புதன், 9 ஆகஸ்ட், 2017

பணக்கார ரவுடிகள்

வார்னிகா குந்து, ஹரியாணாவைச் சேர்ந்த மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரியின் மகள். கடந்த நான்காம் தேதி நள்ளிரவு வார்னிகா தனது காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்த போது எஸ்.யூ.வி ரக கார் ஒன்றில் இரண்டு நபர்கள் பின் தொடர்ந்து வருவதைக் கவனித்திருக்கிறார். குடிபோதையில் இருந்த அந்த இரண்டு பேரும், வார்னிகாவின் காரைப் பின் தொடர்ந்து வந்ததுடன், ஒரு கட்டத்தில் மறிக்கவும் முயற்சித்துள்ளனர். தனது காரை வளைத்து நெளித்து அவர்களிடமிருந்து தப்பிக்க வார்னிகா முயற்சி செய்துள்ளார்; ஒரு இடத்தில் வார்னிகாவின் காரின் பாதையில் தங்களது எஸ்.யூ.வி காரை நிறுத்திய அந்த இரண்டு இளைஞர்களும், வார்னிகாவை அவரது காரில் இருந்து வலுக்கட்டாயமாக இறக்கி கடத்தவும் முற்பட்டுள்ளனர்.
இதற்கிடையே வார்னிகா போலீசாருக்கும், தனது தந்தைக்கும் தகவல் தெரிவித்துள்ளார். குறிப்பிட்ட ஒரு இடத்தில் கிட்டத்தட்ட தப்பிக்க முடியாத ஒரு கோணத்தில் வார்னிகாவின் கார் மாட்டிக் கொண்டிருந்த போது பின் தொடர்ந்து வந்த ரவுடிகளில் ஒருவன் வார்னிகாவின் கார் கதவைத் திறக்க முயற்சித்துள்ளான் – சரியாக அந்த நேரத்தில் ரோந்து வாகனத்தில் வந்து சேர்ந்த போலீசார் வார்னிகாவைக் காப்பாற்றியதோடு குடிபோதையில் இருந்த பணக்கார ரவுடிகள் இருவரையும் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட விகாஷ் பார்லா
கைது செய்யப்பட்டவர்களில் விகாஷ் பார்லா என்பவன் ஹரியாணா மாநில பாரதிய ஜனதா தலைவர் சுபாஷ் பார்லாவின் சீமந்த புத்திரன். உடன் வந்த ஆஷிஷ் குமார் என்பவன் விகாஷின் நண்பன்.
பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான பெண்ணும் ஓரளவு வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதாலும், அவரது தந்தை மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி என்பதாலும் இந்த வழக்கிற்கு ஓரளவு ஊடக வெளிச்சம் கிடைத்ததோடு, குற்றவாளிகள் உடனடியாக கைதும் செய்யப்பட்டனர். எனினும், விகாஷ் கைது செய்யப்பட்டவுடன் காட்சிகள் உடனடியாக மாறத் துவங்கின.
தமது தலைவரின் மகன் கைது செய்யப்பட்டதை அறிந்த ஹரியாணா மாநில பாரதிய ஜனதா தலைகள் காவல் நிலையத்திலேயே முகாமிட்டனர். வார்னிகா அளித்த புகாரின் படி சட்டவிரோதமாக தடுத்து வைக்க முயற்சிப்பது (இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 341) மற்றும் கடத்தல் (பிரிவு 341) உள்ளிட்ட சட்டப் பிரிவுகளின் கீழ் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். இந்தப் பிரிவுகளின் பதியப்படும் வழக்கின் கீழ் கைது செய்யப்படுகிறவர்களுக்கு உடனடியாக பிணை கிடைக்காது.
ஆனால், எளிதில் பிணை கிடைக்கும் பிரிவுகளான மோட்டார் வாகனச் சட்டம் 185 மற்றும் பெண்களைப் பின் தொடர்வதற்கு எதிரான இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 354D ஆகியவற்றின் கீழ் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. வெள்ளி இரவு கைது செய்யப்ப்ட்ட விகாஷ் பார்லா, பல்வேறு ஓட்டைகளுடன் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையின் காரணமாக சனிக்கிழமையே பிணையில் விடுவிக்கப்பட்டு விட்டார். அது வரை பாரதிய ஜனதா தலைகள் காவல் நிலையத்திலேயே இருந்துள்ளனர்.
ஹரியாணா மாநில பாரதிய ஜனதா தலைவர் சுபாஷ் பார்லாவி
இதையடுத்து பாரதிய ஜனதா தரப்பில் இருந்து பாதிக்கப்பட்ட பெண்ணை “நடத்தை கெட்டவராக” சித்தரிக்கும் முயற்சிகள் துவங்கின. பாரதிய ஜனதாவைச் சேர்ந்த ராம்வீர் பட்டி என்பவர் “அந்தப் பெண் ஏன் இரவு 12 மணிக்கு வெளியே வந்தார்?” எனக் கேட்டுள்ளார். பார்லா குடும்பத்தைச் சேர்ந்தவர்களோ வார்னிகா முன்பு வேறு ஒரு சந்தர்பத்தில் மதுக் கோப்பைகளோடு நிற்கும் போது எடுத்த புகைப்படங்களை முகநூலில் வெளியிட்டு அவர் ஒழுங்கீனமானவர் எனக் கொளுத்திப் போட்டனர்.
உச்சகட்டமாக களத்தில் இறங்கிய பாரதிய ஜனதாவின் சமூக வலைத்தளப் பிரிவினர், வார்னிகா வேறு ஆண்களுடன் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போது எடுத்த புகைப்படங்களை வெளியிட்டு அந்தப் படத்தில் இருக்கும் ஆண் தான் விகாஷ் பார்லா என பொய்யான செய்திகளைப் பரப்பத் துவங்கினர். ஹாரியாணாவை ஆளும் பாரதிய ஜனதா முதல்வர் எம்.எல் கட்டர் முன்பு ஒரு சமயத்தில் “பெண்களுக்கு சுதந்திரம் வேண்டுமானால், அவர்கள் ஆடைகளை அவிழ்த்துப் போட்டு தெருவில் நடமாட வேண்டியது தானே?” என்று கேட்டவர் தான் என்பதால், அக்கட்சியைச் சேர்ந்தவர்கள் பொறுக்கி விகாஷுக்கு ஆதரவாக களமாடியதில் எந்த வியப்புமில்லை.
பெண்களைப் பின் தொடர்ந்தவரையே தேசிய தலைவராக கொண்டுள்ள ஒரு கட்சியிடமிருந்து வேறு எதை எதிர்பார்க்க முடியும்?
ஆபாசக் குப்பைகளையே புராணங்களாக கொண்டிருக்கும் ஒரு மதத்தின் அரசியல் வடிவமே இந்துத்துவம். பல்வேறு ஆதீன பீடங்களையும், குரு பீடங்களையும் ஆசாராம், நித்தியானந்தா, ஜெயேந்திரன், பிரேமானந்தா போன்ற பாலியல் மிருகங்கள் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும் நிலையில். ஆர்.எஸ்.எஸ், பாரதிய ஜனதா உள்ளிட்ட இந்துத்துவ கும்பலின் பல தலைவர்கள் மைணர் குஞ்சுகளாக வலம் வந்து கொண்டிருக்கின்றனர். அதிகாரம் கையில் இருக்கும் திமிரில் படுபாதக குற்றங்களைச் செய்தாலும் சட்டங்களின் சந்து பொந்துகளில் புகுந்து வெளியேறி விடலாம் என்கிற மிதப்பில் திரிந்து கொண்டிருக்கின்றனர்.
இந்துத்துவ அரசியல் தலித்துகளுக்கும், சிறுபான்மையினருக்கும், ஜனநாயக சக்திகளுக்கும், உழைக்கும் மக்களுக்கும் மட்டுமல்ல – பெண்களுக்கே எதிரானவர்கள் என்பதை உணர்த்த துவங்கி விட்டனர்.
 ஆதாரம் :

வெள்ளி, 4 ஆகஸ்ட், 2017

அடங்காத காளை எல்லாம் அடிமாடாய் போகிறதடா ......

ஆர்.எஸ்.எஸ். – சுயபுராணமே இனி வரலாறு !

த்திரபிரதேச  பாரதிய ஜனதா கட்சி வரும் ஆகஸ்டு 26 -ம் தேதி தமது முன்னாள் தலைவர்களில் ஒருவரான தீனதயாள் உபாத்யாயாவின் பிறந்த நாள் விழாவை நடத்த உத்தேசித்துள்ளது. 
இதையொட்டி பொது அறிவுப் போட்டி ஒன்றை அறிவித்துள்ளது. 
இதற்காக 70 பக்கங்களுக்கு பாரதிய ஜனதா தயாரித்துள்ள நூலில் இருந்து எடுக்கப்பட்ட கேள்விகளில் சில;
1. “இந்தியாவை இந்து நாடென்று சொன்னவர் யார்?”
பதில் : டாக்டர் கேசவ பலிராம் ஹெட்கேவார்.
2. சிகாகோவில் நடந்த ‘தர்ம சபாவில்’ எந்த மதத்தை விவேகானந்தர் முன்னெடுத்துச் சென்றார்?
பதில் : இந்துத்துவம்
3. எந்த இசுலாமிய படையெடுப்பாளரை சுஹேல்தியோ மகாராஜா துண்டுத் துண்டாக வெட்டினார்?
பதில் : சையது சலார் மசூத் கஜினி
4. ஹரிஜன்கள் குறித்து காந்தி மற்றும் காங்கிரசின் கருத்துக்களுக்கு மறுப்பாக அம்பேத்கர் எழுதிய நூலின் பெயர் என்ன?
பதில் : காந்தியும் காங்கிரசும் செய்தார்கள் (Congress and Gandhi have Done)
மேற்கண்ட உள்ள கேள்வி – பதில்களின் தரத்தையும் யோக்கியதையையும் பார்த்தாலே இது பாரதிய ஜனதா கும்பலின் தயாரிப்பு என்பது உங்களுக்கு புரியும்.
சிகாகோவில் விவேகானந்தர் இந்துத்துவத்தின் சார்பாகச் செல்லவில்லை என்பதோ, இந்து மதத்தின் சார்பாக சென்றார் என்பதோ, அம்பேத்கர் எழுதிய நூலின் முழுப் பெயர் “தீண்டத்தகாதவர்களுக்கு காந்தியும் காங்கிரசும் செய்ததென்ன?” (What congress and Gandhi have Done to the Untouchables) என்பதோ நூலைத் தயாரித்த பா.ஜ.கவுக்கு தேவையற்ற விசயங்கள். 
இந்தப் போட்டியின் மூலம் இந்துத்துவத்தை இளம் மனங்களில் நுழைப்பது ஒன்றே அவர்களின் குறிக்கோள்.
உத்திரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த 9 மற்றும் 10 -ம் வகுப்பு மாணவர்களுக்கானதாக பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக அறிவிக்கப்பட்டுள்ள “பொது அறிவு” போட்டியில் லட்சக்கணக்கான மாணவர்கள் கலந்து கொள்வார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
மாநிலமெங்கும் உள்ள அரசு மற்றும் தனியார் நிர்வாகத்தினரால் நடத்தப்படும் சுமார் 9000 பள்ளிக் கூடங்கள் இதுவரை போட்டியில் தமது மாணவர்களை சேர்த்துக் கொள்ள பதிவு செய்துள்ளன.
இது எப்படி நடந்திருக்கும் என்கிறீர்கள்? 
உ.பியை பா.ஜ.க ஆள்கிறதல்லவா, அவாள் அலுவலகத்தில் இருந்து அனைத்து பள்ளிகளுக்கும் ஃபோன் போட்டு எல்லா மாணவர்களையும் ஆர்.எஸ்.எஸ் தேர்வில் கலந்து கொள்ள வேண்டும் என்று உத்தரவு போட்டால் இலட்சக்கணக்கில் மாணவர்கள் கலந்து கொள்ளாமல் என்ன செய்வார்கள்? 
கபாலி படத்தின் போது சசிகலா கும்பல் பல ஐ.டி நிறுவனங்களுக்கு ஃபோன் போட்டு டிக்கட் விற்ற மாதிரிதான். 
முன்னது பாசிசம், பின்னது பணம்.
வீரசாவர்கர் உள்ளிட்ட இந்துத்துவ தலைவர்களின் “வீர கதைகளை” மேற்படி நூலின் 70 பக்கங்களில் கேள்வி – பதில்களாக வெளியிட்டுள்ளதாகவும், இதைப் படிப்பதன் மூலம் இளம் தலைமுறையினர் “இந்துத்துவம் என்கிற நல்ல வாழ்க்கைத் தத்துவம் குறித்தும் அதன் தலைவர்களைக் குறித்தும் அறிந்து கொள்வார்கள்” எனத் தெரிவிக்கிறார் பாரதிய ஜனதாவின் மாநிலத் தலைவர் சுபாஷ் யதுவன்ஷி.
அவர்களே அவர்களைப் பற்றி எழுதிக் கொள்ளும் சுயபுராணத்தில் வெள்ளை எஜமானர்களின் கால்களை சாவர்கர் மன்னிப்புக் கடிதங்களின் மூலம் நக்கியதோ, ஆர்.எஸ்.எஸ் நிறுவனத் தலைவர் ஹெட்கேவார் வெள்ளை அரசாங்கத்திடம் விடுதலைப் போராட்ட வீரர்களைக் காட்டிக் கொடுத்து அப்ரூவராக மாறியதோ, காந்தி கொலைக்காக ஆர்.எஸ்.எஸ் தடை செய்யப்பட்டதோ, காந்தி கொலைச் சதியில் இந்துத்துவ கும்பல் பங்கேற்றதோ, எமெர்ஜென்சியின் போது இந்திரா காந்தியின் காலில் விழுந்ததோ – இவையெதுவும் இருக்காது என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது.
தங்களது சுயவரலாற்றோடு சேர்த்து மோடியின் பணமதிப்பழிப்பு நடவடிக்கை உள்ளிட்ட சாதனைகளையும் மேற்கண்ட நூலில் தொகுத்துள்ளனராம். 
பணமதிப்பழிப்பு நடவடிக்கையைத் தொடர்ந்து ஏ.டி.எம் வாயில்களில் வரிசையில் நின்று மாண்டு போனவர்களின் பெயர் பட்டியல் இருக்கும் வாய்ப்பு இல்லை.
விசயம் என்னவென்றால் அதிகாரத்தில் இருப்பதைப் பயன்படுத்திக் கொண்டு கட்சியின் கொள்கைகளை பள்ளி மாணவர்களைப் படிக்கச் செய்கிறார்கள் என்பது தான். 
இன்று உத்திரபிரதேசத்தில் நடந்தது நாளை தமிழகத்திலும் நடக்கும் வாய்ப்புகளை மறுப்பதற்கில்லை – அடிமைகளின் ஆட்சியில் ஆர்.எஸ்.எஸ் வரலாற்றை அதிகாரப்பூர்வ பாட திட்டமாகவே மாற்றினாலும் ஆச்சர்யப்பட ஒன்றுமில்லை.
செய்தி  :BJP All Set to Test UP School Students on Hindutva Propaganda

செவ்வாய், 1 ஆகஸ்ட், 2017

பாஜக இந்தியா

பாஜகவின் அஸ்திரங்கள்

இதுவரை இல்லா அளவு மோடி ஆட்சியில் புதிய இந்தியா பிறந்துள்ளது உண்மைதான்.

ஆனால் இது இதுவரை இருந்த இந்தியா போல் அகிம்சை தனம் உள்ளதாக இல்லாமல் வன்முறை வளர்ந்தோங்கும் பரந்த இந்தியாவாக இருப்பதுதான் வேதனை.


பரந்த இந்தியா என்பதை விட பாஜக இந்தியா என்பதே சரி.



மத்தியில் ஆட்சியை பிடித்து ஒட்டுமொத்தமாக இந்தியாவை சீரழிப்பதுடன் பாஜக திருப்தி அடையவில்லை.

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநிலமும் பாஜகவே ஆள வேண்டும் என்பதே அதன் பரந்த இந்தியக் கனவாக உள்ளது.
அதற்கு ஆர்.எஸ்.எஸ் பாஜகவை தூண்டுகிறது.

தூண்டுகிறது என்பதை விட பாஜக என்ற முகமூடியை கழற்றிவிட்டு ஆர்.எஸ்.எஸ். அதிகாரத்தை கையில் எடுத்துக்கொண்டது என்பதுதான் தற்போதைய சுடும் உண்மை.

குடியரசுத்தலைவர் ஒரு ஆர்.எஸ்.எஸ்.,பிரதமர் மோடியைப்பற்றி சொல்லவே வேண்டாம்.
வாஜ்பாய் ஆர்.எஸ்.எஸ் பின்னணியில் இருந்தாலும் பாஜக முகமூடியை வைத்து சற்று மென்மையாக இந்துத்துவாவை அரசில் திணித்தார்.


ஆனால் மோடி அதிரடிதான்.
காரணம் இந்திய மக்கள் போலியாக காட்டப்பட்ட அவரின் திறமை மிக்க  டிஜிட்டல் உருவத்தை கண்டு ஏமாந்து கொடுத்த மக்களவை பெரும்பான்மை.
அது மோடி கிடைத்த ஐந்தாண்டு காலத்தில் எவ்வளவு இந்துத்துவா அரசை உருவாக்க வேண்டுமோ அத்தனையை ஆக்கி கொள்ள வசதியாகிவிட்டது.

 இந்துத்துவாவை கண்டிப்புடன் இந்தியாவில் திணித்தாலும் இந்திய தனித்தன்மையை கெடுக்கும் வகையில் மோடி அரசு நடந்து கொள்வதுதான் கொடுமை.

அரசு துறைகள் அனைத்திலும் தனியார்,அந்நியமயமாக்கல்.ஏழை மக்களுக்கான சலுகைகள் முழுக்க நீக்கம்.
இதை விடக்கொடுமை விவசாய நிலங்களை எந்த எதிர்ப்பும் இல்லாமல் எடுத்து கார்பரேட்களுக்கு தாரை வார்க்கும் மசோதா நிறைவேற்றம்.

அதன் மூலம் விவசாயத்தை அடியோடு அழித்து இந்தியா விவசாய நாடு என்பாதை ஒழித்து புதிய இந்தியாவை கொண்டுவந்தது.
உற்பத்தி துறையிலும் இந்தியா வீழ்ச் சிக்கண்டு  உலக அளவில் வளமிக்க நாடுகளில் பட்டியலில் இருந்து விளக்கப்பட்டதும் மோடியின் சாதனைகளில் ஒன்று.

விலைவாசிகள் உயரும் அதே நேரம் அதற்குப்போட்டியாக வேலைவாய்ப்பின்மையும் அதிகரித்துக்கொண்டு வருகிறது.
வெளிநாடுகளில் பணிபுரியும் இந்தியர்கள் வேலையிழப்பை தடுக்க மோடியின் வெளிநாட்டு பயணங்கள் கொஞ்சமும் உதவவில்லை.

மாறாக மோடிக்கு அவை மக்கள் பணத்தில் இன்ப சுற்றுலாவாகத்தான் அமைந்துள்ளது.வெளிநாடுகளில் பல்வேறு மாறுவேட உடைகளில் ஆடவு ம்,செல்பி எடுக்கவுமே இந்த பயணங்களால் ஏற்பட்ட பலன்.

கோவா,மணிப்பூர்,அசாம் என மாநிலங்களில் தேர்தல்களில் மக்களால் பாஜக ஒதுக்கப்பட்டு காங்கிரஸ் தேந்தெடுக்கப்பட்டாலும்,குறுக்கு வழியில் பணம்,பதவி ஆசை,மிரட்டல் மூலம் ச.ம.உ,க்களை விலைக்கு வாங்கி அசிங்கமான முறையில் ஆட்சியமைத்துள்ளது பாஜக.

தமிழ்  நாட்டில் ஊழல் வழக்கு இல்லா அதிமுக தலைவர்கள் இல்லை என்ற நிலை பாஜகவுக்கு வசதியானது.

வருமானவரித்துறை,அமுலாக்கத்துறை மூலம் அதிமுக தலைவர்களை மிரட்டி பொறுப்பு ஆளுநர் மூலம் பாஜகவே ஆண்டுவருகிறது.

புதுசேரியில் காங்கிரஸ் ஆட்சி  என்றாலும் கிரண்பேடி என்ற பாஜக ஆளுநர் மூலம் தேர்தலில் மூன்றாம் இடத்தில் தோல்வியை கண்ட பாஜக தலைவர் உட்பட 3 பாஜகவினரை தன்னிச்சயாக பதவியேற்பை நடத்தி குழப்பத்தை கொண்டு வந்துள்ளது.அதற்கு முன்னரே ஆளுநர் முதலமைச்சர் அதிகாரங்களில் தலையிட்டு குழப்பத்தை உண்டாக்கி வந்தார்.

 இப்போது கேரளாவில் வன்முறை கொலைவெறியாட்டம் மூலம் கால் பாதிக்க முயன்று வருகிறது.
ஆர்.எஸ்.எஸ்.காரர் ஒருவர் கொலையாக ,அவரை கொன்றது மார்க்சிஸ்ட் கள் என்று ஒப்பாரி வைத்து உடனே பந்த் நடத்தி வன்முறையில் இறங்கி அரசியல் செய்த பாஜக கொலையாளிகள் 6 பேர்கள் கைது செய்யப்பட்டதும் அதில் பலர் ஆர்.எஸ்.எஸ் தீவிரவாதிகள் என்பதும் அம்பலப்பட்டு கேரளா மக்கள் முன் அம்மணமாயுள்ளது.

பீகாரில் பணம்,பதவி ஆசையில் நிதிஷ் குமாரை விலைக்கு வாங்கி கூட்டணி ஆட்சி அமைத்தாயிற்று.
இதில் பாஜகவை எதிர்த்து லாலுவுடன் கூட்டணி வைத்து வென்ற நிதிஷ் குமார் அதே பாஜகவுடன் தற்போது கூட்டணி வைத்திருப்பது இந்திய அளவில் மோசமான அரசியல் வாதியாக நிதிஷ் குமாரை பிரகடனப் படுத்தி விட்டது.

ஆக பாஜக முழுமையாக முகத்திரையை விலக்கி ஆர்.எஸ்.எஸ் என்ற உண்மை கோரமுகத்தை காட்ட ஆரம்பித்து விட்டது.
மாநிலங்களில் ஆட்சியை பிடிக்க எந்த அளவும்,எந்த இழி செயலை செய்யவும் இறங்கும் என்பதை தனது அடுத்தடுத்த செயல்களால் வெளிப்படுத்தி விட்டது.

எதிர்க்கட்சிகள் பாஜகவின் பணம்,பதவி,மிரட்டல்,கடத்தல்,கொலை போன்ற ஆட் சேர்ப்பு அஸ்திரத்துக்கு பதிலடி கொடுக்க திணறுகின்றன.
அதற்கு பாடம் கற்பிக்கும் தகுதியுடையவர்கள் இந்திய மக்களே.

ஆனால் எந்த பொத்தானை அமுக்கினால் தாமரைக்கு வாக்கு விழும் வாக்குப்பதிவு எந்திரத்தை அதிகம் கையில் வைத்துள்ள தேர்தல் ஆணையம்,வருமானவரி ஏவல் துறை,அமுலாக்க ஏவல் துறை வைத்து காலை அழுந்த பதித்துள்ள ஆர்.எஸ்.எஸ் பாஜகவை எதிர்க்க மக்களால் முடியுமா என்பதுதான் அச்சத்தை தரும் கேள்வி.

======================================================================================

சனி, 29 ஜூலை, 2017

இந்தியா 300% பணக்கார நாடானது.

பாஜக தேசிய தலைவர் அமித்ஷாவின் சொத்து மதிப்பு 5 ஆண்டுகளில் 300% உயர்ந்திருப்பது தொடர்பான செய்திகள் இணையதளங்களில் திடீரென நீக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

ராஜ்யசபா தேர்தலில் குஜராத் மாநிலத்தில் இருந்து அமித்ஷா போட்டியிடுகிறார்.

 இத்தேர்தலுக்காக அமித்ஷா வேட்பு மனுவும் தாக்கல் செய்துள்ளார். 

 300% உயர்வு அமித்ஷா தாக்கல் செய்த வேட்புமனுவில் இடம்பெற்றுள்ள 
அவரது சொத்து மதிப்புகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


கடந்த 5 ஆண்டுகளில் அமித்ஷாவின் சொத்து மதிப்பு கிடுகிடுவென உயர்ந்து 300% அதிகரித்துள்ளது. 

மித்ஷாவின் அசையும் சொத்துகள் ரூ1.90 கோடியில் இருந்து ரூ19 கோடியாக அதிகரித்துள்ளது. 
மனைவிக்கு தனியே  ரூ10.38 அசையும் சொத்து இருப்பதாகவும் அமித்ஷா குறிப்பிட்டுள்ளார்.
அதேபோல மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியின் சொத்துகள் 80% உயர்ந்துள்ளது. 
2014-ம் ஆண்டு ரூ 4.91 கோடியாக இருந்த சொத்து மதிப்பு தற்போது ரூ.8.88 கோடியாக அதிகரித்துள்ளது.

திடீர் நீக்கம் இச்செய்தியை ஆங்கில இணையதளங்கள் செய்திகளாக வெளியிட்டிருந்தன. 
ஆனால் திடீரென இந்த செய்தி மட்டும் அந்த இணையதளங்களில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. 
கூகுள் சர்ச் அதேநேரத்தில் கூகுள் சர்ச்சில் நீக்கப்பட்ட செய்திகளின் லிங்குகள் இப்போதும் இருக்கின்றன. 


அமித்ஷாவின் சொத்து மதிப்பு கிடுகிடுவென உயர்ந்திருப்பது தொடர்பாக பெரும்பாலான வட இந்திய ஊடகங்கள் மவுனம் காத்தே வருகின்றன. 

மவுனம் ஏன்? தமிழகத்தைச் சேர்ந்த அரசியல்வாதிகளின் சொத்து மதிப்புகள் இப்படி விஸ்வரூபமெடுத்திருந்தால் வட இந்திய ஊடகங்கள் கிழித்து தொங்கவிட்டிருக்கும். 
கருத்தியல் முறை கணக்கீட்டில் ஊழல் எனப்படும் 2ஜி ஏலத்தை ஊழல் என்று இன்றுவரை முக்கிய இடம் கொடுத்து எழுதித்தள்ளும் வட இந்திய ஊடகங்கள் இதை கண்டு கொள்ளாதது ஊடகத்தர்மத்தை வெளிக்காட்டுகிறது.
ஏற்கனவே வெளியான செய்தியை யாருக்கு பயந்து நீக்கின ?

இப்படி கால்நடுங்கும் தைரிய ஊடகங்கள் மற்றவர்கள் ஊழல் பற்றி பேச என்ன தகுதியை பெற்றிருக்கின்றன.?

அமித்ஷா விவகாரத்தில் மட்டும் எந்த ஒரு ஊடகமும் வாயே திறக்காமல் இருப்பதுதான் பத்திரிகை தர்மமா? என்பது பொதுமக்களின் கேள்வி.

ஊழல் அல்லாமல் ஒருவரின் சொத்து மதிப்பு 300 மடங்கு கூடுவது எப்படி?

தொழில் செய்யாமல் முழு நேர கடசித்தலைவராக இருப்பவர் சொத்து எந்த வழியில் இப்படி 300 மடங்காகும்.

 ஊழலை ஒழிக்க அவதார் எடுத்திருக்கும் மோடி கார்ப்பரேட் கட்சி பாஜக இதை பற்றி விக்குமா?
மற்றவர்கள் எலும்பை பரிசோதித்து அறிக்கை விடும் எலும்பு எச்ச.ராசா இதற்கு என்ன சொல்லப்போகிறார்.?

அமித்ஷா சொத்து மதிப்பு செய்தி வெளியிட்டு பின் நீக்கப்பட்ட ஆங்கில தளப் பக்கங்கள்.


புதன், 26 ஜூலை, 2017

கீழடி....அழித்தொழிப்பு...

கீழடி அகழ்வாய்வில் கிடைத்த ஆதாரங்கள் பழந்தமிழ் சமூகத்தின் நகர நாகரிகத்திற்கான விஞ்ஞானப்பூர்வமான ஆதாரம் என்றும், கீழடியை இந்துத்துவா சக்திகளின் அழித்தொழிப்பு நடவடிக்கைகளில் இருந்து பாதுகாக்க வேண்டும். 

‘கீழடி அகழ்வாய்வு என்பது திராவிடர் மற்றும் தமிழர் வரலாறு மற்றும் நாகரிகத்திற்கு கிடைத்த கொடை’ 110 ஏக்கர் பரப்பளவு கொண்ட தொல்லியல் மேட்டில் 50 செண்ட் அகழ்வாய்விலேயே 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரிய பொருட்கள் கிடைத்துள்ளன.

 ‘‘கிடைக்கப்பெற்ற ஒவ்வொரு பொருட்களின் ஆய்விலும், பெண்களின் கல்வியறிவு, கடல் சார்ந்த வணிகம், நீர்மேலாண்மை, சமயமற்ற வாழ்முறை உள்ளிட்ட பல்வேறு ஆதாரங்கள் கிடைத்துள்ளன. மத்திய தொல்லியல்துறையின் ஐந்து பிரிவுகளில் ஒரு பிரிவு தான் தென்னிந்தியாவில் உள்ளது. 
நாற்பதுஆண்டுகளில் இத்துறை ஐந்து சதவீத அளவுக்கு கூட தமிழகத்தில் ஆய்வு நடத்தவில்லை. நீண்டஇடைவெளிக்கு பிறகு மைசூர் மத்திய தொல்லியல் பிரிவு தலைவராக பொறுப்பேற்ற அமர்நாத் ராமகிருஷ்ணன் என்கிற தமிழர், வைகை நதிக்கரையிலும் ஒரு நாகரிகம் இருந்தது, அதை ஆய்வு செய்வோம் என பணியைத் தொடங்கினார். 

இந்த ஆய்வின் ஒவ்வொரு படிக்கும் முன்பு பெரும் போராட்டம் நடைபெற்றுள்ளது. ர ஒரு சமூகப் புறக்கணிப்பின் வலியுடன் தொடங்கப்பட்ட ஆய்வே கீழடி. இன்னும் அதற்கான போராட்டத்தை நடத்திக்கொண்டே இருக்கிறோம்.

அசோகரின் கல்வெட்டே இந்தியாவின் வரலாற்று காலகட்டத்தை மாற்றியது. ஒரு கல்வெட்டைத் திறந்தால் பல கற்பிதங்கள் தகர்ந்துவிடும். கீழடியைக் கண்டு அஞ்சுவதற்கும், கீழடி தமிழர்க்கு மகத்தான ஆயுதமாக மாறியதற்கும் இதுதான் காரணம்.

உலகிலேயே மிக அதிகமாக சுமார் 1 லட்சம்கல்வெட்டுக்கள் இந்தியாவில் தான் கண்டுபிடிக்கப்பட்டன. அதில் 65 ஆயிரம் தமிழ் நாட்டில் கண்டெடுக்கப்பட்டவை. 

அதில் பழமையான பிராமி எழுத்துகள் கொண்டவை 93.அவற்றில் 24 கல்வெட்டுக்கள் வைகை நதிக்கரையில் தான் கிடைத்துள்ளன. எனவே அங்கு நதிக்கரை நாகரிக, கல்விகற்ற சமூகம் இருந்ததற்கான அடையாளம் உறுதியாகிறது.

கீழடி தொல்லியல் ஆய்வில் இதை உறுதிப்படுத்தும் ஆதாரங்களாக இரண்டாயிரம் ஆண்டு முந்தைய புத்தர் கால மண் கலயம், அசோகர் கால கல்வெட்டு, ஆப்கான் சூது பவளம், தந்தத்தில் சீப்பு, சதுரங்கம், தாயக்கட்டைகள் உள்ளிட்ட பொருட்கள் கிடைத்துள்ளன. கீழடியில் ஒரு தொழிற்சாலை கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இங்குள்ள குடியிருப்புகளில் மூன்று விதமான வடிகால் அமைப்பு, ஒரே மாதிரியான 33 செ.மீ செங்கற்களால் அமைந்த அஸ்திவாரமில்லா குடியிருப்புகள், எழுத்துக்களைக் கொண்ட 72 பானை ஓடுகள் என கணிதம், கல்வி, கட்டுமானம், தொழில் அனைத்திலும் சிறந்து விளங்கியதற்கான சுமார் ஐயாயிரத்து 800 பொருட்கள் ஆதாரங்களாக கிடைத்துள்ளன.

கீழடியில் கிடைத்த ஆவணங்களை ஆய்வுக்கு அமெரிக்கா அனுப்ப அனுமதி கோரப்பட்டது. ஆனால் 10 மாதிரிகளில் இரண்டை மட்டுமே ஆய்வுக்கு அனுப்பஅனுமதித்து வெறும் ரூ.1 லட்சம் நிதி ஒதுக்கியது மத்திய மோடி அரசு.

அதே வாரம் அயோத்தியில் ராமர் அருங்காட்சியகம் அமைக்க ரூ.100 கோடி ஒதுக்கப்பட்டது. ர ஏன் தமிழர் வரலாற்று ஆவணங்கள் முடக்கப்படுகின்றன என்பதற்கு இதை விட பெரிய விளக்கம் தேவையில்லை.

கி.மு 200-கி.மு 195 ஆம் ஆண்டுகளில் மக்கள்வாழ்ந்ததற்கான தொல்பழங்காலம் முதல் வரலாற்றுக்காலம் வரையிலான தமிழரின் ஆதாரங்கள் கீழடியில் இருக்கின்றன.
சங்க இலக்கியங்களில் தமிழர் நாகரிகத்தின் அனைத்து அம்சங்களும் சொல்லப்பட்டிருக்கின்றன. ஆனால் இலக்கியங்களை வரலாறாக ஏற்கமாட்டார்கள்.

இப்போது அதைவிட மேன்மையான சமூகமாகதமிழர்கள் வாழ்ந்தார்கள் என்பதற்கான ஆதாரம் கீழடியில் கிடைத்திருக்கிறது. கீழடியில் கிடைக்கப்பெற்ற ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட பொருட்களில் ஒரு பொருள் கூட மதம் சார்ந்த பொருட்களாக இல்லை. 

இந்நிலையில் அதை யாரும்அழித்து விடக்கூடாது. 

வரலாற்றை திரித்து விடக்கூடாது என்பதில் மார்க்சியர்கள், அம்பேத்கரிஸ்டுகள், பெரியாரிஸ்டுகள் கவனமாக இருந்து கீழடியை பாதுகாக்க வேண்டும்.


திங்கள், 24 ஜூலை, 2017

கறுப்பு ஜூலை ........

ஆடிக்கலவரம் என்ற கருப்பு ஜூலை என்பது ஜூலை 23, 1983 தொடக்கம் இரண்டு கிழமைகளுக்கு மேலாகத் திட்டமிட்ட முறையில் சிங்கள இனவாதிகள் இலங்கைத் தமிழர்களைக் கொடுமைப்படுத்தியும், சொத்துகளை அழித்தும் கைப்பற்றியும், 3000 பேர் வரை படுகொலை செய்ததுமான ஒரு துன்பவியல் நிகழ்வாகும்.
 இது தமிழீழ விடுதலைப் புலிகள் 13 இலங்கை படையினரை யாழ்ப்பாணம், திருநெல்வேலியில் படுகொலை செய்ததின் தூண்டுதல் விளைவு எனப்பட்டபோதும், இந்நிகழ்வின் ஒருங்கிணைப்பு முறை ஒரு திட்டமிட்ட செயற்பாடாகவே நம்பப்படுகிறது. கறுப்பு ஜூலை நிகழ்வுகளே இலங்கை இனப்பிரச்சினை ஆயுதப் போராட்டமாக மாறக் காரணமானதாகப் பார்க்கப்படுகின்றது.
jy 25
வெலிக்கடை சிறைச்சாலைப் படுகொலைகள் ஜூலை 1983 இல் இலங்கையில் இலங்கைத் தமிழர்களுக்கெதிராக இடம்பெற்ற கறுப்பு ஜூலை வன்முறை நிகழ்வுகளின் போது இடம்பெற்ற உச்சக்கட்ட நிகழ்வைக் குறிக்கும். இதன் போது மொத்தம் 53 தமிழ் அரசியல் கைதிகள் கொழும்பின் அதிஉயர் பாதுகாப்பு சிறைச்சாலையில் சக சிங்களக் கைதிகளால் குத்தியும் வெட்டியும் படுகொலை செய்யப்பட்டனர். 
இப்படுகொலை நிகழ்வில் எவரும் இதுவரையில் குற்றஞ்சாட்டப்பட்டுத் தண்டிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
25-7-1983-இல் இலங்கையில் இனவெறி கோரத் தாண்டவமாடிக் கொண்டிருந்தது. தமிழ் இனப் படுகொலைகள், கொள்ளைகள், கற்பழிப்புகள், தீவைப்புகளில் சிங்கள இனவெறியர்கள் மும்முரமாக ஈடுபட்டிருந்தார்கள். 
அன்று பிற்பகல் இரண்டு மணியில் இருந்து ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்ட சிறிது நேரத்திற்குப்பின் சிறை அதிகாரிகள் தமது திட்டத்தை மிகவும் நுட்பமாக நிறைவேற்றத் தொடங்கினார்கள். ரெஜஸ்-துணைத் தலைமை சிறை அதிகாரி, சமிதரத்ன-சிறை அதிகாரி, பாலித-காவலதிகாரி. ஆகிய மூன்று சிறை அதிகாரிகளுமே இனப் படுகொலைக்கு சிறைக்குள்ளே திட்டம் போட்ட சூத்ரதாரிகள்.
திட்டமிட்டபடி இவ்வதிகாரிகள் குறிப்பிட்ட சிறைக் கைதிகளைத் தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு சாராயம், கசிப்பு போன்ற மது வகைககளைக் கொடுத்து, உற்சாகப்படுத்திக் கொலை வெறியைத் தூண்டினர். அந்த நேரத்தில் சிறைச்சாலை உயரதிகாரிகள் மதிய உணவுக்காகத் தத்தம் வீடுகளுக்குச் சென்றிருந்தனர். 
உயர் அதிகாரிகள் சிறையில் இல்லாதபோது நடந்த வன்முறையெனத் தப்பித்துக் கொள்ள இந்த ஏற்பாடு.
தருணம் பார்த்துக் கொண்டிருந்த கொலை வெறியர்கள் தங்கள் வெறியாட்டத்தை ஆரம்பித்தார்கள். மணி பிற்பகல் 2.30. பயங்கர வெறிக்கூச்சல் எழுப்பிக் கொண்டு கொலைகாரர்கள் ஆயுதபாணிகளாகத் தமிழ் அரசியல் கைதிகள் வைக்கப்பட்டு இருந்த சப்பல் கட்டடத்தை நோக்கி ஓடி வந்தார்கள். 
தமிழ் அரசியல் கைதிகள் வைக்கப்பட்டிருந்த சிறைக் கூடங்களின் கதவுகள் ஏற்கெனவே இனவெறியர்களின் வரவுக்காகத் திறந்து வைக்கப்பட்டு இருந்தன. கத்திகள், பொல்லுகள், வாள், கோடரிகள், இரும்புக் கம்பிகள், குத்தூசிகள், விறகுக் கட்டைகள், தமிழ் இளைஞர்களின் உடல்களில் பதம் பார்க்கத் தொடங்கின.
வீரத்தமிழ் இளைஞர்களின் செங்குருதி சிலுவைக் கட்டடத்திற்குள் ஆறாக ஓடத் தொடங்கியது. தலைகள் பிளக்கப்பட்டன. கண்கள் தோண்டப்பட்டன. இதயங்கள் கிழிக்கப்பட்டன. 
குடல்கள் உறுவப்பட்டன. குரல்வளைகள் அறுக்கப்பட்டன. கை, கால்கள் துண்டிக்கப்பட்டன. 
இவ்வளவு கொடூரச் சித்திரவதைகளும் சிறைக்காவலர் முன்னிலையிலேயே நடைபெற்றன.
சிங்கள சிறைக்கைதிகள், தமிழ் அரசியல் கைதிகளைக் கொல்வதை இனவெறி பிடித்த சிங்கள சிறைக் காவலர் பார்த்து ரசித்தார்கள். 
கொலைகள் முடிந்தவுடன் கண்துடைப்பு நடவடிக்கையாக வெளியே காவலுக்கு நின்ற இராணுவ வீரர்கள் (தமிழ் அரசியல் கைதிகள் தப்பியோடாது இராணுவ வீரர்கள் வெலிக்கடையில் தொடர்ந்து காவலுக்கு நின்றார்கள்) உள்ளே அழைக்கப்பட்டார்கள். உள்ளே வந்த இராணுவ வீரர்கள் கொலை வெறிக்கு உரமூட்டினார்கள்.
ஆகாயத்தை நோக்கி வேட்டுகளைத் தீர்த்தும் இப்படுகொலைக்குத் தமது தார்மீக ஆதரவையும், மகிழ்ச்சியையும் தெரிவித்தார்கள். வெலிக்கடையில் இப்படுகொலைகள் நடைபெற்றுக் கொண்டு இருந்த வேளை ஹெலிகாப்டர் ஒன்று வெலிக்கடைச் சிறையின்மேல் தாழப் பறந்து கொண்டு இருந்தது. இது வெலிக்கடைக் கொலைக்கும் அரசாங்க உயர் மட்டத்திற்கும் இருந்த தொடர்பை உறுதிப்படுத்துகிறது.

குட்டிமணி, ஜெகன் ஆகியோருக்கு மரண தண்டனை கிடைத்த வேளையில் அவர்கள் இருவரும் தங்களது கண்களைக் கண்பார்வையற்ற தமிழர்களுக்கு அளிக்கும்படியும் அதன்மூலம் மலரவிருக்கும் ஈழத்தைப் பார்க்க வேண்டும் என்றும் உருக்கமான பொருள் நிறைந்த வேண்டுகோளை நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தனர்.
இதே காரணத்திற்காகக் குட்டிமணி குற்றுயிருடன் வெளியே இழுத்துவரப்பட்டு, சிறைச்சாலையின் மத்தியில் போடப்பட்டார்.
 சிங்கள வெறியர் விசிலடித்து ஆர்ப்பரித்து “”ஜெயவேவா” (மகிழ்ச்சி ஆரவாரம்) கோஷம் எழுப்பிக் குட்டிமணியின் கண்கள் இரண்டையும் கூரிய ஆயுதம் ஒன்றினால் தோண்டியெடுத்தனர்.
குட்டிமணியின் கண்கள் தோண்டியெடுக்கப்பட்டதும் சிங்களக் கைதிகள் கைதட்டி விசிலடித்து வெறியுணர்ச்சி பொங்க ஆர்ப்பரித்தனர். 
அதே வேளை குட்டிமணியின் கண்களைத் தோண்டிய இனவெறியன் ஏனைய சிங்களக் கைதிகளினால் தோளில் தூக்கப்பட்டுச் சிங்கள வீரனாகக் கொண்டாடப்பட்டான். 
ஏனைய கைதிகள் குட்டிமணியின் உடலைக் குத்திக் கிழித்து அவரின் ஆணுறுப்பையும் வெட்டினார்கள். இறுதியாக 15 வெறியர்கள் குட்டிமணியின் குருதியைக் குடித்தனர்.
பின்னர் சிங்கள இனவெறியர் அங்கு அமைக்கப்பட்டிருந்த புத்த விகாரையின் புத்தர் சிலையின் முன் குட்டிமணியின் உடலை நிர்வாணமாக்கிப் போட்டார்கள். 
இவ்வாறாக ஜெகனின் கண்களும் தோண்டப்பட்டு ஆணுறுப்பு வெட்டப்பட்டு அவரின் உடலும் நிர்வாணமாகப் புத்தர் சிலையின் முன்னால் வீசப்பட்டது. காட்டுமிராண்டித் தனமான கூச்சல்களுக்கு மத்தியில் ஏனைய தமிழ் இளைஞர்களும் சித்திரவதை செய்யப்பட்டுக் கொல்லப்பட்டு, நிர்வாணமாக்கப்பட்டு புத்தரின் காலடியில் எறியப்பட்டனர்.
சிங்கள புத்த வெறியர்கள், தமிழிளைஞர்களின் தலைகள், கண்கள், கால்கள், கைகள், உடல்கள், செங்குருதி யாவற்றையும் புத்தருக்கு காணிக்கையாக அளித்தனர். 
இப்படுகொலைகள் நடைபெற்ற தினத்திற்கு முதல்நாள் புத்தர்களின் புனிதநாளான போயா தினமாகும். போயா தினத்தில் உபவாசம் இருந்து “”சில்” அனுஷ்டித்தவர்கள் மறுநாள் இப்படுகொலையில் சம்பந்தப்பட்டிருந்தனர்.
சிறுவன் மயில்வாகனத்திற்கு ஏற்பட்ட மரணம் மனதை உருக்குவதாகும். இச்சிறுவன் கப்பற்படையினரின் தண்ணீர் எடுத்துச் செல்லும் வாகனத்திற்கு (பவுசர்) பொன்னாலைப் பாலத்தடியில் வெடிகுண்டு வைத்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டுக் காவலில் வைக்கப்பட்டிருந்தான்.
இச்சிறுவன் சப்பல் கட்டடத்திற்கு வெளியே சாதாரண கைதிகளுக்கு உணவு வழங்கப்படும் இடத்தில் மறைந்திருந்ததைக் கண்ணுற்ற சிறை அதிகாரி சமிரத்ன அச்சிறுவனின் தலைமயிரைப் பிடித்திழுத்துக் கத்தியால் அவன் குரல்வளையை வெட்டினான். இரத்தம் பீறிட்டுவர அச்சிறுவனும் புத்தருக்குக் காணிக்கையாக்கப்பட்டான். 
இச்சிறுவனைப் படுகொலை செய்த சமிதரத்ன ஒரு பட்டதாரியாவான் என்பதும் வெட்கக் கேடான உண்மையாகும்.
சிறைச்சாலை வாகனத்தில் ஈழ விடுதலைப் போராட்ட இளைஞர்களின் உடல்கள் முழு நிர்வாணமாகப் போடப்பட்டன. 
அந்த உடல்களின் மத்தியில் உயிர்ப் பிரிவின் முனகல் கேட்டபோது கொலை வெறியர் பொல்லால் அடித்து கம்பியால் குத்தி அவ்வொலிகளை நிரந்தரமாக நிறுத்தினார்கள்!
ஆக யூலை மாதம் பிறந்தநாளைக் கொண்டாடுவோரும் ஆண்டு விழாக்களை கொண்டாடுவோரும் கூட அந்த நாட்களை சிலநேரம் மறந்துவிடலாம். 
ஆனால் உலகில் வாழும் தன்மானத் தமிழர்கள் எவரும் யூலை மாதக் கலவரத்தையும் சிறைப் படுகொலைகளையும் என்றும் மறக்க மாட்டார்கள். அப்படி மறப்பவர்களாய் இருந்தால் அவர்கள் தமிழராக இருக்க மாட்டார்கள்.
இந்த வரிசையில் வரலாறு படைத்த தோழர்கள் குட்டிமணி தங்கதுரை ஜெகன் மற்றும் கொல்லப்பட்ட அனைத்து தோழர்களும் இன்று தமிழர் வரலாற்று சின்னங்களாக திகழ்கின்றார்கள். அவர்களுக்கு எங்கள் வீர வணக்கங்கள்.
                                                                                                                                   ரா.குமரவேல்,
ஆந்தை  ரிப்போர்ட்டர் உதவியுடன்,
=======================================================================================

.“ஷாக்கடிக்குது சோனா.. நீ நடந்து போனா.. !”

  டிக்-டாக்கால் வாழ்க்கை போச்சு மதுரை ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும், தல்லாகுளம் பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும் செல்ப...