ஞாயிறு, 4 பிப்ரவரி, 2018

ஒரே காலத்தில் ....?

 இந்திய மக்களவை மற்றும் மாநில சட்டசபைகளுக்கு, ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வேண்டும் என்ற தங்கள் கோரிக்கையை  மீண்டும் பாஜக தலைமை துவங்கியுள்ள நிலையில், இதற்கான சாத்தியக்கூறுகள் மிகவும் குறைவாகவே உள்ளது என்பதை அவர்கள் கண்டு கொள்ளவில்லை.ஆர்.எஸ்.எஸ்,தாங்கள் இந்தியா முழுக்க ஊட்டிய மதவெறி கனன்று கொண்டிருக்கையிலேயே மோடி கையில் ஆட்சி இருக்கையிலேயே இந்தியா முழுக்க தேர்தல் நடத்தி இந்தியாவை இந்துத்துவா ஆக்க முயற்சிக்கிறது.


அதற்கு ஆட்சி அதிகாரத்தை பயன்படுத்த திட்டமிட்டுள்ளது.குடியரசுத்தலைவர்,துணை குடியரசுத்தலைவர்,ஆளுநர்கள்,தேர்தல் ஆணையம்,மற்றும் முக்கிய இடங்களில் உள்ள  அதிகாரிகள் ,என முழுக்க ஆர்.எஸ்.எஸ் பின்னணி உள்ளவ்ர்களையே பொறுப்பில் அமர்த்தி விட்டார் மோடி .
ஊடகங்கள் முழுக்க பொறுப்புகளில் பணம் கொடுத்தும்,மிரட்டியும் இந்துத்துவா பின்னணி கொண்டவர்களையே அமர்த்தியாகி விட்டாயிற்று.


தற்போது பாஜக,மோடி செல்வாக்கு இந்தியா முழுக்க கரைந்து போய் கொண்டிருக்கிறது.
மக்களுக்கு எதிரான ,பெரு முதலாளிகளுக்கு ஆதரவான ஆட்சி பாஜக ஆட்சி என்பதை மக்கள் உணர்ந்து வெறுக்கத்துவங்கி விட்டனர்.
இதைத்தான் குஜராத்,ராஜஸ்தான்,மேற்கு வங்கத் தேர்தல்கள் அண்மையில் காட்டியுள்ளது.
எனவே ஆர்.எஸ்.எஸ்.- மோடி கும்பல் கொஞ்சம் மரியாதை இருக்கையிலேயே விரைவாக மக்களவைக்கு முன்னதாகவே  தேர்தலை நடத்தி விட முயற்சிக்கிறது.
அதில் நிச்ச்யம் பாதக முடிவுகள் வரும் என்பதால் தேர்தல் ஆணையம் கையில் இருக்கையிலேயே இந்தியா முழுக்க மாநிலங்களில் ஒரே காலத்தில் தேர்தலை மக்களவைத்தேர்தலுடன் நட்ச்த்தி விட முயற்சிக்கிறது.

ஆனால் அப்படி நடத்துவது சரியாக அமையுமா?என்றால் அமையாது என்பதுடன்  மத்தியில் ஆளும், பா.ஜ., அரசு எதிர்பார்க்கும் சாதகங்களைவிட, பாதகங்களே அதிகம் இருக்கும் என்றும் நோக்கர்கள் எச்சரிக்கின்றனர்.
காரணத்தைப் பார்க்கலாம்.
நாடு சுதந்திரம் பெற்ற பின், 1952ல் இருந்து, 1967 வரை நடந்த, முதல், நான்கு பொதுத் தேர்தல்களின் போது, மாநில சட்டசபைகளுக்கும் சேர்த்துதான் ஒரே காலத்தில்  தேர்தல்கள்  நடத்தப்பட்டது. 
 ஆனால் சில ஆட்சிகள் கலைக்கப்பட்டது, ஆட்சி கவிழ்ந்தது என, பல்வேறு காரணங்களால், மாநிலங்களில் சட்ட சபை தேர்தல் நடப்பதில் மாற்றம் ஏற்பட்டது.


'லோக்சபா மற்றும் மாநில சட்டசபைகளுக்கு தனித்தனியாக தேர்தல் நடப்பதால், ஒவ்வொரு ஆண்டும் பல தேர்தல்களை அரசியல் கட்சிகள் சந்திக்க நேரிடுகிறது. '
இதனால், அரசுக்கும், கட்சிகளுக்கும் அதிக அளவில் செலவாவதுடன், வளர்ச்சி திட்டங்களில் ஈடுபடுவதில் பாதிப்பு ஏற்படுகிறது.'அதனால், லோக்சபா மற்றும் மாநில சட்டசபைகளுக்கு, ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது குறித்து ஆராய வேண்டும்' என பேசி, பிரதமர் நரேந்திர மோடி, இந்த பிரச்னைக்கு பிள்ளையார் சுழி போட்டார்.

இது குறித்து, மூன்று ஆண்டுகளில் பல முறை அவர் பேசியுள்ளார்.முன்னாள் ஜனாதிபதி, பிரணாப் முகர்ஜியும் இந்தக் கருத்தை ஆமோதித்தார். ஆர்.எஸ்.எஸ்., தலைவர்கள் சிலரும் இதை வலியுறுத்தினர்.இந்த நிலையில், பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் நாளில் உரையாற்றிய, ஜனாதிபதி, ராம்நாத் கோவிந்த்தை பேச வைத்தன்  மூலம் மீண்டும் இந்தக் கருத்தை புதுப்பித்துள்ளார். 
இது தொடர்பாக விவாதம் நடக்க வேண்டும் என்றும் சொல்லிவருகிறார்.

, இதுவரை, எந்தவொரு அரசியல் கட்சியோ, மாநில அரசோ கருத்து இது குறித்து ஏதும் கூறவில்லை. விவாதம் நடத்த யாரும் முன்வரவில்லை.பாஜக மட்டுமே இப்படி பேசிக்கொண்டிருக்கிறது.
. அதே நேரத்தில்,மத்திய அரசின், குறிப்பாக பிரதமர் மோடியின் இந்த கருத்து, அரசியல் விமர்சகர்கள், சட்டநிபுணர்கள் இடையே விவாதத்தை துவக்கியுள்ளது.

ஆனால், பெரும்பாலானோர், ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்கு தற்போதைய சூழ்நிலையில் வாய்ப்பில்லை என்றுதான் அனைவருமே  கருத்து தெரிவித்து உள்ளனர். 
தற்போதுள்ள தேர்தல் நடைமுறைகளில் மாற்றம் செய்வதில், பல சிக்கல்கள் உள்ளதாக கூறுகின்றனர்.

ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதால் பல சிக்கல்களை சந்திக்க நேரிடும். 
அரசியல் ரீதியாகவும், சட்ட ரீதியாகவும் இதில் பல பிரச்னைகள் உள்ளன. அரசியலமைப்பு சட்டத்திலும் மிகப் பெரிய அளவில் மாற்றங்கள் செய்ய வேண்டியிருக்கும். 

மேலும் மாநில அரசுகள், பிராந்திய கட்சிகளின் ஆதரவு கிடைப்பதற்கும் வாய்ப்பு குறைவே என, அவர்கள் எச்சரிக்கின்றனர்.

ஒரே நேரத்தில் லோக்சபா மற்றும் மாநில சட்டசபைகளுக்கு தேர்தல் நடத்துவதில் உள்ள சாதக, பாதகங்கள் குறித்து, அரசியல் ஆய்வாளர்கள் மற்றும் சட்டநிபுணர்கள் கூறியதாவது:
 ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வேண்டும் என்பதற்கு, வலுவான காரணங்கள் எதுவும் இல்லை.
 பணத்தை சேமிக்கலாம், அரசு சிறந்த நிர்வாகத்தில் ஈடுபடலாம் என்பது தான், மத்திய அரசின் வாதமாக உள்ளது. 
ஆனால், எவ்வளவு மிச்சமாகும் என்பதற்கான புள்ளி விபரம்யாரிடமும் இல்லை.தனித்தனியாக நடத்தினாலும் அவ்வளவுதான் செலவாகும்.
ஒவ்வொரு மாநிலத்துக்கும் தனித்தனி காட்சிகள்,சின்னங்கள் அச்சடித்துதான் ஆக வேண்டும்.பாதுகாப்பு ஏற்பாடுகளில் மிகப்பெரிய குளறுபடிதான் உண்டாகும்.

மோடி அரசு நிர்வாகம் பாதிக்கப்படுவதாகக்கூறுவதும் ஏற்புடையதாக இல்லை. 
பல மாநிலங்களில் தேர்தல் நடப்பதால், மத்தியில் ஆட்சியில் உள்ள கட்சி வேண்டுமானால் பாதிக்கப்படலாம்.மாநில உறுப்பினர்களுக்கு ஏற்ப மாநிலங்கவையில் ஆளும் கட்சிக்கு குறைவான பிரதிநித்துவம் கிடைக்கலாம்.

அதே நேரத்தில், சிறந்த நிர்வாகத்தை விட, மாநிலங்களில் ஆட்சியைப் பிடிப்பது தான் அரசியல் கட்சிகளின் நோக்கமாக இருப்பதால், இந்த வாதமும் எடுபடாது.

ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்கு ஆதரவாக உள்ள வாதங்களை விட, அதை எதிர்ப்பதற்கு உள்ள வாதங்கள்தான்  மிகவும் வலுவானக ,ஏற்புடையதாக உள்ளன. 

குறிப்பாக, ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதால், தேசிய பிரச்னைகள் மட்டுமே கவனிக்கப்படும்.மாநில  உள்ளூர் பிரச்னைகள் புறக்கணிக்கப்படும் அபாயம் உள்ளது.ஆனால் அதைத்தான் பாஜகவும் எதிர்பாக்கிறது.

மேலும், தற்போது, பல மாநிலங்களில், மாநில கட்சிகளின் ஆட்சி உள்ளதால், அவை, ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்கு முன் வர வேண்டும்.
ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்பட்டால், சில சட்டசபைகளின் காலம் முன்கூட்டியே முடிக்கப்படும், சில நீட்டிக்கப்பட வேண்டும். இதற்கும் மாநில அரசுகள் ஒப்புக் கொள்ள வேண்டும்.உதாரணமாக குஜராத் தேர்தல் நடந்துஆட்சி அமைக்கப்பட்ட  ஐந்து மாதங்களிலேயே அங்கும் பொதுத் தேர்தல் நடத்த்துவது மக்களாட்சி என்ற நிலைக்கும்,இந்திய இறையாண்மைக்கும் விரோதமானது.


மிகப்பெரிய ஜனநாயக நாடாக உள்ள நிலையில், அவ்வப்போது தேர்தல் நடப்பதால் தான், மக்களின் மனநிலையை மத்தியில் மற்றும் மாநிலத்தில் ஆளும் கட்சிகள் புரிந்து கொள்ள முடியும். தங்கள் செயல்பாடுகளை திருத்திக்கொள்ள முடியும்.
பணம் கொடுத்து வாக்கு வாங்குபவர்களுக்கு இந்த ஒரே நேரத்த தேர்தல் வரப்பிரசாதம்.ஒழிய மக்களுக்கு கேடானதாகவே அமையும்.

ஒரே காலத்தில் இந்தியா முழுக்க தேர்தல் என்பது பாஜக தனது செல்வாக்கு சரியும் நேரத்தில் இப்படி செய்து ஆட்சியை தக்க வைத்துக்கொள்வதுடன் பல மாநிலங்களில் தேர்தல் ஆணையத் துணையுடன் குஜராத் போல் ஆட்சியைப் பிடிக்கலாம் .
ஆனால் பெரும்பான்மையைப் பெற்ற ஒரே காரணத்தினால் சென்ற நான்கு ஆண்டுகளில் மோடி எடுத்த முக்கிய முடிவுகள் அனைத்தும் இந்தியாவை உலக அளவிலும் உள்ளூர் அளவிலும் தரம் தாழ்த்தித்தான் உள்ளது.

இந்த நான்கு ஆண்டுகளில் உலக அளவில் இந்தியா பல்வேறு பட்டியல்களில் தரம் தாழ்ந்து பின்னோக்கி நகர்ந்துள்ளது.
இந்தியாவில் ஏழைகள் பரம ஏழைகளாகவும்,நடுத்தர மக்கள் ஏழைகளாகவும் மாறியுள்ளனர்.ஆனால் பணக்காரர்கள் பண முதலைகளாக மாறியுள்ளனர்.
இதைத்தான் உலக பொருளாதார கண்காணிப்பு அமைப்பு "பாஜக ஆட்சிக்கு வந்த பின்னர் இந்தியாவில் ஏழை-பணக்காரர் இடைவெளி மலைக்கும்,மடுவுக்கும் உள்ள வித்தியாசமாக மாறியுள்ளது.'என்று குறிப்பிட்டுள்ளது.
பாஜக ஆதரவு மாநிலக்கட்சிகள் ஒவ்வொன்றாக விடை பெறும் காலம் வந்து விட்டது.
பீகாரில் பாஜக ஆதரவான பின்னர் நிதீஷ்குமார் அங்கு போகும் இடங்களில் எதிர்ப்பை கண்டு கலங்கி போயுள்ளார்.சந்திரபாபு கட்சி பாஜகவுடன் போர்த் துவக்கப் போவதாக அறிவித்துள்ளது.சிவசேனா உறவை முறித்துக்கொண்டே விட்டது.
கவிழும் டைட்டானிக்காவிட்டது பாஜக கூட்டணி.அரால்டைட் போட்டு ஒட்டவைக்க,ஓட்ட வைக்கப்பார்க்கிறது கேப்டன் மோடி குழு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

.“ஷாக்கடிக்குது சோனா.. நீ நடந்து போனா.. !”

  டிக்-டாக்கால் வாழ்க்கை போச்சு மதுரை ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும், தல்லாகுளம் பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும் செல்ப...