வியாழன், 20 நவம்பர், 2014

சொம்பு நடிகர் சரத் குமார்.

அண்ட புளுகன்,ஆகாசப் புளுகன் இவர்களை தூக்கி சாப்பிடும் ஒருவர் இருக்கிறார்.

அதுவும் நம் தமிழ் நாட்டில்தான் இருக்கிறார் என்பது நமக்கெல்லாம் பெருமை தரக்கூடியது.

ஊருக்கு பத்து முன்னாள் ரசிகர்களை கூட்டிக்கொண்டு [அதுவும் சாதி அடிப்படையில் வந்தவ்ர்கள்].

அவர்களை வைத்து கட்சி என்றும் அதற்கு பயிற்சி வகுப்பென்றும் காமெடி செய்வதுடன் மாபெரும் ஊடக சந்திப்பையும் நடத்தி சாதனை செய்துள்ளார்.
அவர்தான் ஜெயலலிதாவின் ஆஸ்தான் சொம்பு முன்னாள் நடிகர் சரத் குமார்.
அவர் பயிற்சி வகுப்பு என்று பவர் ஸ்டார் அளவுக்கு கலக்கியதை விட அவர் தந்த பேட்டி மிகவும் அருமையான கலகல.
இதோ நீங்களும் ரசிக்க:
"ஸ்ரீரங்கம் தொகுதியில் அ.தி.மு.க எடுக்கும் முடிவுக்கு நாங்கள் கட்டுப்படுவோம்.[கட்டுப்படாவிட்டால் என்ன செய்து கிழிப்பீர்கள்]
அதற்குள் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா,  தன்மீதான சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து விடுதலையாகி, மீண்டும்  தேர்தலில் போட்டியிடுவார். தமிழகத்தில் மீண்டும் ஜெயலலிதா முதல்வராக வருவார்.[அவர் மீண்டும் முதல்வராக வேண்டும் என்றால் உங்களுக்கு தனியே ச.ம.க என்று கம்பெனி எதற்கு?]

அடுத்து தற்போது தமிழகத்தின் முதல்வராக உள்ள ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான தமிழக அரசு மிகச்சிறந்த முறையில் செயல்படுகிறது.[இதை கேட்டதும் நிருபர்களில் யாரவது ஒருவர் சிரிக்காமல் இருந்தரா?]

கர்நாடக அரசு காவிரியில் அணைக்கட்டும் முடிவை கைவிடவேண்டும் என எனது தலைமையிலான சமத்துவ மக்கள் கட்சியின்  குழு, கர்நாடக முதல்வரை சந்தித்து மனு கொடுக்க உள்ளோம்.[எப்படி இப்படி எல்லாம் சொல்ல தைரியம் வருகிறது.குழுவில் ராதிகா உண்டுதானே?]

காங்கிரசில் இருந்து பிரிந்து புதிய கட்சி தொடங்க உள்ள ஜி.கே.வாசன் தன்னுடைய கட்சியை ஆதரிக்கும்படி கோரிக்கை வைக்கிறார். அப்படியானால் எங்கள் கட்சிதான் அவர் துவங்க உள்ள கட்சிக்கு சீனியர் கட்சி. எனவே ஜி.கே.வாசன்தான் எங்கள் கட்சியை ஆதரிக்க வேண்டும்.[வாச்னுக்கு இந்த கேவல்ம் தேவையா? இருவரும் ஒருவரை ஒருவர் மாற்றி ஆதரித்து எந்த ஆணியைப் புடுங்கப்போகிறார்களாம்?]

வருகின்ற 2016 சட்டமன்ற தேர்தலில் தமிழகம் முழுவதும் உள்ள தொகுதியில் போட்டியிடுவதற்கான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெறுகிறது. [ இது ஜெயலலிதாவுக்கு தெரியுமா.அவ்வளவு உறுப்பினர்களுக்கு எங்கே போவீர்கள் சரத்?]இதில் 2016 சட்டமன்ற தேர்தல் பணிகளை நோக்கி தொகுதி செயலாளர்கள் எந்த வகையில் பணியாற்ற வேண்டும், கட்சி நிர்வாகிகளை முழுமைப்படுத்துவது, பூத் கமிட்டி அமைக்கும் பணியில் ஈடுபடுவது, வாக்காளர் பட்டியலை பரிசீலிப்பது, புதிய வாக்காளர்களை சேர்ப்பது, மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளை எவ்வாறு அமைப்பது, பொதுவான அரசியல் சூழ்நிலைகள் என பல்வேறு நடவடிக்கைகள் குறித்து பயிற்சி முகாமில் விளக்கப்படுகிறது.[பயிற்சி முகாமில் கலந்து கொண்ட 22 பேர்களும் தமிழ் நாடு முழுக்க எப்படி பூத் சிலிப் கொடுப்பார்கள்?]
 
ஒருபோர்களத்திற்கு செல்வதற்கு முன் வெறுமனே சென்று போர் புரிய முடியாது. கத்தியை கூர்தீட்ட வேண்டும். அதேபோல் இந்த பயிற்சி முகாமும் நடைபெறுகிறது" [முதலில் தேவையானது புத்தி]
கடைசியாக விஷால் குறித்த கேள்விக்கு பதிலளித்து பேசிய சரத்குமார், "விஷால் தொடர்ந்து ஏன் நடிகர் சங்கத்தை பற்றி விமர்சித்து பேசி வருகிறார்கள் என தெரியவில்லை.
சங்கக் கட்டிடத்தை மச்சானுடன் சேர்ந்து ஆட்டையை போட்டத்தற்குத்தான்.] இதுவரை விஷாலுக்கு எந்த பதிலும் கூறவில்லை. [கையும்-களவுமாக மாட்டிக்கொண்டபின் சொல்ல என்ன பதில் இருக்கு?]
இந்த சந்தர்ப்பத்தில் விஷாலுக்கு நான் முறையாக பதில் சொல்ல விரும்புகிறேன்.[வேறு வழி]

நடிகர் சங்கத்திற்கு 5 கோடி ரூபாய்க்கும் மேல் கடன் இருந்தது. [விஜய் காந்த் கடனை எல்லாம் கலை நிகழ்ச்சி நடத்தி அடைத்து இருப்பும் வைத்து விட்டுத்தானே சென்றார்.பின் 5 கோடி கடன் எப்படி வந்தது.உங்கள் கடந்தானே அது?]

 நடிகர்கள் சிலர் தங்கள் சொந்த பணத்தை போட்டு பல நிகழ்ச்சிகள் நடத்தி அந்த கடன் அடைக்கப்பட்டிருக்கிறது.[இந்த அண்டப்புளுகுதானே வேண்டாம்.கைக்காசு போடுகிற மூஞ்சைப்பார்த்தாலே தெரியாதா?உங்கள் கட்சி செலவுக்கு கையை வைத்தது தெரியாமலா போய் விடும்]
 இப்போது நடிகர் சங்கத்துக்கு 3 அரை கோடி ரூபாய் வைப்பு நிதியும் வைக்கப்பட்டுள்ளது. சத்யம் சினிமாசுடன் ஒப்பந்தம் செய்து கட்டடம் கட்டி 29 ஆண்டுகளுக்கு லீசுக்கு விடப்பட்டுள்ளது.[அரை கோடி வைப்பு வைத்தபிறகு எதற்கு ஒப்பந்தம்?]
இதற்கான முடிவை செயற்குழு, பொதுக்குழு கூடி முடிவுகள் எடுக்கப்பட்டது. நாங்கள் என்ன  வேலை செய்கிறோம் என தெரியாமல், இதற்கு முன்னால் சங்க செயல்பாடுகள் எப்படி இருந்தது, இப்போ எப்படி இயங்குகிறது என எதுவும் தெரியாமலேயே வெளியில் இருந்தபடி தேவையில்லாமல் தொடர்ந்து விஷால் ஏன் அவதூறு செய்திகளை பரப்புகிறார் என தெரியவில்லை. 
இது நல்லது இல்லை.
 இதுபோன்று தொடர்ந்து விஷால் அவதூறு செய்திகளை பரப்பினால், அவர் நடிகர் சங்கத்திலிருந்து நீக்கப்படுவார். 
நான் விஷாலை கடுமையாக எச்சரிக்கிறேன்" என்றார் காட்டமாக.
விஷால் தன்னையும் நடிகர் நாசரையும் ராதாரவியும்,காளையும் அசிங்கமாக நாய் என்றும் கையை காலை வெட்டுவேன் என்று கூட்டத்திலேயே பேசியதாகவும் அதற்கு நடிகர் சங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கொடுத்த புகாருக்கு தலைவரான சரத் குமாரின் பதில் ரொம்ப வேடிக்கையாக இருக்கிறது.
ஒன்றுமே விசாரிக்காமல் அவதூறு பரப்புகிறார் சங்கத்தை விட்டு விலக்குவேன் என்பது ஏதோ இவர் நடத்தும் அதிமுக கிளை கம்பெனி ச.ம.கட்சி யில் இருந்து விலக்குவேன் என்பது போல் இருக்கிறது.
சத்தியம் நிருவனத்துடன் ஒப்பந்தம் போட்டதும்.
நடிகர் சங்கக் கட்டிடத்தை குத்தகைக்கு கொடுத்ததும்,இடித்ததும் சங்க உறுப்பினர்களை கேட்டு செய்யவில்லை.
சரத்குமார்,ராதாரவி இருவரும் மட்டுமே கலந்து பேசி ரகசியமாக எல்லாம் நடத்தி விட்டு அதன் பின்னரே சங்கக் கூட்டத்தில் ஒப்புதலுக்கு வைத்தனர் என்பதுதானே குற்ற சாட்டு.

தாங்கள் நிரபராதிகள் என்றால் அதை நிருபிக்க வேண்டிய கட்டாயம் சங்கத்தலைவருக்கும்,செயலாளருக்கும் இருக்கிறது.
அதை கேட்ட நாசர்,விஷால் போன்றோரை சங்கத்தை விட்டு விலக்குவேன் என்பதும்.கையை வெட்டுவேன், நாய்,கழுதை என்று திட்டுவதும் சர்த் குமார் ராதாரவி இருவரும்  முறைகேடுகள் செய்துள்ளனர் என்பதைத்தானே வெளிச்சம் போட்டு காண்பிக்கிறது.
கொஞ்ச்மாவது மானம் பாக்கியிருந்தால் சரத் குமார் தனது பதவியை விட்டு விலகி தேர்தலை சந்தித்தாக வேண்டும்.தன்னை நிரபராதி என்பதை நிருபிக்க வேண்டும்.ஆனால் இதை சரத் குமாரிடமும்,ராதாரவியிடமும் எதிர் பார்க்க முடியாது.இன்றைக்கு அவர்களை வாழ்வித்துக் கொண்டிருப்பதே அந்த சங்கம்தானே.
save image
------------------------------------------------------------------------------------------------------------------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

.“ஷாக்கடிக்குது சோனா.. நீ நடந்து போனா.. !”

  டிக்-டாக்கால் வாழ்க்கை போச்சு மதுரை ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும், தல்லாகுளம் பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும் செல்ப...