செவ்வாய், 20 ஆகஸ்ட், 2013

கேரளா கபே....?


கேரளா மக்களும் நாமும் அண்ணன் தம்பி என்று நாம் சொல்லிக் கொண்டு அலைந்தாலும் அவர்கள் மனதில் நம்மை ரொம்ப கீழ்த்தரமாக பாண்டியாக அல்லது  உணர்கிறார்கள்.
‘டாம் 999” படத்தில் முல்லைப்பெரியாறை கேரளாவை அழிக்க வந்த அணை போல் சித்தரித்தார்கள்.இப்போது மெட்ராஸ் கபேயில் ஜான் ஆப்ரஹாம் கேரளாவில் இருந்து மனித குலத்தை ரட்சிக்க புறப்பட்டு இலங்கை சென்று ஈழத்தமிழர்கள்-விடுதலிப்புலிகள் என்ற அரக்கர்களை வதம் செய்து இலங்கையையும்-இந்தியாவையும் காப்பாற்றி விட்டு விடுதலிப்புலிகள் அண்ணல் ராஜீவை கொல்வதை தடுக்க புறப்பட்டு வந்து கொண்டிரூக்கையில் அது கையை மீறி படுகொலையாவதாக கதை முடிக்கிறார்கள்.
இதன் மூலம் சொல்லவரும் கருத்து .
ராஜ பக்ஷே தமிழர்களை கொன்று குவித்தது தவறே இல்லை.அவர்கள் அழிக்கப்பட  அரக்கர்கள் வம்சத்தினர்தான்.பக்ஷே,சோனியா,மன்மோகன் சிங்,மேனன் கூட்டம் ஈழத்தமிழர்கள்-விடுதலிப்புலிகள் மீது தொடுத்த அழித்தொழிப்பு நடவடிக்கை இந்த மெட்ராஸ் கபே மூலம் நியாயப்படுத்தப்படுகிறது.
இப்போது இப்படி ஒரு படம் எடுக்க வெண்டிய அவசியம் ஏன் வந்தது ?அவசியம் என்ன ?
தமிழர்களை,அதுவும் ஈழத் தமிழர்களை கொலைகார கும்பலாக காட்ட வெண்டிய அவசியம் ஏன் ?
பின்னால் மிக -வெளியெ என்று அலைபாயும் மனதினர்.இவர்களை அவர்கள் வீட்டிலேயே சென்று அவமானம் செய்தாலும் பொறுத்துக்கொள்ளும் வடிவேலு தரப்பினர் என்ற எண்ணம் மற்ற இந்திய இனத்துக்கு வந்து விட்டுள்ளது.
suran
இலங்கை பிரச்னையில் ஐ.நாவில் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக தீர்மானம் நிறைவேற்ற மத்திய அரசை தமிழ் நாடே வலியுறுத்திய போது மத்திய அரசு கூட்டிய கூட்டத்தில் நிதிஷ் குமார்,முலாயம் சிங்,லாலுபிரசாத் போன்றோர் அப்படி ஒரு தீர்மானம் வேண்டாம் என்று சொல்லியது தமிழர் மனதை விட்டு மறைந்திருக்காது.
இந்தியாவில் தமிழன் தனியே விடப்பட்டுள்ளான்.
அந்த தைரியம் தான் மெட்ராஸ் கபே மூலம் இப்போது வெளியாகிறது.
இப்படத்தின் பின்னணியில் காங்கிரசும்,சிங்கள அரசும் உள்ளது பட்டவர்த்தனம்.
கதை முதல் பணம் வரை வந்த இடம் அதுவாகத்தான் இருக்கும்.
இப்படத்தை தமிழகத்தில் திரையிட்டு விட்டால் தமிழன் அதன் பின் தனது இனத்தை பற்றியே பேசும் தகுதியை இழந்து விடுவான்.
சீமான்கள்,நெடுமாறன்,மற்றும் கருணாநிதி,ராமதாஸ் அரசியல் செய்வதில் அர்த்தமே இல்லை.
திடீர் ஈழத் தாய் ஜெயலலிதா என்ன செய்யப்போகிறார்.
ஆணானப்பட்ட கமல்ஹாசன்,விஜய் ளையே ஆட்டி வைத்தவர் ,தடை போட்டவருக்கு இந்த ஜான் ஆப்ரஹாம் படம் எம்மாத்திரம் ?
ஆனால் அவர் தடையை தனது பாணியில் கொண்டுவருவாரா ?அவரின் ஈழத்தாய் பட்டத்தை தக்க வைத்துக்கொள்வாரா ?

இதில் விடுதலைப்புலிகள் இயக்க தலைவர் பிரபாகரனை பாஸ்கரன் என்ற பெயரில் சித்தரித்து உள்ளனர்.
இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கும், சிங்கள ராணுவத்துக்கும் சண்டை தீவிரமாகிறது. அங்கு அமைதி ஏற்படுத்த இந்தியா அமைதிப்படை அனுப்பி வைக்கிறது.
suran
இந்தியா ‘ரா’ அதிகாரி ஜான் ஆபிரகாமும், கேரளாவில் இருந்து அங்கு அனுப்பி வைக்கப்படுகிறார்.
விடுதலைப்புலிகள் இயக்கத்தினருக்கு தீவிரவாதிகள் முத்திரை குத்தி அழிக்க முயற்சிக்கின்றனர்.
 ஜான் ஆபிரகாமும் அழிப்பு வேலையில் ஈடுபடுகிறார்.
அப்போது ராஜீவ் காந்தியை படுகொலை செய்ய விடுதலைப்புலிகள் தரப்பில் வியூகம் அமைக்கப்படுகிறது. இது இந்திய அரசுக்கு தெரிந்தும் பாதுகாப்பு அளிக்க  தமிழக அரசுக்கு தகவல் சொல்கிறது.
suran
ராஜீவை காப்பாற்ற முயற்சிகள் நடக்கின்றன. அதையும் மீறி அவர் கொல்லப்படுவது போல் கதை முடிகிறது.
சிங்கள ராணுவ படுகொலைகள் எதுவும் இதில் காட்டப்படவில்லை .
 விடுதலைபுலிகளையும், ஈழத்தமிழர்களையும் வில்லனாகவும், கேரளாவை சேர்ந்தவர்களை நல்லவர்களாகவும் சித்தரித்து படம் எடுத்துள்ளனர்



suran

  • உண்மையிலேயே ஜான் ஆப்ரஹாம்  யார்..?
  • இலங்கை தூதரகத்தில், மெட்ராஸ் கஃபே 'ஜான் ஆபிரகாமை" சந்திந்த ரசிகர்
  • ஒரு திரைப்பட நடிகருக்கு இலங்கை தூதரக அலுவலகத்தில் அப்படி என்ன முக்கியமான வேலை..?
  • பாகிஸ்தானில் இருந்து வந்தால் மட்டும்தான் தீவிரவாதியா..?
  • இலங்கையுடன் இணைந்து தமிழ் மண்ணில் குட்டையைக் குழப்புவதற்கு பெயர் என்ன..?
உண்மையிலேயே இவன் யார்..?
இலங்கை தூதரகத்தில், மெட்ராஸ் கஃபே ஜான் ஆபிரகாமை சந்திந்த ரசிகர்  
ஒரு திரைப்பட நடிகருக்கு இலங்கை தூதரக அலுவலகத்தில் அப்படி என்ன முக்கியமான வேலை..?
பாகிஸ்தானில் இருந்து வந்தால் மட்டும்தான் தீவிரவாதியா..? 
இலங்கையுடன் இணைந்து தமிழ் மண்ணில் குட்டையைக் குழப்புவதற்கு பெயர் என்ன..?



suran

suran

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

.“ஷாக்கடிக்குது சோனா.. நீ நடந்து போனா.. !”

  டிக்-டாக்கால் வாழ்க்கை போச்சு மதுரை ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும், தல்லாகுளம் பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும் செல்ப...