ஞாயிறு, 3 ஜூலை, 2016

ஊடகங்களும்-காவல்துறையும்

குற்றவாளிகள்தொடர்பாகவைத்திருக்கும்அளவுகோளும்,

ஊடக தர்மமும்

ராம் குமார் செய்த கொலையால் சுவாதி இறந்தது கொடுரமானதுதான்.ஆனால் அதற்கு சற்றும் குறையாதது .முனுசாமி மீது ஐஸ்வர்யா என்ற குடிகாரப் பெண் காரை ஏற்றி கொன்றதுடன் நிறுத்தாமல் சென்றதும்தான்.
ராம்குமார் பிடிபட்டவுடன் அக்கொலையில் தொடர்பேஇல்லாத,அச்சம்பவம் நடந்ததே அறியாத அவனது வீடு,அவனது தந்தை ,தங்கைகள் படங்களை நம் ஊடகங்கள் தொலைக்காட்சியில் காட்டினார்கள்.நாளிதழ்களில்ராம்குமார் தங்கைகள் பெயர் வரை போட்டு மகிழ்ந்தார்கள்.
ஆனால் ஆடிக்கார் கொலைகாரி ஐஸ்வர்யா படத்தை போடாமல் இறந்த முனுசாமி படத்தையும்கொலை செய்த ஆடிக்காரின்படத்தையும் மட்டும் போட்டு தங்கள் ஊடகதர்மத்தை காத்துக்கொண்டார்கள். ராம்குமார்குடும்பவரலாற்றையே பிரசுரித்தவர்கள் பிரபல தொழிலதிபர்மகள் என்பதுடனே ஐஸ்வர்யா அறிமுகத்தை முடித்துக்கொண்டார்கள் .யார்அந்தபிரபல தொழிலதிபர் ? 

மகளை இவ்வளவு கீழ்த்தரமாக குடிகாரியாக,சிறையில்இருக்கும்போதும் சிரித்தபடியே ஒருகொலை செய்துள்ளோம்என்றஉ ணர்ச்சி இல்லாமல் சிரித்துபோஸ் கொடுப்பவராகவளர்த்துள்ளார் என்பதை அறிய ஆவல்.
ராம்குமார் தந்தை,தங்கைகள் ,பக்கத்துவீட்டுக்காரன்வரை படம் பெயர்போட்டவர்களுக்கு அந்ததொழிலதிபர்படம் குறைந்தஅளவுஅவர் பெயரையாவது பிரசுரிக்கலாமே.ராம்குமார் செய்ததை நியாயப்படுத்தவில்லை.

ஆனால் ஏழை ராம்குமார் செய்தது கொலை என்றால் பணக்காரை ஐஸ்வர்யா செய்ததற்குபெயர்என்ன?
அக்கொலைக்கு ஆடிகார்தான்காரணமா?.

குடிபோதையில்காரை ஓட்டியதுகுற்றமில்லையா?

நிதானமில்லாமல் வேகமாகஓட்டிஒருவரை கொன்றது குற்றமில்லையா?

அப்படி அடிபட்டவரை எப்படிஇருக்கிறார்.மருத்துவமனை கொண்டுசொல்வோம்என்ற சிந்தனையே இல்லாமல்திமிறுடன்தப்பிக்கமுயன்ரதுகாவல்துறை சட்டப்படிகுற்றம்இல்லையா? 

காவல்துறை,ஊடகங்கள்செய்த,செய்துவரும் ஐஸ்வர்யா ஆதரவுபணிகளைப்பார்க்கையில் கார்விபத்தைக்கண்டமக்கள்விரட்டிச்சென்று கையும்,கொலையுமாக குடிபோதை ஐஸ்வர்யாவை பிடித்து காவல்துறையில்ஆதாரத்துடன்ஒப்படைத்திருக்காவிடால் முன்சாமியை காரை ஏற்றிகொன்றபழியை ஏற்று வேறுஒரு ஓட்டுநர்தான் பணத்துக்காக சரணடைந்திருப்பார். அல்லது காவல்துறையினர் எப்.ஐ.ஆர்போட்டிருப்பார்கள்.

ஐஸ்வர்யா பெண்இன்னமும் கல்யாணமாகதபெண்.அவர் வாழ்க்கை பாதிக்கப்படலாம் என்று இந்தஊடகங்களும்,காவல்துறையும் சொன்னால் கொலையை பற்றிதெரியவே தெரியாத அப்பாவிகளான ராம் குமார் தங்கைகளும் இளம் பெண்கள்தானே அவர்களுக்கும்கல்யானம்காட்சிவேண்டாமா?ஐஸ்வர்யா பெரும்பணக்காரர்எப்படியும்மணமாகிவிடும்.ஆனால் ஏழைகள் பணம் இல்லாவிடாலும் மானம் அதிகம்உள்ளவ்ர்கள்..

இனியாவது குற்றவாளி ராம்குமாரை மட்டும் சொல்லுங்கள்.அப்பாவி குடும்பப்பெண்களை விட்டுவிடுங்கள்.

குடித்து விட்டுகாரை ஓட்டிகொலை செய்த ஐஸ்வர்யா படத்தை போடுங்கள்.
அவர் தந்தை பெயரை போட்டுஇன்னார்மகள்என்றுசெய்திதாருங்கள்.

அப்படிஅவர் என்ன பெயர்போன தொழிலதிபர். என்றாலும் அவருக்கு பெயர் பெற்றோர்வைத்திருப்பார்கள்தானே?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

.“ஷாக்கடிக்குது சோனா.. நீ நடந்து போனா.. !”

  டிக்-டாக்கால் வாழ்க்கை போச்சு மதுரை ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும், தல்லாகுளம் பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும் செல்ப...