வைகுண்ட பதவி...,
''சுல்தான் ஆஃப் பிட்டுமென்'' என அறியப்படும் ஹமிட்ரேஜா பக்கெரி டர்மானி கடன் பெறுவதற்காக போலி ஆவணம் தயாரித்தது நிரூபணமானதால் இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது.பிரபல இரானிய தொழிலதிபர் ஒருவர் லஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டில் குற்றவாளி என அறிவிக்கப்பட்டதால் தூக்கிலிடப்பட்டுள்ளார்.
பிட்டுமென் என்பது எண்ணெய் சார்ந்த ஒரு பொருள்.
ஆஸ்பால்ட் உருவாக்குவதற்கு இப்பொருள் பயன்படுத்தப்படுகிறது. பிட்டுமென் விற்பனை செய்வது இரானில் மிகவும் லாபகரமான ஒரு தொழில்.
சுமார் மூன்று லட்சம் பிடுமென் கொள்முதல் செய்வதற்காக அவர் போலியாக நிறுவனங்களின் பெயரில் ஆவணம் தயாரித்திருக்கிறார்.
இந்த ஆண்டுதுவக்கத்தில் ஊழல் தடுப்பு அமைப்பு உருவாக்கப்பட்டதிலிருந்து தூக்கிலடப்பட்ட மூன்றாவது தொழிலதிபரானார் 49 வயது டர்மானி.
கடந்த மாதம் உள்ளூர் சந்தையை தன்னுடைய ஆதாயத்திற்காக பயன்படுத்தி கொள்வதற்காக, இரண்டாயிரம் கிலோ தங்க நாணயங்களை பதுக்கி வைத்திருந்த குற்றச்சாட்டுக்காக ''தங்க நாணயங்களின் சுல்தான்'' தூக்கிலிடப்பட்டார்.
நீதித்துறையின் மிஜான் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியின்படி டர்மானி 'முறைகேடு, மோசடி மற்றும் லஞ்ச ஊழல்' மூலமாக சுமார் 100 மில்லியன் டாலர் அளவுக்கு பிடுமென் கொள்முதல் செய்திருக்கிறார்.
கடந்த 2014 ஆகஸ்ட் மாதம் கைது செய்யப்பட்டார்.
டர்மானி கொல்லப்பட்ட விதம் குறித்த செய்திகளை இரான் அரசு தொலைக்காட்சி, ஓரு ஆக்ஷன் படத்துக்கான இசைக்கோர்வையுடன் ஒளிபரப்பியது.
நாட்டின் தள்ளாடும் பொருளாதாரத்தை எப்படியெல்லாம் இவர்கள் சுரண்டுகிறார்கள், அவர்களை அரசு தண்டிப்பதில் எவ்வளவு தீவிரம் காட்டுகிறது என்பதை மக்களுக்கு எடுத்துச்சொல்ல செய்தியாளார்கள் அத்தொலைக்காட்சியில் மிகவும் ஆர்வம் காட்டினர்.
கடந்த ஆகஸ்ட் மாதம், புதிய புரட்சிகர நீதிமன்றமொன்று அமைக்கப்பட்டது.
ஊழல் வழக்குகளை வேகமாக விசாரித்து தீர்ப்பளித்து இதன் பணி.
அதன்படி டஜன்கணக்கான தொழிலதிபர்கள் மற்றும் வர்த்தகர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
வாழ்க்கைச் செலவு அதிகரித்தது மற்றும் லஞ்சம் தலைவிரித்தாடியது உணரப்பட்டதால் மக்களிடையே பெருங்கோபம் ஏற்பட்டநிலையில் இந்நீதிமன்றம் அமைக்கப்பட்டது.
இரானின் பொருளாதாரம் தடுமாற்றத்தில் உள்ளது.
அதற்கு பகுதியளவு காரணம் அமெரிக்கா இரான் மீது மீண்டும் பொருளாதாரத் தடை விதித்ததே.
இங்கும் இப்படிப்பட்ட நீதிமன்றம் அமைக்கப்பட்டால் பாதி தொழிலதிபர்கள் காணாமல் வைகுண்ட பதவிக்கு சென்றுவிடுவார்கள்.
ஹ்ம் ...இதற்கெல்லாம் இந்தியர்களுக்கு கொடுப்பினை வேண்டும்.
--------------------------------------------------------------------------------------------------------------
அம்பேலான திருநாவுக்கரசர்….
தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் திமுகவுக்கு எதிரான மனநிலையில்தான் செயல்படுவார் என பரவலாக ஒரு பேச்சு உளளது.
திமுக தலைமையைவிட தினகரனுடன் அவருக்கு நெருக்கம் அதிகம்.
கருணாநிதி சிலை திறப்பு விழாவிக்கு முன்பு வரை டி.டி.வி.தினகரன், கமல்ஹாசன் ஆகியோருடன் கூட்டணி வைக்க வேண்டும் என்பதே அவரின் நோக்கமாக இருந்தது.
இதையடுத்துதான் ராகுல் – கமல் சந்திப்புக்கு அவர் ஏறபாடு செய்தார்.
மேலும் தொடர்ந்து அமமுகவுன் கூட்டணி பேச்சு வார்த்தையை நடத்தி வந்தார்.
இதனால் அதிருப்தி அடைந்த ஸ்டாலின், இது குறித்து நேரடியாகவே ராகுலுடன் பேசி இருக்கிறார்.
அப்போதே திருநாவுக்கரசு மீது கடுப்பான ராகுல் அவரை தூக்க திட்டமட்டார்.
ஆனால் அப்போது பொறுமை காத்த ராகுல் காந்தி, தற்போது திருநாவுக்கரசரை தூக்க வேண்டும் என்ற திமுகவின் நெருக்கடிக்கு பணிந்துள்ளதாக கூறப்படுகிறது.
கருணாநிதி சிலை திறப்பு விழா முடிந்த கையோடு, திருநாவுக்கரசரை டெல்லிக்கு அழைத்த ராகுல் அவக்கு செம டோஸ் கொடுத்து ராஜினாமா கடிதத்தைப் பெற்றுக் கொண்டார்.
இதனால்
அதிர்ச்சி அடைந்த திருநாவுக்கரசர், ஸ்டாலினிடம் சரணடைந்துள்ளார்.
ஆனால்
திமுக தலைமையோ அவரை கொஞ்சம் கூட சட்டை செய்யவில்லை என்று கூறப்படுகிறது.
இந்நிலையில்தான்
ஓய்வு எடுப்பதாற்காக திருநாவுக்கரசர் தற்போது அமெரிக்கா சென்றுள்ளார்.
ஜனவரி மாத இறுதியில்தான் அவர் தமிழகம் திரும்ப உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதனிடையே திருநாவுக்கரசர் தமிழகம் திரும்புவதற்குள் அவரது பதவி
பறிக்கப்படும் என தெரிகிறது.
நீங்கள் அத்தனைப் பேரும் உத்தமர்தானா சொல்லுங்கள்?
கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பி ஓ.ராஜா ஐந்தே நாட்களில் மீண்டும் கட்சியில் சேர்க்கப்பட்டதன் பரபர பின்னணி தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
துணை முதல்வரும், அதிமுக ஒருங்கிணைப்பளருமான ஓபிஎஸின் தம்பி ஓ.ராஜா கடந்த 19ம் தேதி கட்சியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டார்.
இதனால், அதிருப்தியடைந்த ஓ.ராஜா டி.டி.வி.தினகரன் அணியில் சேரப்போவதாக ஒரு தரப்பும், அவர் திமுகவில் இணைய உள்ளதாக சில தரப்பினரும் கிளப்பி விட, அதிமுகவுக்கு அல்லு கிளம்பி விட்டது.
அதிர்ச்சியான அதிமுக நிர்வாகிகள் சிலர் ஓ.ராஜாவை தொடர்பு கொண்டு விசாரித்திருக்கின்றனர்.
இந்த சந்தர்ப்பத்திற்காக காத்திருந்த ஓ.ராஜா தன்னிடமிருந்த ஒருசில ஆதாரங்கள் இருப்பதாகவும், தன்னை மீண்டும் கட்சியில் இணைத்துக் கொள்ளாவிட்டால் அதிமுக அமைச்சர்கள் சிலரது நிலைமை சிக்கலாகி விடும் என மிரட்ட ஆரம்பித்திருக்கிறார்.
நேரில் பேசிக் கொள்ளலாம் என அழைத்த நிர்வாகிகளை சந்தித்த ஓ.ராஜா தன்னை கட்சியை விட்டே நீக்க வேண்டுமென கொடிபிடித்த ஆர்.பி. உதயக்குமார், எடப்பாடி பழனிசாமியின் சொத்து விவரங்கள் அடங்கிய முழுவிபர பட்டியலையும் காட்டி அதிர வைத்திருக்கிறார்.
இதையெல்லாம் திமுக தலைமையிடம் கொடுத்தால் உங்கள் நிலைமை என்னவாகும்?
அதிமுகவிலுள்ள அத்தனை அமைச்சர்களும் கடந்த 2 ஆண்டுகளில் என்னென்ன ஊழல் செய்தார்கள் என்கிற விவரபங்களும் எனக்கு அத்துபடி.
இதைத்தான் திமுகவினர் என்னிடமிருந்து எதிர்பார்க்கிறார்கள்.
இதைக்கொடுத்தால் போதும். அமைச்சர்கள் சிறைக்குப்போய்விடுவார்கள் என மிரட்டி இருக்கிறார்.
இந்தத் தகவலை கேட்ட எடப்பாடி அதிர்ந்து போனாராம்.
உடனே ஓபிஎஸை அழைத்த அவர், நான் கொடுத்த அழுத்தத்தால்தான் நீங்கள் உங்கள் தம்பியைக் கட்சியை விட்டு நீக்க சம்மதித்தீர்கள்.
இது நமக்கு ஆபத்தாக முடியப் போகிறது என எடப்பாடி சொன்னதையடுத்து இருவரும் ஓ.ராஜாவை கட்சியில் சேர்க்க முடிவெடுத்திருக்கிறார்கள்.
அடுத்தபடியாக தமிழ்நாடு கூட்டுறவு, பால்வள சேர்மன் பதவியும் ஓபிஎஸ் தம்பி ராஜாவுக்கே அளிக்கப்படும் என்கிற உறுதியும் அவருக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இதனை அடுத்தே நேரடியாகவும், கடிதம் மூலமும் மன்னிப்பு கேட்டதால் ஓ.ராஜாவை 5 நாட்களில் மீண்டும் கட்சியில் சேர்த்திருக்கிறார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக