செவ்வாய், 10 அக்டோபர், 2017

நோஞ்சான்களின்( பாஞ்சாலி) சபதம்!


திருச்சியில் ஒரு மாநாடு கூட்டி
ரஜினிகாந்த்தின் அரசியல் வரவுக்கு வரவேற்பு வளையம் வைத்தார் தமிழருவி மணியன். அன்று அவர் பேசிய பேச்சு முழுவதையும் (மணி 12 நிமிடங்கள்) வலைத்தளத்தில் பொறுமையாகக் கேட்ட பிறகுஅதுகுறித்து எழுத வேண்டும் என்று தோன்றியது. அவருக்கெலாம் ஏன் இவ்வளவு  முதன்மை கொடுக்கின்றீர்கள் என்று சிலருக்குக் கேட்கத் தோன்றலாம். மணியன் என்னும் தனி மனிதரை எண்ணியோரஜினிகாந்த் என்னும் புகழ் பெற்ற கலைஞரை எண்ணியோ இந்தக் கட்டுரையை நான் எழுதவில்லை. மணியன் அவர்களின் பேச்சில் நான் உணர்ந்தமறைவான உள்நோக்கம் கொண்ட,  நுண்ணரசியலை எண்ணியே எழுதுகின்றேன்.


அவர் உரையை மூன்றாகப் பகுத்துக் கொள்ளலாம். ஒன்றுரஜினிகாந்தின் நேர்மை,அறிவுத் திறன் பற்றியது. இரண்டாவதுகடந்த 50 ஆண்டுகளாக மணியனின் நெஞ்சில் கிடக்கும் சபதம் பற்றியது. மூன்றாவதுவழக்கம்போல்தன்னைப் பற்றித் தானேநேர்மையானவன் என்றும்,அறிவாளி என்றும்  பெருமையாகக் கூறிக் கொண்டது!


ரஜினிகாந்த் ஒரு நல்ல நடிகர். நாம் பழகியதில்லை என்றாலும்நல்ல குணங்களும் உண்டு என்று கேள்விப்பட்டுள்ளோம். ஆனால் அரசியல் என்பது இவைகளை எல்லாம் தாண்டியது. அவரைப் பாராட்ட விரும்பும் மணியன்அளவு கடந்து அதனைச் செய்திருக்கிறார். ஓர் இடத்தில்திருவள்ளுவருக்கு மேலான அறிவாளி என்பதுபோல் குறிப்பிடுகின்றார். "வள்ளுவர் கூட ஒன்றே முக்கால் அடியில் கூறினார்சூப்பர் ஸ்டார் ரஜினியோ ஒரே வரியில், 'சிஸ்டம்  கெட்டுவிட்டதுஎன்று கூறிவிட்டார். அது அவரை என் நெஞ்சுக்கு நெருக்கமாக்கி விட்டது" என்கிறார். உண்மையிலேயே சிறந்த படிப்பாளியான மணியனுக்குஒருவரை அளவு கடந்தும்தகுதிக்கு மீறியும் பாராட்டுவது அநாகரிகம் என்பது புரிந்திருக்க வேண்டும். சிஸ்டம் கெட்டுவிட்டது என்று ஏற்கனவே பலர் கூறியுள்ளனர். மேலும் அந்த வரி அப்படியொன்றும் தத்துவச் செறிவு மிக்கதில்லை. 

ரஜினி மூன்று நோக்கங்களோடு வருவதாக மணியன் சொல்கிறார். நதிகளை இணைப்பது,ஊழலற்ற ஆட்சி தருவதுவெளிப்படையான நிர்வாகத்தைக் கொடுப்பது என்பவை அவர் நோக்கங்கள் என்கிறார். நல்லதுஇவற்றை இதுவரையில் சொல்லாதவர்கள்  யார்செய்தவர்கள் யார்ரஜினியாவது ஆள் வைத்துச் சொல்கிறார்மோடி நேரடியாகவே சொன்னாரே! இவையெல்லாம் மிக மேலோட்டமானவை என்பதும்பொத்தாம் பொதுவானவை என்பதும் அனைவருக்கும் தெரியும்!

அவர் பேச்சின் இரண்டாவது பகுதிதான் இன்றியமையாதது. ஒரு மணி நேரப் பேச்சின் ஒட்டுமொத்தச் சாரம்திமுக ஆட்சிக்கு வந்துவிடாமல் தடுத்துவிட வேண்டும் என்பதுதான். 'இரண்டு திராவிடக் கட்சிகளையும் வங்கக் கடலில் தூக்கி எறிய வேண்டும் என்கிறார். அதிமுகவைத் திமுகவுடன் சேர்த்துச் சேர்த்துச் சொல்வதுநீண்ட நாள்களாக இங்கு நடந்து வரும் ஏமாற்று வேலை. பெயருக்கு அவர்களையும் சேர்த்துக் கொள்வது. உண்மை நோக்கம்திமுகவை எதிர்ப்பதுதான்.  பிறகு ஏன் அதிமுகவைத் தாக்க வேண்டும்அப்படிச் செய்தால்தானே நடுநிலை வேடம் சரியாகப் பொருந்தும்!   

அவரே தன் பேச்சில் சொல்கிறார், "இனி அதிமுக வெற்றிபெற முடியாது. இப்போது தேர்தல் வைத்தால்ஸ்டாலின் வெற்றிபெற்று முதலமைச்சராகி விடுவார்." மேலும் சொல்கிறார் - "நான் யார் யாரையோ முன்னிறுத்தி  முயற்சி செய்தேன். வைகோவை முதலமைச்சராக்க வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் அவருக்கு சதவீத வாக்குகள் கூட இல்லை. பிறகு பல கட்சிகளை ஒருங்கிணைத்தேன். அவர்கள் எல்லோரும் சேர்ந்து 10 சதவீதம் வாக்குகளைக் கூடப் பெறவில்லை.காலம் கடைசியாக எனக்குக் காட்டிய கருணைதான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இனிமேல்ஸ்டாலின் முதலமைச்சர் பதவிக்கு வர முடியாது.  வெறும் இலவு காத்த கிளியாகத்தான் இறுதிவரை இருக்க வேண்டும்."

ரஜினியன்றுயார் வந்தாலும்,  தளபதி ஸ்டாலின் முதல்வர் ஆவதை இனி யாராலும் தடுக்க முடியாது என்பது ஒருபுறமிருக்கட்டும்மணியனுக்கு ஏன்திமுக மீதும்தளபதி மீதும் இவ்வளவு கோபம்சும்மா இருந்தவரை அழைத்துத் திட்டக்குழு உறுப்பினர் ஆக்கினாரே தலைவர் கலைஞர்,அதற்காகவாஓய்வு ஒழிவின்றித் தளபதி நாளும் உழைக்கின்றாரேஅதற்காகவா?

திராவிடம் என்பது ஆரியத்தின் எதிர்ச் சொல். ஆரியப் பார்ப்பன ஆதிக்கத்திற்கும்வருண-சாதி ஏற்றத்தாழ்விற்கும் எதிராகப் பாடுபட்ட இயக்கம் திராவிட இயக்கம். ஆதலால்அவர்கள்,திமுகவிற்கு எதிராக இருப்பதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் இப்போதுதிராவிட இயக்க எதிர்ப்பாளர்கள் பல்வேறு முகமூடிகளோடு வருகின்றனர். அவற்றுள் ஒன்றுதான்மணியனின் புதிய ரஜினி முகமூடி!

அவர் தன் உரையில்திமுகஅதிமுக இரண்டையும் சமப்படுத்த அரும்பாடு படுகின்றார். இன்றைய அமைச்சர்களின் ஊழல்சேகர் ரெட்டியிடம் கைப்பற்றப்பட்ட பணம்தங்கம் எல்லாவற்றையும் சொல்லிவிட்டு, 2ஜி ஊழல் என்று சொல்லி முடிக்கிறார்.  1.76 ஆயிரம் கோடி என்று,குற்றப்பத்திரிகையிலோவேறு எங்குமோ இல்லாத அந்தத் தொகையைக் குறிப்பிட்டுதிமுகவின் மீது ஒரு வெறுப்பைக் கிளப்புகின்றார். "திராவிடக் கட்சிகளை அகற்றுவது (அதாவது திமுகவை அகற்றுவது) தன் நெஞ்சில் 50 ஆண்டுகளாகக் கிடக்கும் குறிக்கோள்,  பாஞ்சாலி சபதம் போன்றது இது என்றார். பாவம் பாஞ்சாலி!

இறுதியாகரஜினியிடம் ஒரு கேள்வியையும்மணியனிடம் மூன்று கேள்விகளையும் முன் வைக்க வேண்டியுள்ளது.

மூன்று நாள்களுக்கு முன்பு கூட ரஜினியைப் பார்த்துவிட்டு வந்துதான் நான் பேசுகிறேன். அவர் அரசியலுக்கு வருவது உறுதி என்பதை இந்த மேடையில்  பிரகடனம் செய்கிறேன் என்றார் மணியன்.   அவ்வளவு தூரம் உறுதியாகிவிட்ட ஒரு செய்தியைரஜினி அவர்களேநீங்களே வெளியிடுவதுதானே முறைஅல்லது மணியன் கூறுவது உண்மைக்கு மாறானது என்றால்அதனை மறுப்பதுதானே முறைஇரண்டும் இல்லாமல் நீங்கள் காக்கும் மௌனத்திற்கு என்ன பெயர்அது நல்ல மௌனமாகள்ள மௌனமாசொல்லுங்கள் ரஜினி!

மணியனிடம் கேட்க ஆயிரம் கேள்விகள் இருந்தாலும்சுருக்கமாகச் சில கேள்விகளை மட்டும் முன்வைக்கின்றேன்.

1. வாடகை வீட்டில்புத்தகங்களுக்கு நடுவில் குடியிருப்பதாகஉங்கள் பேச்சில்உங்களைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளீர்கள். நல்லதுஉங்கள் எளிமையைஅறிவைப் பாராட்டுகின்றோம். ஆனால் அவ்வளவு எளிய மனிதரான உங்களால்இவ்வளவு பெரிய மாநாட்டைத் திருச்சியில் எப்படிக் கூட்ட  முடிந்ததுபெரிய கட்சிகளுக்கு இணையாக அவ்வளவு பெரிய மேடைஆடம்பரமான அலங்காரங்கள் எல்லாவற்றிற்கும் பணம் எங்கிருந்து வந்தது?காந்திய மக்கள் இயக்கத் தொண்டர்கள் ஒவ்வொரு செப்புக் காசாகச் சேர்த்துத் தந்தார்கள் என்று சொல்லிவிடாதீர்கள். நம்பும்படியாக இருக்காது. வேறு ஏதேனும் நம்பும்படியாகச் சொல்லுங்கள்.

2. திமுகஅதிமுக பற்றி அவ்வளவு நேரம் பேசினீர்களேமத்தியில் ஆளும் பாஜக ஆட்சி பற்றிச் சில வரிகள் பேசுவதற்கு கூட உங்களுக்கு நேரம் இல்லாமல் போய்விட்டதே ஏன்?

3. சிஸ்டம் கெட்டுப்போனதற்கு லஞ்சம்ஊழல் மட்டும்தான் காரணமாகறுப்புப்பணம் போன்றவைகளும் காரணமா என்பதை ரஜினி அவர்களிடம் கேட்க நேரம் இருந்ததா?

திமுகவை வீழ்த்தியே தீர வேண்டும் என்று காமராஜர்ராஜாஜி போன்ற பெருந்தலைவர்களே முயன்று பார்த்தும் வெற்றி கிட்டவில்லை. நோஞ்சான்களின் பாஞ்சாலி சபதத்திற்கெல்லாம்திமுக தொண்டன் அஞ்சுவான் என்றா நினைக்கின்றீர்கள்?
                                                                                                                              -  சுப.வீரபாண்டியன்
========================================================================================
முறைகேடுகளைத் தவிர வேறில்லை.

பா.ஜ., ஆட்சியில், எதிர்கட்சியினர் மீது உண்மையோ, பொய்யோ அதற்கு அப்பாற்பட்டு, முறைகேடு தொடர்பான புகார் வந்தால் அமலாக்கத்துறை, சிபிஐ சோதனை நடக்கிறது. 

அதுபோல், பாஜ., தலைவர் அமித்ஷா மகன் மீது வந்துள்ள குற்றச்சாட்டு மீது சோதனை நடக்குமா என்பது தான் எனதுகேள்வி. சீசர் மனைவி சந்தேகத்திற்கு அப்பாற்படடவர் என்பது போல் மோடி அதனை நிருபிக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். 
இதனை பொறுத்திருந்து பார்ப்போம்

டெங்கு காய்ச்சல் உழிரிப்பு குறித்து தமிழக அரசுக்கு கவலையில்லை. சுகாதார அமைச்சர்விஜயபாஸ்கருக்கு அக்கறையில்லை. வருமான வரி சோதனை வழக்கில் இருந்து தப்பிப்பது, குட்கா ஊழலில் இருந்து தப்பிப்பது குறித்து மட்டுமே கவனம் செலுத்துகிறார். 

அதனையும் தாண்டி மைனாரிட்டியாக இருக்கும் ஆட்சியை நிலைநிறுத்துவதில் தான் கவனம் செலுத்துகிறார். 
இந்த ஆட்சியில் அரசியல் நாகரீகத்தை எதிர்பார்க்க முடியாது.எம்ஜிஆர் நூற்றாண்டு விழா வேண்டாமென்றால் காழ்ப்புணர்வோடு சொல்வேன் எனக்கூறுவார்கள். 

அதில் காட்டும் அக்கறையை டெங்கு காய்ச்சல் குறித்து காட்ட வேண்டும். இறப்பை தடுக்கும் சூழ்நிலையில் கவனம் செலுத்த வேண்டும்.தலைமை செயலர், முதல்வர் எடப்பாடியுடன் கொள்ளை, கும்மாளத்திற்கு உடந்தையாக உள்ளார். 
 குட்கா ஊழல் தொடர்பாக வருமான வரித்துறை அறிக்கையில் உள்ள அமைச்சர் விஜயபாஸ்கர், மற்றும் இரண்டு டிஜிபிக்கள் பெயர்கள் எப்ஐஆரில் இல்லை என்றும், சாதாரண போலீஸ் அதிகாரிகள் பெயர் மட்டும் உள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. 

ஐகோர்ட் விசாரிக்க உத்தரவிட்ட ஒரு புகாரில், அலட்சியமாக டிஜிபி அந்தஸ்திலான அதிகாரிகள், அமைச்சரையும் காப்பாற்ற லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் துணை போயுள்ளனர். 

.குட்கா விசாரணையை கண்காணிக்கும் பொறுப்பை விஜிலென்ஸ் ஆணையரிடம் ஐகோர்ட் மதுரை கிளை கொடுத்துள்ளதால், அமைச்சர், டிஜிபி மீது எப்ஐஆர் பதிவு செய்ய செய்ய தடையாக இருப்போர் மீது கோர்ட் அவமதிப்பு வழக்கு தொடர நடவடிக்கை எடுக்க வேண்டும்.  
                                                                                                                                         -மு.க.ஸ்டாலின் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

.“ஷாக்கடிக்குது சோனா.. நீ நடந்து போனா.. !”

  டிக்-டாக்கால் வாழ்க்கை போச்சு மதுரை ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும், தல்லாகுளம் பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும் செல்ப...