வியாழன், 30 ஆகஸ்ட், 2018

பொன்(னான சீமான்) மொழிகள்...,

முதலில் இடதுசாரி,பெரியாரிய போராளியாக வீரம் காட்டி தமிழகத்தில் பார்ப்பரப்பானவர் சைமன் .அதாவது சீமான்.
ஆனால் கடைசியில் பெரியாரையே கிண்டல் செய்யுமளவு பெரியவராக உயர்ந்தார்.
முருகனும்,பெருமாளும் அவருக்கு முப்பாட்டன்களாகி விட்டனர்.
ஆனால் வர ,வர மாமியா கழுதைப் போல என்ற பழமொழிக்கேற்ப சீமானான சைமன் 
பேசுவதெல்லாம்  அவரை  சாதாரண மனிதராக இல்லாமல் கீழ்ப்பாக்கம் தல போல் இனம்காட்டுகிறது.
வாயைத்திறந்தாலே பாஜக ,எச்ச .ராஜா வுக்கு போட்டியாக கற்பனைகள்,பொய்கள் தாம்.
இதோ அவர் கலந்துகட்டி அடித்த கற்பனைத்துளிகளில் சில.

◆ பிரபாகரன் இருந்த இடத்தில் சீமான் இருந்திருந்தால் ஒரு சிங்களன் உயிரோடு இருந்திருக்க மாட்டான்'


◆ நான் ஒருநாள் கோவிச்சுட்டு இருந்தேன். சிவாஜி ஐயா வந்தாரு. 'என்னடா ராஜா உன் பிரச்னை'ன்னு கேட்டாரு. 'என்ன எழுதிக் கொடுத்தாலும் கிழிச்சுப் போடுறாங்க'ன்னு சொன்னேன். 'உனக்கு என்ன தோணுதோ அதை என்கிட்டே சொல்லிடு. நான் 'டேக்'ல பேசி விட்டுடுறேன். பேசிட்டு ஓகேவா'ன்னு கேப்பாரு. 'நானும் ஓகே'ன்னு சொல்லுவேன்."

◆ நாற்பதாயிரம் டன் அரிசியைச் சுமந்து நடுக்கடலில் வந்துகொண்டிருந்த ஆஸ்திரேலியக் கப்பலை வழியில் நிறுத்தி விட்டுட்டுப் போகச் சொன்னார் பிரபாகரன். உடனே அவர்கள் போனார்கள். அந்தக் கப்பலைத்தான் எனக்கு சுட்டுப் பழகிக்கக் கொடுத்தார்."
( சைமன் வீரத்தமிழன் பிரபாகரனை சந்திக்க ஒதுக்கப்பட்ட நேரம் 5 நிமிடம்தான்.அதுவும் புகைப்படம் எடுப்பதற்காக மட்டும்.)

◆ IPL போராட்டத்தில் காவல்துறை தாக்கப்பட்ட நிகழ்வு வருத்தம் அளிக்கிறது.
அது தவறான விஷயம். தவறு செய்தவர்கள் தண்டிக்கபட வேண்டும். போலீஸ தாக்கிய நபர் என்னுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்து உள்ளார். அந்தநபர் என் கட்சியே கிடையாது. அது யார் என்றே எனக்கு தெரியாது.

◆ விசா வாங்குவதற்காக அமெரிக்கத் தூதரகம் போனோம். ஆயிரக்கணக்கானோர் வரிசையில நின்னுட்டு இருந்தாங்க. கூட வந்த மச்சினன் தங்கர்பச்சான் இவனுக்கு இந்தம்மா விசா கொடுக்காதுன்னு நினைச்சாரு. டை கட்டிட்டு இருந்தவன் எல்லாம் என்னையே பாக்குறான். அந்த வெள்ளைக்கார அம்மாகிட்ட போனேன். என்னுடைய புகைப்படங்கள், வாங்குன பரிசுகள் மற்ற ஆவணங்கள் எல்லாம் அவங்ககிட்ட கொடுத்துட்டு அந்தம்மாகிட்ட வணக்கம்னு சொன்னேன். எதுவுமே கேக்கல வாங்கி வெச்சுட்டு 'ஹாப்பி ஜர்னி'ன்னு சொல்லிடுச்சு!"

◆ஏ.கே 74 ரகத் துப்பாக்கியை நானும் எங்க அண்ணனும் சுட்டுப் பயிற்சி எடுக்கும்போது, 'அண்ணே.. இது ரஷ்யாவுக்கு அப்புறம் வேற எங்க இருக்கு'ன்னு கேட்டேன். 'நம்மகிட்டதான் இருக்கு. இந்தியாவுல இல்ல'ன்னு சொன்னாரு. 'அப்போ இந்தியாவிலேயே ஏ.கே 74ல சுட்டது நான்தானா'ன்னு கேட்டேன். 'ஆமா, அதைப் போய் எல்லார்க்கும் சொல்லு சொல்லுங்கிறாரு!"

◆நம்மகிட்ட குதிரைப்படை இல்ல. யானைப்படைதான். ஒரு கப்பல்ல அறுபதாயிரம் யானைகளை ஏத்திக்கிட்டு போயிருக்கான். போயி போர்லாம் போடலை. அவ்வளவு யானைகளையும் வரிசையா நிறுத்தி இருக்கான். பார்த்த உடனே எதிரி விழுந்துக் கும்புட்டான். நான் சண்டைக்கு வரல. நீ என்ன சொல்றயோ கேக்கறேன்னுட்டான்!"

◆தமிழ்நாடு கிரிக்கெட் அணியை உருவாக்குவேன். 'இந்திய அணி உலகக்கோப்பை விளையாடப்போவதற்கு முன்பு என்னுடைய தமிழ்நாட்டு அணியை வென்றுவிட்டுத்தான் போகணும்'னு சவால் விடுவேன்"

◆ஆமை ஓட்டை மல்லாக்கத் திருப்பிப்போட்டு ஒரு ஆள் பயணம் போவதைப் பார்த்தேன். இருபத்தெட்டு கிலோ ஆமைக்கறியை அண்ணன் பிரபாகரன் எனக்குக் கொடுத்தார்."


◆சிற்பிகளுக்கு மாலை இடையூறாக இருக்குன்னு மாலையை இப்படிப் போட்டு வடிச்சான். ரொம்பநேரம் அந்த வேலையை செய்யும்போது உடல்சூட்டுலேயும், வெயில் வெப்பத்துலேயும் பூ வாடி உதிர்ந்துட்டு வெறும் நூல் மட்டும் அவன் முதுகுல இருந்தது. அந்த நூலுக்கு பேர்ல பூ உதிர்ந்திருந்துச்சு அதனாலே அது பேர் பூணூல்!"

◆ஸ்பீச் எங்க இருந்து வருது. என் பேச்சுக்கு முன்னாடி ஒரு எஸ் போட்டா ஸ்பீச் ஆகுது. 'உடன்'க்கூட ஒரு 'எஸ்' போட்டா 'சடன்',
'தாக்கு' அதை அப்படியே 'ஏ' போட்டு அட்டாக்கு"

◆அதிகாரத்தைக் கைப்பற்றுவோம். கட்டாயப் பாடமாக இந்தியை ஆக்காமல் பஞ்சாபியை ஆக்குவோம். அன்பு உடன்பிறப்புகளுக்காக சீக்கிய மொழியை நாம் படிப்போம்."

◆சீமான் சயனைடு கட்டுவாரா'ன்னு கேக்குறாங்க. நானே சயனைடு தானடா!"

◆பீலா விடுறோம்னே வெச்சுக்கோ. பீலா விடுறத கூட உயர்வா விட்டோமா இல்லையா!"

◆ நல்ல வேலை மெரினாவில் காமராஜரை புதைக்கல. இல்லன்னா என்ன ஆயிருக்கும்...

◆ போன்ன வெய்யிடா ங்கோத்த...
                                                                                                               தொகுப்பு: சீமானின் விழுதுகள்.     
செபசுடீன் சைமன்  
"" பயோடேட்டா
&
 பச்சோந்தி தனமும்""

1, பிறந்தது 1970 சொந்தஊர் சிவகங்கை இன்னும் உறுதிபடுத்தபடவில்லை

2, தனது 15வயது வரை பெரியார் கொள்கையால் ஈர்க்கபட்டதாக சொல்லி கொள்வார் நம்பவேண்டாம்

3, 1985 முதல் 1990 வரை தேசிய காங்கிரஸ் உறுப்பினர் எதுக்காக விளக்கம் தேவை

4,1990 க்கு மேல் மீண்டும் கம்யூனிஸ்ட் கொள்கையால் ஈர்க்கப்பட்டு இணைந்தார்... ஆனால் அந்த கட்சி யில் இருந்து  அடித்து விரட்டப்பட்டார்.....

5,பிறகு பொழப்பு தேடி சென்னை வந்தார் (வந்தேறி) சினிமா இயக்க மணிவண்ணன் பாரதிராஜா விடம் உதவியாளராக சேர்ந்தார்....


6, எப்படியோ 1997 ம் வருடம் பிரபுவை வைத்து பாஞ்சாலங்குறிச்சி எடுத்தார் பிறகு வீரநடை இனியவளே படம் தோல்வியாக காணாமல் போனார் ( தெலுங்கு படத்தில் உதவி இயக்குநரானார்)

7,1999 முதல் 2006 வரை யாரும் புதுக்கதை சொல்ல வரவில்லை வந்திருந்தால் திருடி படம் எடுத்திருப்பார் பிறகு தம்பி படம் எடுக்க இலங்கை சென்றார்.....(அது ஒரு புதிய் கதை)

8, அப்போது தான் முதல் முதலாக ஈழத்தமிழர் வேதனையை அறிகிறார் போலும்....

9, தலைவர் பிரபாகரனின் காசுக்காக சிபா ஆதித்தனாரின் நாம் தமிழர் அமைப்பை தூசு தட்டுகிறார்....
(ராஜ்கிரண் பேட்டியை பார்த்தால் உண்மை விளங்கும் )

10, இதற்கு இடையில் தன்னை புகழ் படுத்திகொள்ள புரட்சி கலைஞர் கேப்டன் ஆரம்பித்த தேமுதிகவில் 2006 தேர்தலில் பணியாற்றியவர் ( முக்கிய குறிப்பு அப்போது விஜயகாந்த் தமிழர்)

11, பிரபாகரன் உயிருடன் இருந்த வரை தமிழ் அமைப்பாக இருந்த கட்சி மறைவு( நான் நம்பவில்லை) பிறகு ஈழமக்களுக்கு குவியும் ஆதரவையும் உதவிகளையும் தனதாக்க அரசியல் கட்சியாக்கினார். சிபா ஆதித்தனார் ஆத்மா கூட மண்ணிக்காது....

12, நாடாளுமன்ற தேர்தல் இலை மலர்ந்தால் ஈழம் மலரும்
தற்போது தமிழனே தமிழ்நாட்டை ஆளவேண்டும்( 2014 ஜெயலலிதா தமிழர்)

13, பெரியார் என் தந்தை தற்போது பெரியார் வந்தேறி வடுகரு

14, பெரியார் கொள்கைதான் நாம்தமிழர் அமைப்பின் முன்னோடி ஆனால் திராவிடம் ஒழிக முப்பாட்டன் முருகன் ( சிரிக்காமல் படிக்கவும்)

15, தற்போது நான் மட்டும் தான் தமிழன் யாரெல்லாம் செலவுக்கு பணம் கொடுத்தாலும் தமிழர் பட்டியலில் இடம்பெறலாம் ( காரிதுப்பகூடாது)
16 நாம் தமிழர் கட்சி தேர்தல் செலவுக்கு கூட மக்களிடம் தான் கையேந்துகிறது ஆனால் அண்ணனுக்கு மட்டும் விலை உயர்ந்த கார் வாங்க காசு?!???

17, தமிழ்நாட்டுக்கு நான்கு தலைநகரம் உருவாக்கப்படும் ( அண்ணே இன்னும் தூக்கத்துல இருக்காரு)

18, தனது மாமனார் காளிமுத்து படம் தலைவர்கள் புகைப்படத்துடன் இணைத்து தமிழராக்கினார்( ஏன் எதுக்குனு கேட்க கூடாது

19, தன் கட்சிக்கு யாரு ஆதரவு தந்தாலும் அனைவரும் தமிழர்கள் இல்லைனா வந்தேறிகள்

20 யாரெல்லாம் தமிழர்கள் என தெரிய அண்ணனை அணுகவும் ஏன்னா அண்ணகிட்டதான் தமிழன் காப்புரிமை மற்றும் பதிப்புரிமை உள்ளது

21, சோழர்கள் தமிழர்கள் ஆனால் அவர்கள் வணங்கிய சிவன் வந்தேறி

22, முருகன் முப்பாட்டன் சிவன் வந்தேறி பார்வதி முப்பாத்தாள்

100% நகைச்சுவை ...
தொகுப்பு - கூகுள் மற்றும் பத்திரிகை செய்திகள்
பின் குறிப்பு 
சீமான் மார்க்சிஸ்ட் கட்சியில் எப்போதும் இருந்ததில்லை. வேறு கம்யூனிஸ்ட் கட்சி எதிலாவது இருந்தாரா என்று தெரியாது. தமுஎச மேடைகளில் ஏற்றியதன் தண்டனையாக தோழர் அருணனை வசை பாடினார் இந்த  அறிவாளி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

.“ஷாக்கடிக்குது சோனா.. நீ நடந்து போனா.. !”

  டிக்-டாக்கால் வாழ்க்கை போச்சு மதுரை ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும், தல்லாகுளம் பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும் செல்ப...