வெள்ளி, 26 ஜனவரி, 2018

சோடாபாட்டில் வீசுவோம்

ஆண்டாள் சர்ச்சை தொடர்பாக நாமக்கல்லில் பேசியுள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் கோயிலின் சடகோப ராமானுஜ ஜீயர் "தேவைப்பட்டால் நாங்களும் சோடாபாட்டில் வீசுவோம்" என ஆவேசமாக பேசியுள்ளார்.
வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய சடகோப ராமானுஜ ஜீயர், எங்களுக்கும் சோடா பாட்டில் வீசத் தெரியும்... எல்லாவற்றையும் வெளிப்படையாக சொல்லிவிடுவோம். ஆனால், நாம் அப்படி செய்யக்கூடாது. நாம் அறவழியில் போராட வேண்டும்" என்று பேசியுள்ளார்.
இப்போது சோடாபாட்டில் வீசுமளவு என்ன பிரசினை?
பிரசனையே நீங்களும் ஆண்டாளும்தான்.தினமணியும்,வைரமுத்துவும் வருத்தம் தெரிவித்ததுடன் அது தங்கள் சொந்த கருத்தல்ல.ஒரு ஆய்வுக்கட்டுரை ஆய்வு என்ற பின்னரும் ஆர்ப்பாட்டுகிறவர்கள் நீங்கள்தானே சுவாமி?
-----------------------------------------------------------------------------------------------------------------------------


தன்னுடைய வாழ்வில் வாழ்வின் உண்மையான ஹீரோக்களில் ஒருவராக போலியோவுக்கு சிகிச்சை அளிக்கும் டெல்லி மருத்துவர் மத்தேயு வர்க்கீஸை கருதுவதாக என்ற மைக்கிரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் தெரிவித்துள்ளார்.
போலியோவுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவ பிரிவை இந்தியாவில் இந்த மருத்துவர் மட்டுமே நடத்துவதாக தெரிகிறது.
------------------------------------------------------------------------------------------------------------------------------
தமிழ் நாட்டின் தலைநகரான சென்னையில் அண்ணாசாலைக்கு அருகில் மெட்ரோ ரயில் பணிகள் நடைபெறும் இடத்திற்கு அருகில் குழி விழுந்துள்ளது.
இதில் யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என்றும், உடைமைகள் சேதமடையவில்லை என்றும் தெரிவித்திருக்கும் இந்த செய்தித்தாள், மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது.


---------------------------------------------------------------------------------------------------------------------------------
இந்தியாவின் 69வது குடியரசு தின கொண்டாட்டத்தில் நடத்தப்பட்ட அணிவகுப்பு ராணுவ வலிமையை பறைசாற்றும் வகையில் அமைந்துள்ளது.
21 குண்டுகள் முழங்க மூவர்ண கொடி ஏற்றி வைத்த குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் முப்படைகளின் அணிவகுப்பை பார்வையிட்டர். 
இதில் பிரதமர் நரேந்திர மோடி, பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
10 ஆசியான் நாடுகளை சேர்ந்த தலைவர்கள் இந்த விழாவில் விருந்தினராக கலந்து கொண்டனர்.
----------------------------------------------------------------------------------------------------------------------------------
தமிழ் நாட்டில் அமைந்துள்ள கூடங்குளம் அணு மின் நிலையம் 22, 800 மில்லியன் யூனிட் மின் உற்பத்தி செய்து சாதனை படைத்துள்ளதாக அதன் இயக்குநர் பி.எஸ்.சௌத்திரி குடியரசு தினவிழாவில் கூறியுள்ளார் .
========================================================================================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

.“ஷாக்கடிக்குது சோனா.. நீ நடந்து போனா.. !”

  டிக்-டாக்கால் வாழ்க்கை போச்சு மதுரை ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும், தல்லாகுளம் பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும் செல்ப...