சனி, 2 ஜனவரி, 2016

பீப்" போய்

 " த்தூ" வந்த'தூ',

பெரு மழை,செம்பரம்பாக்கம் வெள்ளம் அதில் மக்கள் பட்ட அவதிகளை மறக்கடிக்க அரசுக்கும் ,அதனை அண்டி வாழும் ஊடகங்களுக்கு தொடர்ந்து பர,பர செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.
முதலில் பீப் பாடல் சிம்பு.மகளிர் சங்கங்கள் எதிராக போராட கிளம்பும் போது உலகநியாயம் பேசும் சிம்பு தந்தை ராஜேந்தர் மகனை அப்பாடலுக்கு வருத்தம் தெரிவிக்க கூறி அதன்படி நடந்திருந்தால் இன்று அந்த பிரச்னை முடிந்து மக்கள் மறந்தும் போயிருப்பார்கள்.

ஆனால் என்ன காரணத்தினாலோ சிம்பும் அவரைச்சார்ந்தவர்களும் அதை ஊதி பெரிதாக்கினார்கள்.
கூவி காவல்துறையினர் தே டி வந்த போது  சிம்பு உடன் போய் ஒருசின்ன வருத்தம் கூறி வாக்குமூலம் கொடுத்திருந்தால் கூட அச்சமயம் பீப் பிரச்னை பீசாயிருக்கும்.

மாறாக சிம்பு ஒடி  ஒளிந்தார்.
தனது மகனுக்கு தெரியாமல் பாடல் வெளியாகி விட்டது என்றார் ராஜேந்தர்.

சிம்புவின் முன்னாள் காதலிகள் நயன்தாரா,ஹன்சிகா போன்றோருடன் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து கொஞ்சும் படங்கள்  யாரால் எடுக்கப்பட்டது?சிம்பு அப்போதைய காதலியுடன் உறவு முறிந்ததும் உடனே வலைத்தளங்களில் யாரால் ஏற்றப்பட்டது ?
மற்றொரு வீரப்பன்,யுவராஜ் போல் தலைமறைவாகிக்கொண்டு அறிக்கைகள் விட்டு ஊடகங்களுக்கு குறையாத தீனியை போட்டார்.
அவர் அம்மா உஷா மகன் சுதந்திர போராட்டத்தில் தலைமறைவானது போல் தியாகி போல் அவர்கள் குடும்ப குறள் காணொளியில் பின்னணி இசை,எடிட்டிங் உடன் ராஜேந்தர் கதை-வசனம் இயக்கத்தில் நடித்து ஒரு காணொளியை விட்டார்.
அவருக்கு பக்க பலமாக தமிழின திடீர் போராளி,போராட நிதி வசூல் செய்து கார் பொன்ற வசதிகளுடன் தன வாழ்க்கை போராட்டத்தை களம் கண்ட வீரலட்சுமி தலைக்கு 500 என்று ஆட்களை கூட்டி வந்து பீப் பாடலை தேசவுடமையாக்க ஆர்ப்பாட்டம் செய்தார்.
ஆர்ப்பாட்டம் முடிந்த கையுடன் ராஜேந்தரை பார்த்து கூலியை வாங்கிக்கொண்டு சென்று விட்டார்.சரத் குமார் முதலில் மன்னிப்பு கேட்க வேண்டும் நடிகர் சங்கம் என்ன செய்கிறது என்றார்?
அடுத்த நாள் அவரது சித்தி மன்னிக்கவும் மனைவி ராதிகா சிம்பு பாடல் ஆழம் மிகுந்தது.அதை பள்ளி தோறும் கலை வணக்க பாடலாக்கலாம்.நடிகர் சங்கம் என்ன செய்கிறது ?என்று கேட்டார்.
ஆக சரத்குமார் தம்பதிகள் இரு கருத்துக்களை வெளியிட்டாலும் நடிகர் சங்கம் என்ன செய்ததில் முடிப்பதில் ஒன்றுபட்டார்கள்.
அதற்கு  ரகசிய காரணம் அடுத்தநாள் "சரத்குமார் சங்க கணக்கு,வழக்குகளை இதுவரை ஒப்படிக்கவில்லை.
சங்க இடம் விற்பனை ரத்து என்று சொல்லியது பொய்."என்று நாசர் சொல்லும்போதுதான் தெரிந்தது.
இந்த பீப் பிரச்னை மட்டுமே மக்கள் வெள்ள சேதத்தில் இருந்து விடுவிக்க போதுமானதாக இருந்தாலும் அவ்வப்போது ஊடகத்தினருடன் உரசும் விஜகாந்த் செய்தியாளர்கள் மைக்கை நீட்டி ஏடா கூடமாக கேள்விகளை கேட்க ஆரம்பித்ததும் எரிச்சலாகிவிட்டார்.
வழக்கம் போல் கையை நீட்டாமல்'இது போன்ற கேள்விகளை ஜெயலலிதாவிடம் ஏன் கேட்கமாட்டீர்கள் என கேட்டார்.எ அதற்கு "அவர் பத்திரிகையாளர்களை சந்திக்கவில்லையே ?"என்று ஒரு நிருபர் சொல்ல.
இல்லாவிட்டாலும் நீங்கள் பத்திரிகையாளர்கள் "த்தூ'என்று காறி துப்பிவிட்டார.ஆனால் அத்ற்கு அங்கு எதிர்ப்பு எதுவும் தெரிவிக்காமல் காரியத்தி துடைத்து விட்டு மேலும் சில கேள்விகளை கேட்டு விட்டுதான் சென்றனர்.
ஆனால் வீட்டுக்கு போனதுதான் பத்திரிகையாளர் சங்கம்  'நீங்கள் காறித்துப்பியது தவறு.வன்மையாக்ககண்டிக்கிறோம் .என்று அறிக்கை வெளி வந்தது.
ஜெயா தொலைக்கட்சியோ பொதுமக்களும்,ஊடகத்தினரும் ,சமூக வலைத்தளங்களில் வசிப்பவர்களும் விஜய் காந்தை  கடுமையாக  விமர்சித்து காரித்துப்புவதாக செய்தியை மீண்டும்,மீண்டும் ஒளி பரப்பியது.
ஆக ஜெயா தொலைக்கா ட்சிக்கு  அரசின் பேரிடர் கையாலகத்தனத்தில் கோபத்தில் இருந் மக்களை திசை திருப்ப ஒரு பிடி கிடைத்து விட்டது.
தமிழக ஊடகங்க்களுக்கும்தான்.
ஆனால் வெளியெ மக்களுக்கு  அதிமுக அரசையும்,அதற்கு வால் பிடிக்கும் நடுநிலை என்று சொல்லிக்கொள்ளும் ஊடகங்கள் மீதும் இருந்த கோபம் விஜயகாந்து காறித்துப்பியதில் ஒரு வடிகாலாக இருந்தது என்பதுதான் உண்மை.
தங்கள் சார்பாக அவர் செய்துள்ள மரியாதையாகத்தான் கருதுகிறார்கள்.
மழை சேதத்தில் ஆளும் அதிமுக கட்சியினர் நடந்து கொண்ட அத்து மீறல்கள்.தனியார்  செய்த நிவாரணப்பணிகள் உதவிகளை தடுத்து ஜெயா ஸ்டிக்கர் ஒட்டியது.
ஒரு பிஸ்கட் பாக்கெட் கொடுத்தாலும் ஸ்டிக்கர் ஒட்டி கொடுப்பவரை விட பெரிதாக் ஜெயலலிதா படத்தை வைத்து ஆட்டுவது.
நில வேம்பு குடி நீரைக்கூட அம்மா கசாயம் என்று ஸ்டிக்கர் ஒட்டி கொடுப்பது "எல்லாம் மக்களை கோபத்தில் தள்ளியது என்றால்.அதிமுகவை விட அதிகமாக கோட்டைக்கு வராத,சரியான நேரத்தில் ஏரியை திறந்து விட ஆணையிடாத ,சேதங்களில் பாதிக்கப்பட்ட மக்களை பார்க்கவே வராத ஜெயலலிதாவுக்கு சிங்கியடித்து "நிவாரணப்பணிகள் துரிதமாக ஜெயலலிதா உத்திரவின்படி நடக்கிறது "என்று சொம்பு செய்திகளை போட்ட .
சொன்ன ஊடகங்கள் மீதும் கடுங்கோபம் கொள்ளவைத்துள்ளது.
அவர்களின் கோபத்தின் வடிகாலாக அந்த "த்தூ'அமைந்துள்ளது என்பதுதான் உண்மை.
அதற்காக விஜய் காந்த் மன்னிப்பு கேட்கவேண்டிய அவசியம் இல்லை.
ஊடகங்கள் வேண்டுமானால் இனி அவர் செய்திகளை தவிர்க்கட்டும்.
அந்த முதுகெழும்பு நம் ஊடக முதலாளிகளுக்கு கிடையாது.
பணிபுரிந்தவர் மீது உமிழப்பட்டாலும் அரசு விளம்பரத்துக்காக ஜெயலலிதாவுக்கு சிங்கியடிப்பதும்,மக்களிடம்செல்ல வேண்டியதிருப்பதாலும்,டி .ஆர்.பி.க்காகவும்  திமுக,தேமுதிக,காங்கிரசு போன்ற கட்சிகளின் தயவும் அவர்களுக்கு தேவை.
அதனால் எச்சிலை துடைத்துவிட்டு மைக்கை நீட்டி வாயைக்கிளற வேண்டியதுதான் பத்திரிகையாளன் வேலை.
வேறு வழியில்லை.
அது  "true" இல்லத்தாயி "த்தூ".

========================================================================================

டிசம்பர் 28: இந்திய தேசிய காங்கிரஸ் உருவானது.







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

.“ஷாக்கடிக்குது சோனா.. நீ நடந்து போனா.. !”

  டிக்-டாக்கால் வாழ்க்கை போச்சு மதுரை ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும், தல்லாகுளம் பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும் செல்ப...