ஞாயிறு, 15 பிப்ரவரி, 2015

வெற்றி பெற்றும்


  இந்த கர்மமா?

திருவரங்கம்  அதை ஸ்ரீ ரங்கம் என்று கூ ட சொல்லலாம் .இடைத்தேர்தல் முடிவுகள் நாளை தெரியும் என்று செய்தி தாட்களில் இன்று செய்திகள் வெளியாகியுள்ளன.
இதில் நாளை தெரிய என்ன இருக்கின்றது.
சென்ற இடைத்தேர்தலில் பிறந்த குழ்ந்தை கூட சொல்லி விடும் ஆளுங்கட்சிதான் வெற்றி பெறும் என்று.
டெல்லி மாயம் இங்கு நடக்க வாய்ப்பில்லை.


தமிழர்கள் நாணயஸ்தர்கள்.வாங்கின காசுக்கோ,தங்கள் வாக்கை காசுக்கு விற்றபின்னர் அதை மாற்றி போட மாட்டார்கள்.

எனவே அதிமுக  வேட்பாளர் வளர்மதி வெல்வது நிச்சயம் இந்த நிமிடம் வரை.ஆனால் அ வருக்கு  இருக்கும் ஒரே இக்கட்டு வென்று காட்டி தலைவிக்கு இன்னமும் செல்வாக்கு குறையவில்லை என்பதை நிருபிக்க வேண்டும் .
ஆனால் அதே நேரம் தனது தலைவி சென்ற  தேர்தலில் பெற்ற வாக்கு வித்தியாசம் 44000த்து சொச்சத்தைவிட ஒரு வாக்கு கூட அதிகமாக இருக்க கூடாது.
வாக்கு வித்தியாசம் குறைவு ஏற்றுக் கொள்ளப்படும்.
வாக்குக்கு 2000 கொடுத்த அமைச்சர் பெருமக்கள் தங்களிடம் பணம் வாங்கியவர்கள் அனைவரும் "போடுங்கம்மா ஓட்டு ,இரட்டை இலையை பார்த்து " என்று அந்த பொத்தானை அமுக்கி விட்டால் என்ன செய்வது என்று கவலையில் இருக்கிறார்களாம்.
பின்னே லட்சக்கணக்கில் வாக்கு வித்தியாசம் போய்  விட்டால்?தோட்டம் பக்கம் போக முடியுமா என்ன?
அமைச்சர் பதவியும் தக்க வே ண்டாமா?
தமிழர்களின் நாணயம் இங்குதான் தர்மசங்கடத்தை எட்டி பார்த்துள்ளது.
வாங்கிய காசுக்கு செஞ்ச்சொற்று கடனை தீர்க்க இயலாமல் போய் விடக்கூடாது என்ற அவர்களின் எண்ணம் இருதலை கொள்ளி எறும்பாக சிலரை தவிக்க விட்டுள்ளது.

அவர்களுக்கு ஒரு யோசனை.

ஊழல் வழக்கில் உள்ளே சென்று பிணையில் வந்த தியாகி என்று மக்கள் அனைவரும் வாக்களித்து விட்டார்கள்.

உங்களின் விதி-சதி கடிதம் எழுச்சியை உண்டாக்கி விட்டது.திமுகவினரே அழுது கொண்டு இரட்டை இலை பொத்தானை அழுத்தி விட்டார்கள்.

அங்கே வளர்மதி நின்றதாக யாரும் கருதவில்லை.உங்கள் கடிதப்படி நீங்களே கண்ணீரும் ,கம்பலையுமாக நிற்பதாக எண்ணி வாக்களித்து விட்டார்கள்.
இப்படி சொல்லி அவர் உள்ளே  போனதும் நீங்கள் பதவியே ற்பு விழாவில் கொடுத்த முக பாவனையை கொடுங்கள் தோட்டத்தின் முதலாளியம்மா கொஞ்சம் அமைதியாகி விடுவார்.

முக்கியமாக முதல்வர் பன்னீர் செல்வத்தின் முக பாவத்தை பார்த்து அது போலவே நடியுங்கள்.

என்ன செய்ய  நீங்கள் வெற்றி பெற்றும் இந்த கர்மமா?
============================================================================
   ஒரு பகுதறிவாளனின் பரினா[ய் ]ம வளர்ச்சீ

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

.“ஷாக்கடிக்குது சோனா.. நீ நடந்து போனா.. !”

  டிக்-டாக்கால் வாழ்க்கை போச்சு மதுரை ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும், தல்லாகுளம் பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும் செல்ப...