சனி, 24 செப்டம்பர், 2011


உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவினரின் பொய்யான பிரசாரங்களை நம்ப வேண்டாம் முன்னாள் அமைச்சர் கீதாஜீவன் பேச்சு




    உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவினரின் பொய்யான பிரச்சாரங்களை நம்ப வேண்டாம் என தூத்துக்குடியில் நடந்த திமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் முன் னாள் அமைச்சர் கீதாஜீவன் பேசினார்.
தூத்துக்குடி மாநகராட்சி தேர்தலை எதிர்கொள்வது தொடர்பான திமுக செயல்வீரர்கள் கூட்டம் கலைஞர் அரங்கில் நடந்தது. நகர அவைத்தலைவர் சுசீரவீந்திரன் தலைமை வகித்தார். இதில் மேயர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் பொன்இனிதாவை மாவட்ட செயலாளர் பெரியசாமி அறிமுகம் செய்து வைத்து பேசுகையில், ‘தேர்தலில் சீட் கிடைக்காதவர்கள் மனம் தளர வேண்டாம். அனைவரும் ஒற்றுமையாக இருந்து பணியாற்ற வேண் டிய தருணம் இது. இதனை திமுகவினர் மானப்பிரச்னையாக கருத வேண்டும்‘ என்றார்.
தொடர்ந்து முன்னாள் அமைச்சர் கீதாஜீவன் முன் னிலை வகித்து பேசுகையில், அதிமுகவினரின் பொய் யான பிரசாரங்களை நம்ப வேண்டாம். நிதி ஒதுக்கீடு செய்ய மாட்டார்கள் என அதிமுகவினர் கூறலாம். ஆனால் மக்கள் தொகை அடிப்படையில்தான் மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்யப்படும். திமுக ஆட்சி காலத்தில்தான் பல அரிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. அதிக நிதி மாநகராட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது‘ என்றார்.
இதில் மாவட்ட துணை செயலாளர் ராஜமன்னார், மாவட்ட இலக்கிய அணி செயலாளர் திருச்சிற்றம்பலம், இளைஞரணி அமைப்பாளர் ராஜ்மோகன் செல்வின், வக்கீல் அணி செயலாள மோகன்தாஸ்சாமுவேல், மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், முன்னாள் மேயர் கஸ்தூரிதங்கம், நகர இளைஞரணி பில்லாஜெகன், முன்னாள் கவுன்சிலர்கள் கோட்டுராஜா, கனகராஜ், செந்தில்குமார், பிஎஸ்கே மாரியப்பன், சுரேஷ்குமார், வக்கீல் ஆனந்தகேபிரியேல்ராஜ், சங்கரபேரி முன்னாள் பஞ்சாயத்து தலைவர் ஆறு முகம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
ஜெயலலிதா வீட்டு முன்பு தொண்டர்கள் ஆர்ப்பாட்டம்: தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு 
அதிமுக வேட்பாளர் பட்டியலை முழுமையாக வெளியிட்டு முடித்து விட்டார் முதல்வர் ஜெயலலிதா. இதில் பல வேட்பாளர்கள் குறித்து கட்சியினர் மத்தியில் அதிருப்தி நிலவுகிறது.
ஈரோடு மேயர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட மல்லிகா பரமசிவம், விபச்சார வழக்கில் சிக்கியவர் என்று கூறி போஸ்டர் ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தினர்.
இந்த நிலையில் ராஜபாளையம், அருப்புக்கோட்டை, சாத்தூர், சிவகாசி நகராட்சித் தலைவர் மற்றும் சிலவார்டு வேட்பாளர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த ஊர்களைச் சேர்ந்தவர்கள் முதல்வர் வீடு முன்பு கூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதேபோல கட்சித் தலைமை அலுவலகத்திலும் ஆர்ப்பாட்டம் நடந்தது.
நூற்றுக்கணக்கானோர் கூடி ஆர்ப்பாட்டத்தில் குதித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கட்சி மாறி வந்தவர்களுக்கே கட்சியில் சீட் தரப்படுகிறது. இது அநியாயமானது என்று அவர்கள் கோஷமிட்டனர்.
இதேபோல சென்னை பட்டினப்பாக்கம், 173வது வார்டு வேட்பாளரையும் மாற்றக் கோரி அந்த வார்டைச் சேர்ந்த அதிமுகவினரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை மாநகராட்சியில் அதிமுக சார்பில் போட்டியிட அறிவிக்கப்பட்டிருக்கும், 37வது வார்டுக்கு உட்பட்ட பெரம்பூருக்கு தொடர்பே இல்லாத சுரேஷ் என்பவரை வேட்பாளராக அறிவித்ததற்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டம் நடத்திய அப்போது அசோக்குமார் என்கிற இளைஞர் திடீரென தனது உடலில் மண்ணெண்ணையை ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றார். போலீசார் அவரைத் தடுத்து நிறுத்தியதால் விபரீதம் தடுக்கப்பட்டது.
பணம் வாங்கிக் கொண்டு சீட்-பெண் அழுகை: சென்னை புழல் ஒன்றிய அதிமுக ஒருங்கிணைப்பாளராக உள்ள சாமூண்டீஸ்வரி போயஸ் கார்டனில் ஜெயலலிதா வீட்டின் முன் அழுது கொண்டே கூறுகையில், 18 வயதில் அதிமுகவில் சேர்ந்தேன். எனக்கு திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ளன. 24 மணி நேரமும் அதிமுகவுக்காக உழைத்துக் கொண்டிருந்ததால் என் கணவர் என்னை விட்டு பிரிந்துவிட்டார்.
உள்ளாட்சித் தேர்தலில் கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட விருப்ப மனு கொடுத்திருந்தேன். ஆனால் எனக்கு வாய்ப்பு தரப்படவில்லை. புரட்சி பாரதம் கட்சியில் இருந்து பார்த்திபன் என்பவர் அதிமுகவில் இணைந்துள்ளார்.
அவரிடம் 10 லட்சம் ரூபாய் கமிஷன் பெற்றுக் கொண்டு லோக்கலில் இருக்கும் அதிமுகவின் நிர்வாகிகள் அவருக்கு சீட் கொடுத்து விட்டனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

.“ஷாக்கடிக்குது சோனா.. நீ நடந்து போனா.. !”

  டிக்-டாக்கால் வாழ்க்கை போச்சு மதுரை ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும், தல்லாகுளம் பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும் செல்ப...