செவ்வாய், 7 நவம்பர், 2017

பாரடைஸ் பேப்பர்ஸ்'



பாரடைஸ் பேப்பர்ஸ்,வெளிநாட்டு முதலீடுகள்,அம்பலம்,714, இந்திய தொழிலதிபர்கள்,அரசியல்வாதிகள்,மோசடி,Paradise Papers


மத்திய அமெரிக்க நாடான பனாமாவைச் சேர்ந்த, 'மோசக் பென்சேகா' என்ற சட்ட, வர்த்தக ஆலோசனை நிறுவனம், போலி நிறுவனங்களின் பெயர்களில் முதலீடு செய்யும் மோசடியில் ஈடுபட்டது குறித்து, சர்வதேச பத்திரிகையாளர்கள் சங்கம், 'பனாமா பேப்பர்ஸ்' என்ற பெயரில் அம்பலப்படுத்தியது. 

பனாமா பேப்பர்ஸ்' மூலம், போலி நிறுவனங்கள் பெயரில், வெளிநாடுகளில் கோடிக்கணக்கில் முதலீடு செய்து, மோசடி செய்தது, 

கடந்தாண்டு மே மாதம் அம்பலப்படுத்தப்பட்டது.
இதைத் தொடர்ந்து, சர்வதேச புலனாய்வு பத்திரிகையாளர்கள் சங்கம், 'பாரடைஸ் பேப்பர்ஸ்' என்ற பெயரில், புதிய பட்டியலை வெளியிட்டுள்ளது.
இதில், பிரபல தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள் என, 714 இந்தியர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.
இதில், 500க்கும் மேற்பட்ட இந்தியர்களின் பெயர்கள் இடம் பெற்றிருந்தன.உலகெங்கும் மிகப் பெரிய புயலை, பனாமா பேப்பர்ஸ் ஏற்படுத்தியது. பாகிஸ்தான் பிரதமர், நவாஸ் ஷெரீப், பதவியை இழக்க நேரிட்டது. 
ஜெர்மனியைச் சேர்ந்த பத்திரிகைக்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையில், சர்வதேச புலனாய்வு நிருபர்கள் சங்கம் நடத்திய விரிவான ஆய்வுகளின் அடிப்படையில் இந்த மோசடி அம்பலபடுத்தப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக, ஜெர்மனி பத்திரிகைக்கு, ஐரோப்பிய நாடான பிரிட்டன் தீவான பெர்முடா மற்றும் ஆசிய நாடான சிங்கப்பூரைச் சேர்ந்த இரண்டு நிறுவனங்கள் மூலம், பல்வேறு நாடுகளில் போலியான நிறுவனங்களின் பெயரில் முதலீடு செய்த மோசடி தொடர்பான தகவல்கள் கிடைத்தன.

இவ்வாறு, 1.34 கோடி தகவல்களின் அடிப்படையில், 96 புலனாய்வு நிருபர்கள், 10 மாதங்களாக ஆய்வு செய்தனர்.
'பாரடைஸ் பேப்பர்ஸ்' என்ற பெயரில், இந்த மோசடி அம்பலபடுத்தப்பட்டுள்ளது. 
மொத்தம், 180 நாடுகளைச் சேர்ந்தவர்கள் தொடர்பாக கிடைத்த தகவல்களில், அதிக பெயர்கள் இடம்பெற்றுள்ள நாடு என்ற அடிப்படையில், இந்தியா, 19வது இடத்தில் உள்ளது.
இந்தப் பட்டியலில், 714 தனிநபர்கள், இந்திய நிறுவனங்களின் பெயர்கள் உள்ளன.
பெர்முடாவைச் சேர்ந்த ஆப்பிள்பே என்ற நிறுவனமும், சிங்கப்பூரைச் சேர்ந்த ஆசியாசிட்டி என்ற நிறுவனமும், 19 நாடுகளில், போலி நிறுவனங்களின் பெயர்களில் முதலீடுகள் செய்தது 
தெரியவந்துள்ளது.உலகெங்கும் உள்ள பிரபல தொழிலதிபர்கள், பணக்காரர்கள், அரசியல் தலைவர்கள் உள்ளிட்டோர், தங்கள் கறுப்புப் பணத்தை, இந்த நிறுவனங்கள் மூலம், போலி நிறுவனங்களின் பெயர்களில்முதலீடு செய்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதில், இந்தியாவைச் சேர்ந்தவர்கள் தொடர்பான ஆய்வை, பிரபல ஆங்கில பத்திரிகையைச் சேர்ந்த நிருபர்கள் விசாரித்தனர்.இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ள பல தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களின் மோசடிகள் குறித்து, சி.பி.ஐ., அமலாக்கத் துறை, வருமான வரித் துறை போன்றவை ஏற்கனவே விசாரித்து வருகின்றன.

இந்தியர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ள, நந்த் லால் கெம்காவின் சன் குழுமம், 118 போலி நிறுவனங்களின் பெயர்களில் முதலீடு செய்துள்ளது தெரியவந்துள்ளது.

ஆப்பிள்பே நிறுவனத்தின் முக்கியமான வாடிக்கையாளர்களில், இரண்டாவது இடத்தில் இந்த நிறுவனம் உள்ளது.

ஹிமாச்சலப் பிரதேசம், குஜராத் மாநில சட்டசபைகளுக்கு தேர்தல் நடக்க உள்ள நிலையிலும், செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பு வெளியாகி ஓராண்டு நிறைவடைய உள்ள நிலையிலும், இந்த மோசடி வெளியாகியுள்ளது.
இது, தேசிய அரசியலில் புதிய புயலை வீசும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
வெளிநாட்டில், போலி நிறுவனத்தில் முதலீடு மோசடியில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்களின் பெயர்களும் இடம் பெற்றுள்ளன.

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடியோ, அமெரிக்க அதிபர், டொனால்டு டிரம்பின் அமைச்சரவையில் உள்ள வர்த்தக அமைச்சர், வில்பர் ராஸ் மற்றும் ரஷ்யா இடையேயான தொடர்பு, பிரிட்டன் ராணி எலிசபெத், பாகிஸ்தான் முன்னாள் பிரதமர், சவுகத் அஜீஸ் உட்பட, 120 அரசியல்வாதிகளின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன.

'பாரடைஸ் பேப்பர்ஸ்' அம்பலப்படுத்தியுள்ள மோசடியில் இடம்பெற்றுள்ள இந்திய நிறுவனங்கள், தனிநபர்கள் பெயர் பட்டியல்:-

● நந்த் லால் கெம்காவின் சன் குழுமம், 118 போலி நிறுவனங்கள் பெயரில் கணக்கு துவக்கியுள்ளது.

● ஏர்செல் - மேக்சிஸ் மோசடி தொடர்பான வழக்கில் இடம்பெற்றுள்ள நிறுவனம்.

● எஸ்ஸார் - லுாப் 2ஜி வழக்கில் இடம்பெற்றுள்ள நிறுவனம்.
● எஸ்.என்.சி., லாவ்லின் வழக்கில் இடம்பெற்றுள்ள நிறுவனம்; இதில், கேரள முதல்வர் பினராயி விஜயன் மீது குற்றஞ்சாட்டப்பட்டது. ஆனால், அவர் பின்னர் விடுவிக்கப்பட்டார்.

● ராஜஸ்தானில் நடந்த ஆம்புலன்ஸ் மோசடி வழக்கில் தொடர்புடைய, 'ஜிகுஸ்டா ஹெல்த்கேர்' என்று நிறுவனம். இதன் இயக்குனர்களான, காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சச்சின் பைலட், முன்னாள் மத்திய நிதியமைச்சர், சிதம்பரத்தின் மகன் கார்த்தியின் பெயர் இடம்பெற்றுள்ளது.

● ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி தொடர்பாக, சி.பி.ஐ., சமீபத்தில் நடத்திய விசாரணையில் தொடர்புடைய நிறுவனங்கள்.

● மத்திய விமான போக்குவரத்துத் துறை இணையமைச்சர், ெஜயந்த் சின்ஹா, முன்பு, ஓமிட்யார் நெட்வொர்க் என்ற நிறுவனத்தின் இயக்குனராக இருந்தார். அந்த நிறுவனம் போலி நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளது.
அதன் இயக்குனராக, ெஜயந்த் சின்ஹா பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.

● பா.ஜ.,வின் ராஜ்யசபா எம்.பி.,யும், எஸ்.ஐ.எஸ்., என்ற நிறுவனத்தின் உரிமையாளருமான, ஆர்.கே.சின்ஹா.

● வர்த்தக நிறுவன புரோக்கர், நீரா ராடியா.

● பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்தின் மனைவி மான்யதா, தில்னாஷின் என்ற அவருடைய பழைய பெயரில் பட்டியலில் உள்ளார்.

● இந்தி  நடிகர் அமிதாப் பச்சன் பெர்முடாவைச் சேர்ந்த நிறுவனத்தில் முன்பு செய்திருந்த முதலீடுகள்.
இவர் உ.பி.மாநில முதியோர் ஓய்வுஊதியம் வாங்கி வருகிறார்.
மேலும் ஏழை விவசாயிகளுக்கு அரசால் வழங்கப்படும் இலவச 5ஏக்கர் நிலமும் பெற்ற பரம ஏழை.
முன்னாள் இந்தி திரையுலக மிகவும் ஏழை உச்ச நட்சத்திரம் .
இவரது மகன் அபிஷேக் பச்சன்,மருமகள் ஐஸ்வர்யா ராய் ஆகியோரும் ஏழை நடிகர்கள்தான் .

● வங்கிக் கடன் மோசடி வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள பிரபல தொழிலதிபர், விஜய் மல்லையாவின் யுனைடெட் ஸ்பிரிட்ஸ் நிறுவனத்தை வாங்கிய, டியாஜியோ நிறுவனம்.

● ஜி.எம்.ஆர்., குழுமம்.

● இவற்றைத் தவிர, ஜின்டால் ஸ்டீல்ஸ், அப்பல்லோ டயர்ஸ், ஹேவல்ஸ், ஹிந்துஜா, எம்மார் எம்.ஜி.எப்., வீடியோகான், ஹீராநந்தினி குழுமம் உள்ளிட்ட நிறுவனங்களும் இதில் இடம்பெற்றுள்ளன.
                                                  "ஆசையே துன்பத்துக்கான வழி."

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

.“ஷாக்கடிக்குது சோனா.. நீ நடந்து போனா.. !”

  டிக்-டாக்கால் வாழ்க்கை போச்சு மதுரை ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும், தல்லாகுளம் பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும் செல்ப...