தந்தை பெரியார் யார் ?? அவர் என்ன அவ்வளவு பெரிய அப்பாடக்கரா என நக்கலாய் பேசுபவர்களுக்காகவும், வெறும் கடவுள் மறுப்பு மட்டுமே பெரியாரின் கொள்கை என்று சொல்லுபவர்களுகாகவும் சில தகவல்கள்..........
1. தான் வகித்த 29 பதவிகளை துறந்து பதவிகள் ஏதுமின்றி 60 ஆண்டுகளுக்கு மேலாய், தனது 94 ஆம் வயதுவரை மக்கள் பணியில் ஈடுபட்டவர்.
2. செல்வக் குடும்பத்தில் பிறந்தும் (1900 ஆம் ஆண்டுகளிலேயே சுமார் 25 கோடிகளுக்கு பெரியார் அதிபதி) சமூகத்தின் அடித்தட்டு மக்களின் துயரங்களை சிந்தித்து அதற்காய் தன் ஆயுளை செலவிட்டு இறுதியில் தன் சொத்துக்களை மக்களுக்கே விட்டுச் சென்றவர்.
3. மக்கள் செல்வாக்கு இருந்தும் தன் இயக்கத்தை அரசியல் கட்சியாய் மாற்றாதவர், அரசியலில் இல்லாமலேயே மக்கள் பணி செய்தவர். தனது வாழ்நாளில் ஏறக்குறைய 8200 நாட்கள் சுற்றுபயணம் செய்து சுமார் 11,000 நிகழ்ச்சி/கூட்டங்களில் கலந்துகொண்டு பேசியவர். முதிர்ந்த வயதிலும், சிறுநீரக பாதிப்பால், மூத்திர வாளியை கையோடு பிடித்துகொண்டு சுற்றுபயணம் செய்து கூட்டங்களில் பேசியவர்.
4. அக்காலத்திலேயே விதவை மறுமணத்தை ஆதரித்தவர், பெண் கல்வியை வலியுறுத்தியவர், பெண்களுக்கு சொத்துரிமை அளிக்கவேண்டும் என்று சொன்னவர்.
5. மனிதன் அனைவரும் சமம் அவனுக்குள் மேல் ஜாதி கீழ் ஜாதி என்ற பிரிவினை இருக்கக் கூடாது என ஜாதியத்தை கடுமையாய் எதிர்த்தவர்.
6. ஜாதிகள் மதத்தினால் தான் தோன்றுகின்றன எனவே மதத்தை தூக்கி எறிந்தவர். அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகவேண்டும் என்று சொன்னவர்.
7. இல்லாத கடவுளையும் சாஸ்திரங்களையும் சம்பிரதாயங்களையும் சொல்லி, மதங்கள் மனிதர்களை மூடனாக்குகிறது என்பதை உரக்கச் சொன்னவர். அவர் வாழ்ந்த அந்த காலத்தில், மதத்தின் பெயரால், குறிப்பிட்ட சமூக மக்கள், பிற சமூக மக்களின் மீது செலுத்திய ஆதிக்கத்தை, மதத்தின் பெயரை சொல்லிக்கொண்டு அவர்கள் மட்டுமே அனுபவித்த சலுகைகளை, கண்டு கொதித்துதான் பெரியார் கடவுள் மறுப்பு கொள்கையை தீவிரமாக பேசினார்..
8. ஆடம்பரங்கள் இல்லாத எளிமையான பகுத்தறிவுவாதி, பல பத்திரிகைகளையும் இதழ்களையும் நடத்தியவர்.
9. மக்களுக்கு பிடித்தமான மதத்தை எதிர்த்து மக்களின் விரோதத்தை சம்பாதித்தவர், மக்களோடு ஒத்து ஊதி அரசியல் பண்ணத் தெரியாதவர். மக்களுக்கு பிடித்ததை செய்வதை விட தேவையானதை செய்ய முனைந்தவர்.
10. "பெரியார், புதிய உலகின் தொலை நோக்காளர், தென்கிழக்கு ஆசியாவின் சாக்ரட்டீஸ், சமூக சீர்திருத்த இயக்கத்தின் தந்தை, அறியாமை, மூடநம்பிக்கை, பொருளற்ற பழக்க வழக்கங்கள் மற்றும் கீழான நடவடிக்கைகளுக்கு கடும் எதிரி..." என்று ஐக்கிய நாடுகள் சபையின் யுனஸ்கோ அமைப்பால் பாராட்டப்பட்டவர்...
11. மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு என கர்ஜித்தவர். பக்தி வந்தால் புத்தி போய் விடும், புத்தி வந்தால் பக்தி போய் விடும் என தத்துவம் பேசியவர்.
12. தம் இயக்கத் தோழர்களை சாதி மறுப்பு - மத மறுப்பு - விதவை மறுமணம் செய்து கொள்ள ஆதரவளித்தவர்.
13. பெண்ணுரிமைப் போராளி, கணவனுக்கு இல்லாமல் மனைவிக்கு மட்டும் ஏன் தாலி எனக் கேட்டு ஆண் சமூகத்தை அதிரச் செய்தவர். பெண்களை அடிமைபடுத்தும் தேவதாசி முறையை ஒழிக்க அரும்பாடுபட்டவர். "பெண் ஏன் அடிமையானாள்?" என்ற புத்தகத்தை எழுதியவர் பெரியார்.
14. பெரியாரிடம் பலர் உங்கள் எல்லாக் கொள்கையும் பிடித்திருக்கிறது கடவுள் மறுப்பைத் தவிர என சொல்லிய போது, கை நல்லா இருக்கு கால் நல்லா இருக்கு மூக்கு முழி எல்லாமே நல்லா இருக்கு உயிர் மட்டும் தான் பிடிக்க வில்லை எனச் சொல்வது போல் இருக்கிறது நீங்கள் சொல்வது என பதிலளித்து அவர்களின் வாயை அடைத்தவர்.
15. நீ உணரும் பசியை நானும் உணர்கிறேன், அதனால் பசி இருக்கிறது என ஏற்றுக் கொள்கிறேன், ஆனால் நீ உணரும் கடவுளை என்னால் உணர முடியவில்லை அதனால் கடவுளை மறுக்கிறேன் என கடவுள் மறுப்புக்கு விளக்கம் சொன்னவர்.
16. தமிழ் எழுத்து சீர்திருத்தம் கொண்டுவந்தவர், பரணில் போடப்பட்டு, மறைக்கப்பட்டு இருந்த திருக்குறளை தொடர்ச்சியாக "திருக்குறள் மாநாடுகள்" நடத்தி, பொதுமக்களிடம் திருக்குறளை கொண்டு போய் சேர்த்தவர் தந்தை பெரியார். கர்நாடக இசை என்ற பெயரில் ஆதிக்கம் செலுத்திய தெலுங்கு & சம்ஸ்கிருத சங்கீதத்துக்கு எதிராக தமிழிசைக்கு மேடை அமைத்து ஆதரவளித்தவர் தந்தை பெரியார்.
17. ஹிந்தி மொழி திணிப்பை கடுமையாக எதிர்த்தவர்.. 1937 ஆம் ஆண்டில் அதற்காக பல போராட்டங்களை செய்து, சிறைக்கு சென்றவர். தமிழ்நாடு தமிழருக்கே என்று முழங்கியவர் தந்தை பெரியார்.
18. மதுவிலக்கு கொள்கையை ஆதரித்து, தனது சொந்த தோட்டத்தில், ஏக்கர் கணக்கில் இருந்த தென்னை மரங்களை வெட்டிசாய்த்தவர்.
19. வகுப்புவாரி உரிமையை வலியுறுத்தியவர். இந்தியா சுதந்திரம் அடைந்தவுடன், இடஒதுக்கீட்டிற்கு அரசியல் சட்ட ரீதியில் தடை வந்தபோது, கடுமையான போராட்டங்களை நடத்தி, இந்தியாவின் அரசியலமைப்பு சட்டத்தில், முதல் திருத்தத்தமாக, இடஒதுக்கீட்டிற்கு ஆதரவான சட்டத்தை கொண்டுவர வழிவகுத்தவர். அந்த சட்ட திருத்தத்தால் தான், இப்போது நடைமுறையில் உள்ள பிற்படுத்தப்பட்ட, மிக பிற்படுத்தப்பட்ட & OBCக்கான இடஒதுக்கீடு சட்டப்படி செல்லுபடியாகிறது..
20. இந்தியாவில் வெறும் 5% சதவீதம் மட்டும் உள்ள ஒரு குறிப்பிட்ட சமூக மக்கள், நாட்டின் 90% அரசு வேலைகளையும், படிப்புகளையும் ஆக்கிரமித்திருந்ததை மாற்ற, சமூக, கல்வி, வேலைவாய்ப்பில் புறகணிகப்பட்ட பெரும்பான்மையான, பிற்படுத்தப்பட்ட, மிக பிற்படுத்தப்பட்ட & தலித் மக்கள் தங்களின் உரிமையான இடஒதுக்கீட்டை சட்டப்படி பெற வழிவகுத்தவர் தந்தை பெரியார்..
தந்தை பெரியாரின் பொன்மொழிகள் சில...
1. மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு
2. பகுத்தறிவு என்பது மனிதனுக்கு உயிர்நாடி
3. மூடநம்பிக்கையும் குருட்டுப் பழக்கமும் சமூகத்தின் முதல் பகைவன்
4. விதியை நம்பி மதியை இழக்காதே.
5. மக்களின் ஒழுக்கத்தையும் மதியையும் கெடுப்பது மது.
6. மனிதப் பண்பை வளர்ப்பதே என் வாழ்நாள் பணி.
7. பிறருக்கு தொல்லை தராத வாழ்வே ஒழுக்க வாழ்வு.
8. பக்தி என்பது தனிச் சொத்து. ஒழுக்கம் என்பது பொது சொத்து.
9. பக்தி இல்லாவிட்டால் இழ்ப்பில்லை. ஒழுக்கம் இல்லாவிட்டால் பாழ்.
10. தீண்டாமை ஒழிய வேண்டுமானால், சாதி ஒழிய வேண்டும்
11. கல்வி அறிவும், சுயமரியாதை எண்ணமும், பகுத்தறிவுத் தன்மையுமே தாழ்ந்து கிடக்கும் மக்களை உயர்த்தும்.
12. பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கு அளவுக்கு மீறிய நாணயமும், கட்டுப்பாடும், உறுதியும், தியாக உணர்வும் வேண்டும்.
13. ஒரு நாடு சுபிட்சத்துடன் வாழ வேண்டுமானால், அந்நாட்டு மக்கள் ஒழுக்கமுள்ளவர்களாக இருத்தல் அவசியம்.
14. ஒழுக்கக் குறைவுக்கும் மூடநம்பிக்கைக்கும் எப்படிப்பட்ட கலையும் பயன்பட்டு விடக்கூடாது.
15. ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.
16. என்னைப் பொறுத்தமட்டில், நான் ஒழுக்கத்துடன் நடந்தால், உண்மையை ஒழிக்காமல் எதையும் நேர்மையுடன் கடைப்பிடித்தால், அதற்கு தனிசக்தி உண்டு என்பதை நம்புகிறவன்.
17. எனது சீர்திருத்தம் என்பதெல்லாம் பகுத்தறிவை கொண்டு ஆராச்சி செய்து, சரியென்று பட்டபடி நட என்பதேயாகும்.
18. மற்றவர்களிடம் பழகும் வித்த்தையும் ஒழுக்கத்தையும் சிறு வயதிலேயே நன்றாக ஒருவன் கற்றுக் கொண்டானானால் அவனே வாழ்க்கையில் பெரிய மனிதன் ஆவான்
19. வாழ்க்கை அவனவன் வாழ்வதற்கு என்று மட்டும் கருதக் கூடாது மற்றவர்கள் நலனுக்கும் என்று கருத வேண்டும்.
-- தந்தை பெரியார்
முகநூலில் Prakash JP
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
‘ஆன்மீக அரசியல்’ மூட்டை பூச்சியை ஆரம்பத்திலேயே நசுக்குவோம்
எம்.ஜி.ஆரை முன்னுறுத்தி தமிழகத்தைக் கொள்ளையடித்த கும்பல் மெல்ல ரஜினியின் பின் அணியாகுது.
பள்ளிக் கல்வியைத் தனியார் மயமாக்கி, உயர் கல்வியைச் சூதாட்டமாக்கியவர் புரட்சித்தலைவர். அவர் ஆட்சியில் M.L.A. வாக, மந்திரியாக இருந்தவர்களே மருத்துவம், பொறியியல் கல்வி வியாபாரிகளாக அவதாரம் எடுத்தார்கள்.
அதில் ஒருவர்தான் A.C. சண்முகம். அதை மிக முறைகேடாகக் கையாண்டவர்.
அவர் பல்கலைக்கழத்திற்கு அங்கீகாரம் இல்லை என்று தெரிந்தும் பல மாணவர் வாழ்க்கையைச் சீரழித்தவர்.
அவர் பல்கலைக்கழத்திற்கு அங்கீகாரம் இல்லை என்று தெரிந்தும் பல மாணவர் வாழ்க்கையைச் சீரழித்தவர்.
ஜெயலலிதா ஆட்சியில்தான், ஆக்கிரமித்த கட்டிடங்கள் இடித்துத் தள்ளப்பட்டது.
அந்தக் கல்வி யோக்கியர் கல்லூரியில் நின்று கொண்டு, இந்த ஆன்மீக யோக்கியர் கல்வியின் சிறப்புக் குறித்துப் பேசுகிறார்.
இவ்வளவு நாள் எம்.ஜி.ஆரின் சிறப்புகள், அவரோடான உறவுகள் குறித்துப் பேசாமல் இப்போது அள்ளிவிடுறார்.
சரி இருக்கட்டும். ‘வந்தவர்களுக்கெல்லாம் வாரிக் கொடுத்தார் புரட்சித் தலைவர்’ என்று அவர்களிடம் வாங்கியவர்கள் சொல்கிறார்கள்.
சரி இருக்கட்டும். ‘வந்தவர்களுக்கெல்லாம் வாரிக் கொடுத்தார் புரட்சித் தலைவர்’ என்று அவர்களிடம் வாங்கியவர்கள் சொல்கிறார்கள்.
நீங்க என்ன ரசிகர்களுக்குக் குடுத்தீங்க?
இந்த ஆன்மீகம் அரசியலுக்கு வந்த பிறகு சமீபத்தில், கன்னியாக்குமரி தமிழன் புயலால் சிதைந்து, சீரழிந்தபோதுகூட அதைக் குறித்து ஒரு வார்த்தையும் சொல்லாமல், கர்நாடக ராகவேந்திரா மடத்துக்கு 10 கோடியை கொடுத்துட்டு,
இங்க நம்மகிட்ட வந்து பதவி கேக்குறார். இளிச்சவாயன் நாமதானே?
இங்க நம்மகிட்ட வந்து பதவி கேக்குறார். இளிச்சவாயன் நாமதானே?
விரைவில் ஆன்மீகத்தோட சினிமாக்கள், கண்டிப்பா சட்டத்திற்குப் புறம்பா தமிழர்களைக் கொள்ளையடிக்கிற கட்டணத்தோடு வரும். அப்போ நாமளும் அதே ‘ஆன்மீக’ அரசியலையே கையாள்வோம்.
ஆன்மீகமே amount தானே.
இந்த ஆன்மீக மூட்டப் பூச்சியை நசுக்க அம்பேத்ரியம், பெரியாரியம், மார்ச்சியம் எல்லாம் தேவையில்லை. தமிழ் ராக்கர்ஸ் போதும்.
முகநூலில் Mathimaran V Mathi
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக