்துள்ள அமெரிக்க நிறுவனங்களிலிருந்து வாங்கும் முடிவை எடுத்திருக்கிறது.  அவ்விரு நிறுவனங்களுக்குப் புதிய போர் விமானங்களை வாங்குவதற்கான தகவல் கோரும் ஆவணங்களை (RFI – Request for Information) அனுப்பி வைத்துள்ளது இந்திய அரசு.
ஆக, விமானப் படைக்குத் தேவையான 126 விமானங்களை பிரான்சு மற்றும் அமெரிக்க கம்பெனிகளுக்கும்; அம்பானி, அதானி மற்றும் டாடா குழுமங்களுக்கும் பங்கு வைத்திருக்கிறார் மோடி. வேறு தரகு முதலாளிகள் யாரேனும் தேசப் பாதுகாப்பில் தங்களுடைய பங்களிப்பைச் செலுத்த விரும்புவார்களாயின், அவர்களுக்குரிய பங்கையும் வழங்குவதன் மூலம் தனது ஜனநாயக மாண்பினை அவர் நிரூபிப்பார்.
2ஜி அலைக்கற்றையைத் தனக்கு வேண்டப்பட்ட உப்புமா கம்பெனிகளுக்கு ஆ.ராசா தூக்கிக் கொடுத்தார் என்பது அவ்வழக்கில் ஒரு குற்றச்சாட்டு. 126 போர் விமானங்களை வாங்குவதற்கு காங்கிரசு அரசு சர்வதேச டெண்டர் கோரியபோது, அதில் கலந்துகொண்ட மேற்படி இரு அமெரிக்க நிறுவனங்களும் தகுதியற்றவை என நிராகரிக்கப்பட்டன. அப்படி நிராகரிக்கப்பட்ட நிறுவனங்களிடமிருந்து மோடி அரசு போர் விமானங்களை வாங்க முயற்சிக்கிறது. பனை மரத்தடியின் கீழ் உட்கார்ந்துகொண்டு மோடி பாலைத்தான் அருந்துகிறார் என நம்புவோமாக!
***
ரபேல் பேரத்தில் நடந்துள்ள முறைகேடுகள், விலை உயர்வு ஆகியவற்றை நியாயப்படுத்த மோடி பக்தர்கள் அடுக்கும் வாதங்களனைத்தும் எருமை ஏரோப்பிளேன் ஓட்டிய ரகத்தைச் சேர்ந்தவை. இந்தியாவுக்கு தொழிநுட்பங்களை மாற்றித் தர தஸ்ஸால்ட் மறுப்பதைப் பற்றிக் கேட்டால், இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம் கூட்டு ஒப்பந்தம் செய்து கொள்ளத் தகுதியற்றது என்று தஸ்ஸால்ட் முடிவு செய்தால் நாம் என்ன செய்ய முடியும் என்கிறார்கள். விமானத் தயாரிப்பில் அனுபவம் வாய்ந்த அப்பொதுத்துறை நிறுவனத்தைப் புறக்கணித்து விட்டு, எந்த முன்னனுபவமும் இல்லாத அம்பானியோடு மட்டும் எதனடிப்படையில் தஸ்ஸால்ட் ஒப்பந்தம் மேற்கொண்டது என்ற கேள்விக்குப் பதில் இல்லை.
பழைய ஒப்பந்தப்படி நமக்குக் கிடைக்கவிருந்த விமானங்கள் அடிப்படை மாடல்கள் எனவும், தற்போது வாங்க முடிவு செய்துள்ள விமானங்களில் கூடுதல் ஆயுதங்கள் பொருத்தும் வசதியிருப்பதால், விலை அதிகம் என்கிறார்கள். துப்பாக்கியைவிடத் தோட்டாக்களுக்கு அதிக விலை என்கிற மோசடியான தர்க்கத்துக்கு ஒரேயொரு உதாரணத்தை மட்டும் பார்க்கலாம். விமானத்தில் பொருத்தப்படவுள்ள மெட்டியார் இரக ஏவுகணையின் சந்தை விலையே 12.6 கோடிதான். அதே போல் H.D.M.S. எனப்படும் ஹெல்மெட்டில் பொருத்தப்படும் வழிகாட்டும் அமைப்பின் விலை 2.4 கோடி. இவ்வாறு தனித்தனியே விமானத்தில் பொருத்தப்பட உள்ளதாகச் சொல்லப்படும் ஆயுதங்களின் சந்தை விலையைக் கூட்டினால், ஒரு விமானத்திற்கு 60 கோடி அதிகரிக்கலாம். ஆனால், தற்போது ஊதிப் பெருக்கப்பட்டுள்ள விலையோ 100 சதவீதத்துக்கும் அதிகம்
அமெரிக்க நிறுவனங்களோடு கூட்டுத் தயாரிப்பு ஒப்பந்தத்தை செய்து கொண்டுள்ள அதானி(இடது) மற்றும் ரத்தன் டாடா
அடுத்து, மோடி வாங்கவுள்ள விமானம் இந்தியாவுக்கென்றே பிரத்யேகமாக தயாரிக்கப்படுவதால் விலை அதிகமாவதைத் தவிர்க்க முடியாது என்கிறார்கள். ஆனால், 2012ம் ஆண்டின் டெண்டர் கோரும் ஆவணங்களிலேயே விமானங்கள் இந்திய நிலைமைகளுக்கு ஏற்ப இருக்க வேண்டும் என்கிற விதி உள்ளது. அந்த நிபந்தனைகளை ஏற்றுக் கொண்டுதான் 126 விமானங்களுக்கான பழைய விலையை தஸ்ஸால்ட் நிர்ணயித்தது. மேலும், விமான ஓட்டிகளுக்கான பயிற்சி, பயிற்சிக் கையேடு, விமானத்திற்கான தர உத்திரவாதம் என அனைத்துமே பழைய டெண்டர் ஆவணங்களில் நிபந்தனையாகச் சேர்க்கப்பட்டு, அவற்றையும்  கணக்கில்கொண்டுதான் தஸ்ஸால்ட் நிறுவனம் விலையை நிர்ணயித்தது.
ராஜீவ் காந்தி ஆட்சியின்போது போபர்ஸ் நிறுவனத்திடமிருந்து பீரங்கி வாங்கியதில் நடந்த ஊழலை நியாயப்படுத்துவதற்கு, அந்தப் பீரங்கிதான் கார்கில் போரில் பாகிஸ்தான் படைகளைத் தோற்கடிக்கப் பயன்பட்டது என்றொரு வாதம் இப்பொழுது காங்கிரசு அடிவருடிகளால் முன்வைக்கப்படுகிறது. மோடி, தனது ஆட்சியில் சந்தி சிரிக்கும் இந்த போர் விமான பேர ஊழலை நியாயப்படுத்த, ஓர் அதிரடிப் போரை நடத்தவும்கூடும். ஊழல், முறைகேடுகளை நியாயப்படுத்த தேசபக்தியைவிட வேறு சிறந்த கவசம் எதுவும் கிடையாது என்பதைப் பார்ப்பன பாசிசக் கும்பலுக்கு யாரும் சொல்லிக் கொடுக்க வேண்டியதில்லை.
–     சாக்கியன்

வியாழன், 14 டிசம்பர், 2017

ஆர்.கே.நகர்ல் இரண்டு பா.ஜ.க. வேட்பாளர்கள்

                                                                                                                                        - ரா.குமாரவேல் ,
ர்.கே.நகர் இடைத்தேர்தலில் பா.ஜ.க. இரண்டு வேட்பாளர்களைக் களத்தில் இறக்கிவிட்டிருக்கிறது. ஒருவர் பா.ஜ.க.வைச் சேர்ந்த கரு.நாகராஜன். மற்றொருவர், அ.தி.மு.க. என்ற பெயரில் உள்ள தமிழக பா.ஜ.க.வின் பி டீமைச் சேர்ந்த மதுசூதனன்.
மதுசூதனன் பா.ஜ.க.வின் ஆசிபெற்ற வேட்பாளர் மட்டுமல்ல, இந்தியத் தேர்தல் ஆணையத்தின் ஆசிபெற்ற வேட்பாளரும்கூட. இரட்டை இலைச் சின்னத்தை ஓ.பி.எஸ். – இ.பி.எஸ். அணிக்கு ஒதுக்கிய கையோடு, ஆர்.கே. நகர் இடைத்தேர்தலுக்கு நாளும் குறித்த அதனின் வேகத்தைக் கொண்டே இதனை யாரும் புரிந்துகொள்ளலாம்.
கடந்த சில ஆண்டுகளாகவே தேர்தல் ஆணைய அதிகாரிகள் அ.தி.மு.க.வின் பூத் ஏஜெண்டுகளைப் போலத்தான் செயல்பட்டு வருகிறார்கள். குறிப்பாக, திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலுக்கான வேட்புமனு படிவங்களில், அ.தி.மு.க.வின் பொதுச் செயலர் ஜெயா வைத்ததாகக் கூறப்படும் கைநாட்டை, இந்திய தலைமைத் தேர்தல் ஆணையத்திலிருந்து வந்த கட்டளைப்படி, எவ்வித ஆய்வுக்கும் உட்படுத்தாமல் ஏற்றுக்கொண்டோம் என ஒப்புதல் வாக்குமூலமே அளித்திருக்கிறார், தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி.
ஏப்ரலில் நடைபெறவிருந்த ஆர்.கே.நகர் இடைத்தேர்தலைத் தேர்தல் ஆணையம் ரத்து செய்ததற்கு பணப் பட்டுவாடாவா காரணம்? அதுவொரு சாக்கு, அவ்வளவே. அத்தேர்தலில் பா.ஜ.க.வின் ஆசிபெற்ற மிக்சர் பன்னீர் அணி வெற்றிபெற முடியாது என்று தெரிந்தவுடன், அத்தேர்தலை ரத்து செய்வதற்கு டெல்லி சுல்தான் மோடிக்கு ஒரு காரணம் தேவைப்பட்டது. அதையொட்டி சுகாதாரத் துறை அமைச்சர் விஜய பாஸ்கர் வீட்டில் ரெய்டு நடத்தப்பட்டது. அந்த ரெய்டில் கண்டுபிடிக்கப்பட்ட பணப்பட்டுவாடா விவகாரத்தைக் காரணமாக வைத்து அத்தேர்தலை ரத்து செய்தது, தேர்தல் ஆணையம். அந்த விவகாரத்தில் வருமான வரித்துறை மற்றும் தேர்தல் ஆணையத்தால் குற்றஞ்சுமத்தப்பட்ட விஜய பாஸ்கர், எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட அனைவரும் இப்பொழுது மோடியின் பாதாரவிந்தங்களில் சரணடைந்து, அவரது அனுக்கிரஹத்தைப் பெற்றுவிட்டதால், அந்த வழக்கைத் தேர்தல் ஆணையமும் அமலாக்கத் துறையும் மறந்தேவிட்டன.
ஆர்.கே. நகர் தொகுதியில் இன்னும் 5,000 போலி வாக்காளர்களை நீக்காமல் இருப்பதாகத் தேர்தல் ஆணையத்தின் மீது தி.மு.க. தொடுத்துள்ள வழக்கும், நடிகர் விஷாலின் வேட்பு மனுவைப் பின்னிரவு நேரத்தில் தள்ளுபடி செய்திருக்கும் தேர்தல் ஆணையத்தின் சதியும் அ.தி.மு.க. மதுசூதனனை ஜெயிக்க வைக்க மத்திய பா.ஜ.க. அரசும் தேர்தல் ஆணையமும் எந்த எல்லை வரையும் செல்லக்கூடும் என்பதை எடுத்துக்காட்டிவிட்டன.
இரட்டை இலைச் சின்னத்தை ஓ.பி.எஸ்.-இ.பி.எஸ். அணிக்கு ஒதுக்கி தீர்ப்பளித்துள்ள தேர்தல் ஆணையம், அத்தீர்ப்பில் அந்த அணிக்கு 111 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு இருப்பதாகக் குறிப்பிட்டிருக்கிறது. தமிழகத்தைச் சட்டவிரோதமான முறையில் ஒரு சிறுபான்மை அரசு ஆண்டு வருவதை ஒப்புக்கொண்டுள்ள வாக்குமூலம் இது. இந்தச் சட்டவிரோத ஆட்சியை எப்படியாவது காப்பாற்றிக் கரை சேர்ப்பதற்கு துக்ளக் குருமூர்த்தியின் தலைமையிலான தமிழகப் பார்ப்பனக் கும்பலும், மோடி அரசும் பலவிதமான முறைகேடுகளையும் அதிகார அத்துமீறல்களையும் நடத்தி வருகிறார்கள்.
தமிழகச் சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்திட அடாவடித்தனமாக மறுத்துவருகிறார், கவர்னர். இதோடு தொடர்புடைய மூன்று வழக்குகளை விசாரித்துவரும் சென்னை உயர்நீதி மன்றம் வாய்தாவுக்கு மேல் வாய்தா கொடுத்தே எடப்பாடி அரசைக் காப்பாற்றி வருகிறது. தினகரன் பக்கமுள்ள எம்.எல்.ஏ.க்களை எடப்பாடி பக்கம் இழுத்துவிடும் நோக்கத்தோடு, சசிகலா குடும்பத்தினர் மீது ரெய்டு நடவடிக்கைகள் அடுத்தடுத்து ஏவப்படுகின்றன.
ஜெயாவின் பினாமிதான் சசி குடும்பம் என்ற உண்மை சொத்துக்குவிப்பு வழக்கில் அளிக்கப்பட்டுள்ள தீர்ப்புகளின் வழியே உறுதி செய்யப்பட்டிருக்கிறது. ஆனால், ஆர்.எஸ்.எஸ். குருமூர்த்தியோ, “மன்னார்குடியின் சொத்துக்குவிப்புக்கு ஜெயலலிதா உடந்தை என்கிற அடிப்படையில்தான்  நீதிபதி குன்ஹா ஜெயலலிதாவுக்குத் தண்டனை கொடுத்தார். ஜெயலலிதா தன் பெயரில் தனக்குச் சொத்து சேர்த்தார் என்பதற்காக அல்ல” எனக் கூசாமல் புளுகி வருகிறார். (துக்ளக், 22.11.2017) இந்தப் புரட்டின் மூலம் கொள்ளைக்காரி ஜெயாவை அப்பாவியாகக் காட்டிவிட முயலுகிறார், அவர்.
இது மட்டுமா, ஜெயாவின் கலெக்சன் ஏஜெண்டுகளாகக் காலந்தள்ளிய பன்னீரையும், எடப்பாடியையும் உத்தமர்களாகக் காட்டும் நோக்கில், “எடப்பாடியும் ஓ.பி.எஸ்-ம் முயன்று அ.தி.மு.க. அரசில் நடக்கும் ஊழலைப் பெருமளவு குறைத்தால்தான் சின்னத்தால் அ.தி.மு.க.வுக்குப் பலன் கிடைக்கும்” என்றும்  உபதேசம் செய்கிறார். (துக்ளக், 06.12.2017)
ஜெயா உயிரோடு இருந்த காலத்திலேயே அ.தி.மு.க.வின் ஐவரணி என அழைக்கப்பட்ட பன்னீர், எடப்பாடி உள்ளிட்ட கும்பல்  மட்டும் ஏறத்தாழ 30,000 கோடி ரூபாய் வரை கொள்ளையடித்திருக்கக்கூடும் என அப்பொழுதே செய்திகள் வெளியாகின. ஐவரணியில் ஒருவராக இருந்த வைத்திலிங்கம்,  பன்னீரின் கூட்டாளி சேகர் ரெட்டி, சேகர் ரெட்டியின் கூட்டாளி முன்னாள் தலைமைச் செயலர் ராம மோகனராவ், ஐவரணியின் பினாமியாகச் செயல்பட்ட கரூர் அன்புநாதன் உள்ளிட்டுப் பலரின் வீடுகளில் ரெய்டுகள் நடத்தப்பட்டன.
இவை அனைத்திற்கும் மேலாக, எடப்பாடியின் அரசே, தலைக்கு இத்துணை கோடி என கூவத்தூர் ரிசார்டில் பேரம் பேசப்பட்டு உருவாக்கப்பட்ட அரசுதான். முதலமைச்சரான எடப்பாடி மீதே பணப் பட்டுவாடா குற்றத்தைச் சுமத்தியிருக்கிறது, வருமான வரித்துறை. இதுதான் கடைசி ஆட்டம் என்பதால் முடிந்தவரை கொள்ளையிடுவது என்பதைக் கொள்கையாகவே கொண்டு செயல்படுகிறது, இந்த அரசு. புதிதாக 70 மணல் குவாரிகள் திறக்கப்படும் என்ற அறிவிப்பு, எடப்பாடி அரசு எந்த அளவிற்குத் தமிழகத்தை மொட்டையடிக்கும் வெறியோடு செயல்படுகிறது என்பதை எடுத்துக் காட்டுகிறது.
திட்டத்தில் ஊழல் என்பது போய் ஊழலுக்காகவே திட்டம் என்பதை நிலைநாட்டியவர் ஜெயா. அம்மா வழியில் செல்வதாகக் கூறிவரும் எடப்பாடி அரசு அதில் புதிய வரலாறையே படைத்துவருகிறது. 1,000 கோடி ரூபாய் தார் ஊழல், 400 கோடி ரூபாய் குடிமராமத்து ஊழல், 39 கோடி ரூபாய் குட்கா ஊழல், 350 கோடி ரூபாய் சென்னை மாநகராட்சி சாலை மேம்பாட்டு ஊழல், வாக்கி டாக்கி கொள்முதல் ஊழல், சத்துணவுப் பணியாளர், சிறப்பு மருத்துவர்கள் நியமனத்தில் நடந்துள்ள முறைகேடுகள், நெடுஞ்சாலை துறையில் அயல்பணி ஒப்படைப்பில் நடந்துள்ள ஊழல் எனத் தினந்தோறும் ஒரு ஊழல் அம்பலமாகி, வெட்க மானம் ஏதுமற்ற ஒரு பிடுங்கித்தின்னி கும்பலிடம்  தமிழகம் சிக்கியிருப்பது தெரிய வருகிறது.
எடப்பாடி-பன்னீர் கொள்ளையர்களிடம் தமிழகத்தை அவுட் சோர்ஸ் செய்திருக்கிறது, மத்திய பா.ஜ.க. அரசு. சசிகலா இல்லாத அ.தி.மு.க.தான் நாட்டுக்கும் தமிழகத்துக்கும் நல்லது என இந்த அசிங்கத்திற்குக் கூச்சமேயின்றிப் பட்டுக்குஞ்சம் கட்டுகிறார், குருமூர்த்தி.
எம்.ஜி.ஆர்., அவருக்குப் பின் ஜெயாவின் வழியாகத் திராவிட அரசியலை வீழ்த்தித் தமிழகத்தை மீண்டும் பார்ப்பன ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவர முயன்றுவந்த தமிழகத்துப் பார்ப்பனக் கும்பல், தற்போதைய தமிழகத்தின் அரசியல் சூழ்நிலையை அருமையானதொரு வாய்ப்பாகக் கருதுகிறது. எடப்பாடி-பன்னீர் கும்பலைத் தமது கைக்குள் வைத்துக் கொள்வதன் மூலம் தமிழகத்தில் பா.ஜ.க.வின் மறைமுக ஆட்சியை நடத்துவது மட்டுமின்றி, அ.தி.மு.க.வின் முதுகில் சவாரி செய்வதன் மூலம் பா.ஜ.க.விற்குத் தமிழகத்தில் ஒரு அடித்தளத்தை உருவாக்கிக் கொள்வது என்ற இரட்டை நோக்கத்தை ஈடேற்றிக் கொள்ள முயன்று வருகிறது, அக்கும்பல்.
இந்தக் கூட்டணி தமிழர்களின் சுயமரியாதைக்கு விடப்பட்டுள்ள சவால். இந்தக் கும்பலை ஆர்.கே. நகர் தொகுதியிலிருந்து மட்டுமல்ல, தமிழகத்திலிருந்தே விரட்டியடிப்பதன் மூலம்தான் தமிழகத்தில் நடந்துவரும் அரசியல் அட்டூழியங்களுக்கும் அராஜகங்களுக்கும் முடிவு கட்ட முடியும்.
                                                                                                                            நன்றி:புதிய ஜனநாயகம்            

புதன், 6 டிசம்பர், 2017

25 ஆண்டுகள் நிறைவு


மத நல்லிணக்கம் இடிப்பு -
.

1. நூற்றாண்டுப் புகைச்சல்
பாபரின் ஆணைப்படி அயோத்தியின் கவர்னர் மீர் பகியால் 1528-ல் பாபர் மசூதி கட்டப்பட்டதாக அங்கு பதிக்கப்பட்டுள்ள கல்வெட்டுகள் கூறுகின்றன. அதற்கு அடுத்த ஆண்டே அங்கு இந்து - முஸ்லிம் உரசல்கள் தொடங்கின. ஒருவகையில் இது பல நூற்றாண்டுப் புகைச்சல்!
               

2. வேலி வைத்த பிரிட்டிஷ் அரசு
பிரிட்டிஷ் நிர்வாக அதிகாரிகள் 1859-ல் மசூதியின் உள்ளே முஸ்லிம்கள் வழிபாடு நடத்தவும் வெளியே இந்துக்கள் வழிபாடு நடத்தவும் அனுமதித்தனர். இரண்டு பகுதிகளுக்கும் இடையே வேலி அமைத்தனர்.
3. அனுமதி மறுத்தது நீதிமன்றம்
ராமருக்குக் கோயில் கட்ட அனுமதிக்க வேண்டும் என்று மஹந்த் ரகுபீர் தாஸ் என்பவர் தொடுத்த வழக்கை 1885-ல் தள்ளுபடிசெய்தது பைஸாபாத் மாவட்ட நீதிமன்றம்.
4. மூடப்பட்டது பள்ளிவாசல்
1949 டிசம்பர் 22-ல் பாபர் மசூதியின் உள்ளே ராமர் சிலைகள் வைக்கப்பட்டன. அதற்கு அடுத்த நாளே இதையே காரணமாக்கி, மாவட்ட நீதிபதி கே.கே.நாயர் அந்த இடத்தைச் சர்ச்சைக்குரியதாக அறிவித்துப் பள்ளிவாசலை மூடச் சொல்லி உத்தரவிட்டார்.
5. சிலை வழிபாட்டுக்கு அனுமதியில்லை
1950, ஜனவரி 18-ல் கோபால் சிங் விஷாரத் என்பவர் ராமர் சிலைகளை வழிபட அனுமதிக்குமாறு நீதிமன்றத்தை நாடினார். நீதிமன்றம் அனுமதி மறுத்தது.
6. ராமருக்குக் கோயில்?
சர்ச்சைக்குரிய அந்த இடத்தில் ராமருக்குக் கோயில் கட்டப்போவதாக விஸ்வ இந்து பரிஷத் 1984-ல் அறிவித்தது.
7. இந்துக்களின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டார் நீதிபதி
1986-ல் பூட்டிக் கிடந்த இடத்தைத் திறந்துவிட வேண்டும், அங்கு வழிபாடு நடத்த அனுமதிக்க வேண்டும் என்ற இந்துக்களின் கோரிக்கையை மாவட்ட நீதிபதி ஏற்றுக்கொண்டார். அதற்கு எதிர்வினையாக, முஸ்லிம்கள், பாபர் மசூதி நடவடிக்கைக் குழுவைத் தொடங்கினார்கள்.
8. தேர்தல் அஸ்திரம்
சர்ச்சைக்குரிய அந்த இடத்துக்கு அருகே ராமர் கோயில் கட்டுவதற்காக விஸ்வ இந்து பரிஷத் 1989-ல் அடிக்கல் நாட்டியது. அந்த ஆண்டு நடந்த உ.பி. தேர்தலில் பாஜக பாபர் மசூதி பிரச்சினையைக் கையிலெடுக்கிறது.
9. தொடங்கியது ரத யாத்திரை
1990 செப்டம்பரில் பாஜக தலைவர் எல்.கே.அத்வானி நாடு தழுவிய அளவில் ரத யாத்திரையை மீண்டும் தொடங்கினார்.
10. ஒத்திகை
1990-ல் மசூதியின் சில பகுதிகள் சேதப்படுத்தப்பட்டன. அப்போதைய பிரதமர் சந்திரசேகர் மேற்கொண்ட சமரச முயற்சிகள் தோல்வியடைந்தன.
11. கையில் வந்தது அதிகாரம்
1991-ல் உத்தர பிரதேசத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தது. பாபர் மசூதி விவகாரம் கொதிநிலையை அடைந்தது.
12. தகர்ந்தது மத நல்லிணக்கம்
பாஜக, விஸ்வ இந்து பரிஷத், சிவசேனா எனப் பல அமைப்புகள் பாபர் மசூதி விவகாரத்தில் ஒன்றுசேர்ந்தன. 1992 டிசம்பர் 6-ல் பாபர் மசூதி இடிக்கப்பட்டது. அதையொட்டி நடந்த கலவரங்களில் 2000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

13. விசாரணைக் குழு
மசூதி இடிப்பு தொடர்பாக விசாரிக்க 1992 டிசம்பர் 16-ல் ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி எம்.எஸ்.லிபர்ஹான் தலைமையிலான ஆணையத்தை அமைத்தது நரசிம்ம ராவ் அரசு.
14. தடைபட்டது குற்ற வழக்கு
மசூதி இடிப்பு வழக்கு விசாரணையை லக்னோ நகர சிறப்பு நீதிமன்றம் விசாரிக்க வேண்டும் என்று தன்னைக் கலந்தாலோசிக்காமல் உத்தர பிரதேச மாநில அரசு வெளியிட்ட அறிவிப்பாணையைச் செல்லாது என்று 2001 பிப்ரவரி 12-ல் அலகாபாத் உயர் நீதிமன்றம் அறிவித்தது.
15. தூண்டிவிட்டால் குற்றம் இல்லை?
2001 மே 4-ல், உயர் நீதிமன்றத்தின் லக்னோ அமர்வு, இந்த வழக்கு விசாரணையிலிருந்து அத்வானி மற்றும் அவருடன் சேர்ந்த ஏழு பேர் உட்பட மொத்தம் 21 பேரை விலக்கி, கலவரத்தில் ஈடுபட்டவர்கள் மீதான விசாரணையை மட்டும் தொடரலாம் என்றது.
16. கிடப்பில் போடப்பட்ட விசாரணை
2001 ஜூன் 16-ல், உயர் நீதிமன்றத்தைக் கலந்தாலோசித்து விசாரணைக்கான ஆணையைப் பிறப்பிக்கும்படி, உத்தர பிரதேச அரசை சிபிஐ கேட்டுக்கொண்டது. ஒன்றே கால் ஆண்டு காத்திருப்புக்குப் பிறகு, மாநில அரசு இதை 2002 செப்டம்பர் 28-ல் நிராகரித்தது. 2010 மே 22-ல் இந்த உத்தரவுக்கு எதிராக சிபிஐ தாக்கல் செய்த மறுபரிசீலனை கோரும் மனு, அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் 9 ஆண்டுகள் விசாரிக்கப்படாமலேயே இருந்து, பின்னர் நிராகரிக்கப்பட்டது. இந்த உத்தரவை எதிர்த்து சிபிஐ நீண்ட காலத் தாமதத்துக்குப் பிறகு உச்ச நீதிமன்றத்திடம் மேல்முறையீடு செய்தது. இந்த மனுவைப் பரிசீலிக்க உச்ச நீதிமன்றமும் கணிசமான காலத்தை எடுத்துக்கொண்டது.
17. தீவிரவாதத் தாக்குதல்
2003 ஆகஸ்ட்டில், சர்ச்சைக்குரிய இடத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினார்கள். பாதுகாப்புப் படையினர் நடத்திய பதில் தாக்குதலில் ஐந்து பேர் கொல்லப்பட்டனர்.

18. நீதிமன்ற இழுபறி
பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது, அங்கு கூடியிருந்தவர்களைத் தூண்டிவிடும் வகையில் எல்.கே.அத்வானி பேசியதற்காகத் தொடரப்பட்ட வழக்கிலிருந்து 2003 செப்.19-ல் அவரை ரேபரேலி தனி நீதிமன்றம் விடுவித்தது. அப்போது அவர் துணை பிரதமர். அத்வானியை விடுவித்து ரேபரேலி நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை, 2005 ஜூலை 6-ல் அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி ரத்துசெய்தார்.
19. திட்டமிட்டு நடந்த செயல்
எம்.எஸ்.லிபர்ஹான் குழு, 16 ஆண்டுகளுக்குப் பிறகு, மொத்தம் 399 அமர்வுகளுக்குப் பின்னர், பிரதமர் மன்மோகன் சிங்கிடம் 1,029 பக்கங்கள் கொண்ட அறிக்கையை ஜூன் 30, 2009-ல் அளித்தது. அவ்வறிக்கையின்படி, பாபர் மசூதி இடிக்கப்பட்டது தன்னிச்சையானது அல்ல, திட்டமிடப்பட்டதே என்று தெளிவானது. வாஜ்பாய், அத்வானி, சுதர்ஸன், கல்யாண் சிங், முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி உள்ளிட்ட 68 பேர் குற்றவாளிகள் எனவும் அந்தக் குழுவின் அறிக்கை சுட்டிக்காட்டியது.
20. மூவருக்கும் ஒரு பங்கு
சர்ச்சைக்குரிய இடம் யாருக்கு உரிமையுள்ளது என்று 60 ஆண்டுகள் நடந்த வழக்கில் 2010, செப்டம்பர் 30-ல் இடத்தை மூன்றாகப் பிரித்து முஸ்லிம்கள், இந்துக்கள், நிர்மோகி அகாரா ஆகிய மூன்று பிரிவினருக்கும் ஒவ்வொரு பகுதியைப் பிரித்து வழங்க உத்தரவிட்டது அலகாபாத் உயர் நீதிமன்றம். முன்பு, மசூதியாக இருந்த பகுதி இந்துக்களின் வசம் ஒப்படைக்கப்பட்டது.
21. தீர்ப்புக்குத் தடை
உயர் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து இந்து மற்றும் முஸ்லிம் அமைப்புகள் செய்த மேல்முறையீட்டின்படி 2010-ம் ஆண்டின் உயர் நீதிமன்றத் தீர்ப்புக்குத் தடை விதித்து 2011-ல் உத்தரவிட்டது உச்ச நீதிமன்றம்.
22. தொடரும் சர்ச்சை
2015, சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோயில் கட்டுவோம் என்று விஸ்வ இந்து பரிஷத் அறிவித்து நாடு தழுவிய அளவில் பிரச்சாரத்தைத் தொடங்கியது. டிசம்பர் மாதத்தில், இரண்டு டிரக்குகளில் செங்கல் ஏற்றப்பட்ட வாகனம் அங்கு சென்றது. ராமஜென்ம பூமி அறக்கட்டளை நிர்வாகியான மகந்த் நிருத்திய கோபால் தாஸ், ராமர் கோயில் கட்ட பிரதமர் நரேந்திர மோடி சம்மதம் தெரிவித்துள்ளதாகக் கூறினார். ஆனால், அகிலேஷ் யாதவ் தலைமையிலான உத்தர பிரதேச அரசு, கல் ஏற்றப்பட்ட வாகனங்கள் சர்ச்சைக்குரிய இடத்தில் நுழைவதற்கு அனுமதிக்கவில்லை.
23. அத்வானியின் அரசியலுக்கு முற்றுப்புள்ளி
2017 மார்ச் 6-ல் நீதிபதிகள் பி.சி.கோஷ், நாரிமன் அடங்கிய அமர்வுக்கு முன்பு பாபர் மசூதி இடிப்பு வழக்கு விசாரணைக்கு வந்தது. அத்வானிக்கு எதிரான வழக்கைக் கைவிடக் கூடாது, தொடர்ந்து நடத்த வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுக்குப் பிறகு, இந்த வழக்கு வேகம் எடுத்துள்ளது. அத்வானி குடியரசுத் தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்த வழக்கு மீண்டும் விரைவுபடுத்தப்பட்டதால் அதோடு அத்வானியின் அரசியல் கனவுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.
24. பேச்சுவார்த்தையில் முடித்துக்கொள்ளுங்கள்...
2017 மார்ச் 21, பாபர் மசூதி விவகாரம் தரப்பினர்களிடையே எளிதில் பிரச்சினைகளை ஏற்படுத்திவிடக்கூடிய ஒரு விஷயம். எனவே, நீதிமன்றத்துக்கு வெளியே பேச்சுவார்த்தையின் மூலமாக சமரசத் தீர்வு காண வேண்டும் என்று அறிவுறுத்தியது உச்ச நீதிமன்றம். ஆகஸ்ட் 11 அன்று கூடிய உச்ச நீதிமன்ற அமர்வு, விசாரணையை 2017, டிசம்பர் 5-க்குத் தள்ளிவைத்தது.
25. இரண்டு ஆண்டுகளுக்குள் முடியுமா?
2017, ஏப்ரல் 19-ல் பாபர் மசூதி இடிப்பு வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், “அறிவிப்பாணை குறைபாட்டைச் சரிசெய்ய மாநில அரசு தவறிவிட்டது, அதை எதிர்த்து சிபிஐயும் வழக்காடவில்லை” என்பதைச் சுட்டிக்காட்டியது. அத்வானி மற்றும் ஏழு பேர் மீதான வழக்கை ரேபரேலியிலிருந்து லக்னோ நீதிமன்றத்துக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளதோடு, இரண்டாண்டு காலத்துக்குள் விசாரணையை முடிக்க வேண்டும் என்றும் இறுதிக்கெடு விதித்துள்ளது.
                                                                                                                                                                   - தொகுப்பு: செல்வ புவியரசன்
ன்றி:தமிழ் இந்து 
          பாஜக,அதிமுகவினருக்கும்  இடதுசாரிகளுக்கும் உள்ள நிர்வாக வித்தியாசம் இதுதான்.

சனி, 2 டிசம்பர், 2017

புது தில்லி இந்திய அரசின் தலைநகர் மட்டுமல்ல,

வன்முறைகளின் தலைநகரும் கூட!
டொனால்ட் ட்ரம்பின் மகளோடு ஹைதராபாத்தில் நடந்த பெண் தொழில் முனைவர்களுக்கான மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். அங்கே அரபு, ஆசிய நாடுகளின் பெண் தொழில் முனைவோர் பற்றிய பல்வேறு பில்டப்புகள் பல்வேறு அரண்மனை – நட்சத்திர விடுதிகளில் பெரும் ஆடம்பரத்துடன் நடைபெற்றன.
உண்மையில் இந்தியாவில் பெண்களின் நிலை என்ன என்பதை கீழ்க்கண்ட புள்ளிவிவரம் தெரிவிக்கின்றது. இந்த விவரம் திருவாளர் மோடி அவர்கள் குடிகொண்டிருக்கும் புதுதில்லிதான் மிகப்பெரும் குற்ற நகரம் என்பதை நிரூபிக்கின்றது.
இந்திரப்பிரஸ்தமாக இருந்த காலம் தொட்டு தில்லியை முகலாயர்கள்தான் அதிகம் ஆண்டார்கள் என பாஜக சங்கிகள் இந்த வன்முறை சாதனையிலிருந்து தப்பித்துக் கொள்ள நினைக்கலாம். ஆனால் 47-க்கு பின்னர் தில்லியில் பல தேர்தல்களில் தொடர்ந்து வெற்றி பெற்ற கட்சிகளில் பாஜகவும் ஒன்று. இன்று ஆம் ஆத்மியே அங்கே ஆண்டாலும் பாஜகதான் சமூக அளவில் வலைப்பின்னல் கொண்ட கட்சியாகும். ஆகவே தில்லியின் வன்முறைப் பாவத்தில் இருந்து தங்களுக்கு விலக்கு கொடுக்குமாறு ஒரு ஆர்.எஸ்.எஸ் நபர் கேட்கவே முடியாது. இது போக தில்லி காவல்துறை மத்திய அரசின் கட்டுப்பாட்டில்தான் வருகிறது.
இருபது இலட்சத்திற்கு மேல் மக்கள் வாழும் 20 இந்திய நகரங்களில் தில்லிதான் கொலை, வன்புணர்ச்சி, கடத்தல் உள்ளிட்ட வன்முறைகளில் முதலிடத்தில் இருக்கிறது. நவம்பர் 30 2017 அன்று 2016-ம் ஆண்டிற்கான தேசிய குற்றப் புள்ளிவிவரம் வெளியிடப்பட்ட போது தில்லியின் இந்த சாதனை இடம் தெரிய வந்தது.
டெல்லியில் ஒரு இலட்சம் மக்கள் தொகைக்கு சுமார் 1,222 வன்முறைகள் நடக்கின்றன. இந்த குற்றங்கள் அனைத்தும் இந்திய குற்றப் பிரிவு சட்டத்தின் கீழ் வரும் குற்றங்களாகும். தில்லிக்கு அடுத்தபடியாக கொச்சியில் ஒரு இலட்சம் பேருக்கு 757 வன்முறைகளும், ஜெய்ப்பூரில் 756 வன்முறைகளும் நடப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவின் 19 பெரு நகர குற்றங்கள் அனைத்தையும் எடுத்துக் கொண்டால் தில்லியின் பங்கு அதில் 39% ஆகும். அதற்கு அடுத்தபடியாக பெங்களூரு நகரம் 9%, மும்பை 8% பங்குகளையும் குற்றக் கணக்கில் கொண்டிருக்கின்றன. இந்திய குற்றப் பிரிவு சட்டங்களின்படியான குற்றங்கள் 2014-ம் ஆண்டில் 1,39,707 எண்ணிக்கையில் இருந்து 2016-ம் ஆண்டில் 1,99,445 அளவுக்கு உயர்ந்து விட்டன. இந்த வளர்ச்சியின் விகிதம் 43% ஆகும்.
2016-ம் ஆண்டில் 19 பெருநகரங்களில் நடந்த கொலைகளின் எண்ணிக்கை 2,194 ஆகும். இதில் தில்லியின் எண்ணிக்கை மட்டும் 479 ஆகும். அதாவது ஒரு இலட்சம் மக்கள் எண்ணிக்கையில் கிட்டத்தட்ட மூன்று பேர் கொல்லப்படுகிறார்கள். பீகாரின் தலைநகரம் பாட்னாவில் 2016-ம் ஆண்டில் 195 கொலைகள் நடந்து இரண்டாம் இடத்தை பெற்றிருக்கின்றது. பீகாரில் பாஜக ஆதரவோடு திருவாளர் நிதீஷ் குமார் ஆட்சி நடப்பது குறிப்பிடத்தக்கது.
ஆளைக் கடத்தி பிணையத் தொகை கேட்கும் குற்றத்தை எடுத்துக் கொண்டால் 2014-ம் ஆண்டை விட 30% கூடுதலாக பெருநகரங்களில் நடந்திருக்கின்றது. சென்ற ஆண்டில் நடந்த மொத்த 11,589 ஆட்கடத்தல் குற்றங்களில் தில்லியில் மட்டும் 5,925 சம்பவங்கள் நடந்திருக்கின்றன. அதன்படி தினசரி 16 ஆட்கடத்தல் குற்றம் தில்லியில் நடக்கிறது. இதற்கு அடுத்த படியாக மும்பையில் 1,949 சம்பவங்களும், பெங்களூருவில் 974 சம்பவங்களும் நடந்திருக்கின்றன. பாட்னாவில் ஒரு இலட்சம் மக்கள் தொகையில் கிட்டத்தட்ட 40 ஆட்கடத்தல் சம்பவங்கள் நடந்திருக்கின்றன.
பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தில்லியில் மட்டும் 13,803 எண்ணிக்கையில் நடந்திருக்கின்றன. அதாவது தினசரி 38 குற்றங்கள் நடக்கின்றன. தில்லிக்கு அடுத்த படியாக மும்பையில் 5,128 குற்றங்கள் பெண்களுக்கு எதிராக நடந்திருக்கின்றன. பெண்களுக்கு எதிரான குற்றங்களின் தேசிய சராசரி ஒரு லட்சம் பேருக்கு 77.2 என்றால் தில்லியில் மட்டும் அது 182 ஆக இருக்கிறது.
தேச அளவில் 2014-ம் ஆண்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 38,385 நடந்தன என்றால் 2016-ம் ஆண்டில் 9% உயர்ந்து 41,761 ஆக பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.
கணவன் மற்றும் அவனது உறவினர்களால் நடக்கும் தாக்குதல்கள், சித்திரவதைகளே பெண்களுக்கு எதிரான வன்முறைகளில் கிட்டத்தட்ட 29% அளவில் முதல் இடத்தை பிடித்திருகிறது. அதற்கு அடுத்தபடியாக பெண என்பதற்காக நடக்கும் தாக்குதல்கள் 25%, கடத்தல் 22%, வன்புணர்ச்சி 12% என்பதாக பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.
படம்: indiaspend.com
தில்லியில் கணவன் – உறவினர்களால் நடக்கும் தாக்குதல்கள் 3,645 என்றால், ஹைதராபாத்தில் 1311, ஜெய்ப்பூரில் 1008 ஆகவும் இருக்கின்றன. தேசிய அளவில் ஒரு இலட்சம் பெண்களில் 22.6 பேருக்கு வன்முறைகள் நடக்கிறது என்றால் ஜெய்ப்பூரில் மட்டும் எழுபது பேருக்கு நடக்கிறது. இந்த இடங்களில்தான் பத்மாவதி திரைப்படத்தின் மூலம் ராஜபுத்ர பெண்களை இழிவு படுத்துவதாக பாஜக தலைமையில் போராட்டம் நடக்கின்றது.
சென்ற 2016-ம் ஆண்டில் 19 பெருநகரங்களில் நடந்த வன்புணர்ச்சி குற்றத்தை எடுத்துக் கொண்டால் தில்லியில் மட்டும் 1,996 நடந்திருக்கின்றன. அதாவது தினசரி அங்கே 5 பெண்கள் ரேப் செய்யப்படுகின்றனர். தேசிய அளவில் ஒரு இலட்சம் பெண்களில் 9.1 பேர்களுக்கு ரேப் நடக்கிறது என்றால் தில்லியில் மட்டும் 26.3, ஜெய்ப்பூரில் 22.8, இந்தூரில் 17.2 ரேப்புகளும் நடக்கின்றன. இந்த இலட்சணத்தில் ராஜஸ்தானை ஆள்வது பாஜக-வின் ஒரு பெண் முதல்வர்.
தில்லியில் மட்டும் 144 வரதட்சணை கொலைகள் பதிவாகியிருக்கின்றன. ஒரு இலட்சம் பெண்களில் கிட்டத்தட்ட இரண்டு பெண்கள் கொல்லப்படுகிறார்கள். பாட்னாவில் வரதட்சணை குற்றங்களின் விகிதம் ஒரு இலட்சம் பேருக்கு 7.9, கான்பூரில் 3.7, லக்னோவில் 3 ஆகவும் இருக்கின்றன. உ.பியில் ஆதித்யநாத்தின் தலைமையில் இந்துமதவெறியர்கள் ஆள்வது குறிப்பிடத்தக்கது.
சென்ற ஆண்டில் 19 பெருநகரங்களில் இந்திய குற்றவியல் சட்டப்படி பதிவான 5,15,635 குற்றங்கள் போக பல்வேறு சிறப்பு சட்டங்கள், உள்ளூர் சட்டங்கள் மூலம் பதிவான வன்முறைகள் 2,95,002 ஆகும். இச்சட்டங்களின் படி மோட்டார் வாகனச் சட்டம், நில வருவாய்ச் சட்டம், கந்து வட்டி சட்டம் போன்றவற்றிலும்  பெண்களும் குழந்தைகளும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இவற்றை கூட்டினால் மொத்தம் 8,08,637 குற்றங்கள் நடந்திருக்கின்றன.
ஒட்டு மொத்த குற்றங்களையும் எடுத்துக் கொண்டால் கொச்சியில் ஒரு இலட்சம் பேருக்கு 2,553.1, நாக்பூரில் 1714.6, சென்னையில் 1308.6, தில்லியில் 1263.9, சூரத்தில் 1,243.3 என பதிவு செய்யப்பட்டிருக்கின்றது. கொச்சி எனும் மாநகரம் கேரள அடையாளத்தை இழந்து ஒரு மெட்ரோ நகரமாக மாறியிருக்கும் போது வன்முறையிலும் அதன் சுவடுகளை பதித்துச் செல்கிறது.
கூட்டிக் கழித்துப் பார்த்தால் மோடியின் ஆட்சியில் குற்றங்கள் கூடி அதன் மகுடமாக தில்லி இருக்கிறது.
நன்றி:வினவு,

.“ஷாக்கடிக்குது சோனா.. நீ நடந்து போனா.. !”

  டிக்-டாக்கால் வாழ்க்கை போச்சு மதுரை ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும், தல்லாகுளம் பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும் செல்ப...