திங்கள், 26 மே, 2014

செம்புத்தமிழனுக்கு

மோடி பதவியேற்பு விழாவில் ராஜபக்சே வருவது தொடர்பாக பல குரல்கள் பலவிதங்களில் ஒழித்துக் கொண்டிருக்கின்றன.ஆனால் மூன்று ஈழ வியாபாரிகளில் வைகோ தவிர இருவர் குரல் ஒலிப்பது போல் தெரியவில்லையே.அல்லது நெடுமாறன்,சீமான் குரல்கள் ஒலிப்பது எனக்குத்தான் தெரியவில்லையா?கேட்கவில்லையா?
பாஜக என்றுமே ராஜபக்சேக்கு ஆதரவாகத்தான் இருந்து வந்துள்ளது.
தமிழருக்கு ஆதவாக அல்ல.
suranமஹிந்தவும் மோடியும்
சுஷ்மா சுவராஜ் ராஜபக்சே வீட்டுக்கு இருமுறை விருந்து சென்றார்.எப்போது தமிழர் அழித்தொழிப்பு நடந்து முடிந்து தமிழர்கள் எல்லாம் கடும் சோகத்தில்-கோபத்தில்-இயலாமையில் இருந்த போது .
அப்போது கூட பாஜக காங்கிரசுக்கு எதிராக அரசியல் நடத்துவதற்காக தமிழருக்கு ஆதரவாக குரல் எழுப்பவில்லை.காங்கிரசுக்கு ஆதரவாகத்தான் நடந்து கொண்டது.
காமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொள்ள தமிழகம் முழுக்க [பொன்.ராதாகிருஷ்ணன் உட்பட]பிரதமர் மன்மோகன்சிங்குக்கு எதிர்ப்பு தெரிவித்தபோது மக்களவை கூட்டத்தில் கலந்து கொள்ளவேண்டும் என்று பாஜக வலியுறுத்தியது.
ஆக இன்று மோடி கூப்பிட்டதில் அதிசயம் இல்லை.
வைகோ நீலிக்கண்ணீர் வேண்டுகோள் விடுக்க வேண்டியதில்லை.
ஊரறிந்த பார்ப்பானுக்கு பூணுல் எதற்கு?
பாஜக எதிர்கட்சியாக இருந்த போதே தமிழர்கள் உணர்வுக்கு மதிப்பளித்து இல்லை.
இன்று மிருக பலத்தில் நாற்காலிகளை கைப்பற்றியபோது எப்படி நடந்து கொள்வார்கள்.
மேலும் ஈழத்தமிழருக்கும் இங்குள்ள தமிழருக்கும் மட்டுமல்ல சிங்களருக்கும் வடக்கே உள்ள வட மாநில மக்களுக்கும் தொப்புள் கொடி உறவு உள்ளது.
suran
சிங்களர்கள் இந்தியாவில் உள்ள பீகார்,ஓடிசா ,வங்கத்தில் இருந்து நாவலந்தீவுக்கு அதாங்க இலங்கைக்கு பிழைக்க  வந்தவர்கள்தான்.தமிழர்கள் இலங்கையை ஆண்ட போது உழைக்க வந்தவர்கள் பின் சிறுபான்மையினர் தமிழர்களை சிறுபான்மையாக்கி விட்டனர்.
ஆங்கிலேயன் வழக்கம் போல் பிரித்தாளும் சூட்சியில் சிங்களர் பொறுப்பில் விடுதலை பத்திரத்தை கொடுத்து தமிழனை இரண்டாம் குடிமக்களாக்கி தண்ணீர் தெளித்து விட்டு போய்விட்டான்.
நமக்கு கல் தோன்றி கடவுள் தோன்றா கால பெருமை மட்டும்தான் இன்றும் மிச்சம்.
பெரியார் தமிழனை ஏன் காட்டுமிராண்டி என்றார்.?நாம் கல்தோன்றி என்ற பெருமையை மட்டும் பேசிக்கொண்டிருப்பதால் மட்டும் தானே!
இன்று மோடி இலங்கை அதிபரை மட்டும் அழைக்க வில்லையே .
பாகிஸ்தான் உட்பட சார்க் நாட்டு அதிபர்களா அனைவருக்கும் அழைப்பு கொடுத்துள்ளார்.
ராஜ பக்சே மட்டும் இந்தியா வராததால் ஈழத்தமிழர் பிரச்னை முடிந்து விடுமா?
வைகோ போ ய் கறுப்புக்கொடியை காட்டினால் பிரபாகரன் உயிரை திரும்பக் கொடுத்து விடுவாரா பக்சே?
நடந்து முடிந்த படுகொலையை வைத்தே ஈழ வியாபரிகள் பிழைப்பு நடத்துகின்றனர்.
இப்போது அங்கு உயிருடன் உள்ள தமிழன் பாதுகாப்புக்கும்,உயர்வுக்கும்,உரிமை பெறவும் இங்குள்ள வியாபாரிகள் செய்தவை என்ன?
சட்டமன்றத்தில் திடீர் ஈழத்தாய் ஜெயலலிதா தீர்மானங்கள் நிறைவேற்றியதால் மட்டும் போதுமா?அங்குள்ள ஈழத்தமிழர் நல்வாழ்வுக்கு இதுவரை என்ன திட்டங்களை ஜெயலலிதா தந்துள்ளார்.இல்லை.இந்த பக்சே வரவேண்டாம் என்று சொல்லும் அரசியல்காரர்கள் என்ன தீர்வுகளை சொல்லியுள்ளார்கள்.
அப்போது கருணாநிதி ஆட்சியில் இருந்ததால்  அவருக்கும் ஈழத்தமிழர் படுகொலைக்கு பங்கு  என்பதாகவும் கருணாநிதி நினைத்திருந்தால் படுகொலைகளை நிறுத்தியிருக்கலாம் என்றும் முட்டாள் தனமாக இன்றும் பேசிவருபவர்களுக்கு ஒரே ஒரு கேள்வி '
suran
உங்களின் திடீர் ஈழத்தாய் ஜெயலலிதா இன்று தமிழக முதல்வர் .அதுமட்டுமல்ல மோடியின் நட்பு வட்டாரத்தில் உள்ளவர்.அதுமட்டுமல்ல பாஜக ஆதரவை பெற்றவர்.
அவர் ராஜபகசெவை இந்தியாவிற்குள் வர விடாமல் ஏ ன் தடுக்க இயவில்லை.
அறிக்கை மட்டும் விடுகிறார்.?
ஈழப் படுகொலையை அதாவது அண்டை நாட்டு உள்நாட்டுப் போரை மத்திய அரசு மூலம் தடுப்பதை விட ராஜபக்சே அழைப்பை தடுப்பது மிக எளிதான வேலைதானே?

அதை ஏன் உங்கள் திடீர் ஈழத்தாய் செய்யவில்லை.
இக்கேள்வி ஜெயலலிதாவின் அடிமை செம்புத்தமிழன் சீமானுக்கு அர்ப்பணிக்கப் படுகிறது.

suran

ஈழம் நோக்கிய பயணம்?வைகோ,நெடு,சீமான்?


 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

.“ஷாக்கடிக்குது சோனா.. நீ நடந்து போனா.. !”

  டிக்-டாக்கால் வாழ்க்கை போச்சு மதுரை ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும், தல்லாகுளம் பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும் செல்ப...