சனி, 29 ஜூன், 2013

மூட்டை கட்டிய அன்சுல் மிஸ்ரா.

மதுரையில் அழகிரி சாம்ராஜ்யத்தை ஒடுக்க நியமிக்கப்பட்டவர்கள்தான் சகாயம்,அடுத்து அன்சுல் மிஸ்ரா போன்ற மாவட்ட ஆட்சியர்கள்.
இப்போது அழகிரி அமுங்கி விட்டார்.
சகாயம் துணிகள் விற்க [கோ -ஆப் டெக்ஸ் ]அனுப்பப்பட்டு விட்டார்.கல்கோரி விவகாரத்தில் அதிமுகவினரிடமும் அடங்காமல் இருந்ததால் இப்போது அன்சுல் மிஸ்ராவும்
வணிகவரி கணக்கு-வழக்கு பார்க்க ஒதுக்கப்பட்டூ விட்டார்.
கலெக்டராக இருந்த சகாயம் கடந்தாண்டு மே மாதம் கோ ஆப்டெக்ஸ் இயக்குனராக மாற்றப்பட்டார். திருவண்ணாமலை கலெக்டராக இருந்த அன்சுல் மிஸ்ரா மதுரைக்கு மாற்றப்பட்டார்.
2012 மே 28ல் புதிய கலெக்டராக அன்சுல் மிஸ்ரா பொறுப்பேற்றார். கிரானைட் மோசடி தொடர்பாக விசாரணை நடத்தி பல்வேறு உண்மைகளை இவர் வெளிச்சத்துக்கு கொண்டு வந்தார். பெரிய நிறுவனங்களுக்கு சீல் வைத்தார். கிரானைட் முறைகேடு தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது. 800க்கு மேற்பட்ட சத்துணவு அமைப்பாளர்கள், அங்கன்வாடி பணியாளர் நியமனத்தில் ஆளுங்கட்சியினரின் பரிந்துரைகளை இவர் ஏற்கவில்லை. நேர்காணல் நடத்தி தகுதியானவர்களை மட்டும் நியமனம் செய்தார். இது ஆளும் கட்சியினருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது.வருவாய்த் துறையில் பட்டா மாறுதல் உள்ளிட்ட முறைகேடுகள் தொடர்பாக 3 தாசில்தார்கள், 5 துணை தாசில்தார்கள், வருவாய் அலுவலர்கள், 15 விஏஓக்களை சஸ்பெண்ட் செய்தார். பொதுமக்களின்  மனுக்களை பெற்று ஆன்லைன் மூலம் பதிவு செய்து விசாரணை நடத்தினார். மேலும் பேஸ்புக் மூலம் 3 ஆயிரத்திற்கு மேற்பட்ட புகார் மனுக்களை பெற்றார். இவற்றின் மீது விசாரணை நடத்தி உடனுக்குடன் தீர்வு கண்டார்.ஊரக பகுதிகளில் வளர்ச்சிப் பணிகளை அடிக்கடி ஆய்வு செய்தார்.

சரியில்லாத பணிகளின் ஒப்பந்தங்களை ரத்து செய்தார். அரசு கட்டிடங்களைக் கட்ட ஒப்பந்தம் எடுத்த கான்ட்ராக்டர்கள் ஆளுங்கட்சி எம்எல்ஏக்களுக்கு கமிஷன் கொடுத்து தரமற்ற பணிகளை செய்ததாக புகார் எழுந்தது. இதில், விசாரணை நடத்தி, கான்ட்ராக்டர்கள் மீது நடவடிக்கை எடுத்தார். மேலும், ஆளுங்கட்சி எம்எல்ஏக்களின் முறையற்ற பரிந்துரைகளை கலெக்டர் ஏற்பதில்லை எனக் கூறப்பட்டது.இதனால், ஆத்திரமடைந்த ஆளுங்கட்சி எம்எல்ஏக்கள் உள்ளாட்சி பிரதிநிதிகளுடன் சேர்ந்து  கூட்டம் போட்டு கலெக்டரை மாற்ற வேண்டும் என மூத்த அமைச்சர்கள் குழுவிடம் மனு கொடுத்தனர். ஆனால், அமைச்சர்கள் குழு கலெக்டரை பகைத்து கொள்ளக் கூடாது என அறிவுரை கூறி அனுப்பினர். மதுரை மாநகராட்சியில் நடந்த ஊழல் புகார்கள் தொடர்பாக அன்சுல் மிஸ்ரா நடவடிக்கை எடுத்தார். குறிப்பாக உள்ளூர் திட்டக் குழுமத்தின் அனுமதி பெறாமல் முறைகேடாக கட்டப்பட்ட 40க்கும் மேற்பட்ட கட்டிடங்களுக்கு சீல் வைத்தார். மாநகராட்சி பகுதியில் அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விளம்பர பலகைகளை அகற்றினார். இதில் மேயருக்கும், கலெக்டருக்கும் மோதல் ஏற்பட்டது.ரிங் ரோட்டில் பில் இல்லாமல் டோல்கேட் கட்டணம் வசூல் செய்யப்பட்டது. இந்த முறைகேடு தொடர்பாக போலீஸ் மூலம் கலெக்டர் நடவடிக்கை எடுக்க வைத்தார்.

 முறைகேட்டில் ஈடுபட்ட 2 மாநகராட்சி ஊழியர்கள் உள்பட 10 பேர் கைது செய்யப்பட்டனர். மாநகராட்சியின் நிர்வாகத்தில் கலெக்டர் தலையீடுவதாக கூறி, கவுன்சில் கூட்டத்தில் கலெக்டரை கண்டித்து தீர்மானம் கொண்டு வரவும் முடிவு செய்யப்பட்டது. மேலும் மாநகராட்சி ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இந்தப் போராட்டத்தில் ஆளுங்கட்சியினரின் தூண்டுதல் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. நேற்று முன்தினம் இரவு கலெக்டர் முன்னிலையில் மேயர், மாநகராட்சி ஊழியர் சங்கப் பிரதிநிதிகள் இடையே பேச்சுவார்த்தை நடந்ததை தொடர்ந்து போராட்டம் முடிவுக்கு வந்தது.இந்நிலையில் பணியேற்று ஒரு வருடம், ஒரு மாதம் மட்டுமே ஆன நிலையில் மக்களின் நன்மதிப்பை பெற்ற, கலெக்டர் அன்சுல் மிஸ்ரா நேற்று அதிரடியாக மாற்றப்பட்டுள்ளார். புதிய கலெக்டராக கடலூரில் சப் கலெக்டராக பணியாற்றும் சுப்பிரமணியன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அன்சுல் மிஸ்ராவுக்கு வணிகவரித்துறை இணை ஆணையர் பணி ஒதுக்கப்பட்டுள்ளது.

கிரானைட் விசாரணை நிலை என்ன?
கிரானைட் குவாரியில் யி16 ஆயிரம் கோடி அரசுக்கு இழப்பு என முன்னால் கலெக்டர் சகாயம் கண்டுபிடித்தார். இதனை தொடர்ந்து கலெக்டர் அன்சுல்மிஸ்ரா முறையாக விசாரணை நடத்தி 86 குவாரிகளில் முறைகேடு என கண்டுபிடித்தார். உரிய விசாரணைக்கு பிறகு போலீசார் 50க்கு மேற்பட்ட வழக்கு பதிவு செய்து 40க்கு மேற்பட்டோரை கைது செய்தனர்.ஏற்கனவே கிரானைட் விசாரணை அதிகாரியான ஜான்லூயிஸ் மாற்றப்பட்டார். தற்போது கலெக்டர் அன்சுல்மிஸ்ராவும் மாற்றப்பட்டதால் இதன் விசாரணை எப்படி போகும் என தெரியவில்லை. தற்போது இதில் இருக்கும் ஒரே அதிகாரி மாவட்ட எஸ்.பி பாலகிருஷ்ணன் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.
 கலெக்டர் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கைகள் மக்களிடம் வரவேற்பை பெற்றன. மேலூர் பகுதியில் 20 ஆண்டுகளாக முறைகேடாக நடந்த கிரானைட் குவாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுத்தார். குவாரிகள் மூலம் மாவட்டத்தில் தனிராஜ்யம் நடத்தியவர்களை கைது செய்ததுடன், நிலஅபகரிப்பு, கண்மாய், கால்வாய் ஆக்கிரமிப்புகள் குறித்தும் வருவாய்த் துறையினரை கொண்டு ஆய்வு நடத்தினார். பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள கிரானைட் கற்களை, அளந்து, மதிப்பீடு செய்து, ஏலமிட ஏற்பாடுகள் செய்தார். குறைதீர் நாள் கூட்ட நடவடிக்கைகள் மக்களிடம் வரவேற்பை பெற்றன. மாற்றுத் திறனாளிகள், முதியோரிடம் தனி அக்கறை செலுத்தினார். லஞ்சம், முறைகேடு புகாரிகளில் சிக்கிய 10க்கும் மேற்பட்டோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
 இதனால் வருவாய்த் துறையினர் போராட்டமே நடத்தினர்.
சமீபத்தில் முறைகேடு செய்த துணை தாசில்தார் ஒருவரை கலெக்டர் பணி நீக்கமே செய்தார். நாள்தோறும் கலெக்டரிடன் பேஸ்புக்கில் பலர் புகார் அனுப்பினர். அவற்றின் மீது கலெக்டர் நடவடிக்கை மேற்கொண்டார். யூனியன்களிலும், பிர்க்கா அளவிலும், நகராட்சிகளிலும் நேரடியாகச் சென்று மக்கள் குறைகளை கேட்டார்.
 3 நாட்கள் பெண்களுக்கான முகாம் நடத்தி, மனுக்கள் பெற்றது, கவுன்சிலிங், மருத்துவ முகாம் நடத்தியதும் பெண்களிடம் வரவேற்பை பெற்றது. விதிகளை மீறிய பல கட்டடங்களுக்கு சீல் வைத்தார். இப்பிரச்னையில் மாநகராட்சியுடன் உரசல் ஏற்பட்டது. வளர்ச்சித் திட்டப் பணிகள் தரம் குறித்தும், "கட்டிங்' தொடர்பாகவும் பல்வேறு புகார்கள் எழுந்த நிலையில், விசாரணைக்கு உத்தரவிட்டார்.
அதிருப்தியான ஆளும் கட்சி எம்.எல்.ஏ.,க்கள் 4 பேர் முன்னிலையில் நடந்த உள்ளாட்சி பிரதிநிதிகள் ஆலோசனை கூட்டத்தில், "கலெக்டர், எஸ்.பி., திட்ட இயக்குனர் இருக்கும் வரை சம்பாதிக்க முடியாது. இவர்கள் மூவரையும் மாற்ற வேண்டும்,' என வெளிப்படையாக பேசினர். ரிங்ரோட்டில் முறைகேடாக கட்டணம் வசூலித்த ஊழியர்களை போலீசார் கைது செய்தனர்.
 பணவசூலில் மாநகராட்சியில் சிலருக்கு தொடர்பிருக்கலாம் என கூறப்பட்டது.
 போலீசாரின் நடவடிக்கைக்கு, கலெக்டரின் பின்னணி இருக்கலாம் எனக் கருதிய மாநகராட்சி ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்தனர்.
மேயர் ராஜன்செல்லப்பா, கலெக்டரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
"கிரானைட்' கற்களை "இ-டெண்டர்' விட முயற்சியையும் அன்சுல் மிஸ்ரா மேற்கொண்டார். ஆளும் கட்சியினர் மேலிடத்தில் முட்டி மோதினர். மாநகராட்சி நிர்வாகத்திலும் தேவையில்லாமல் கலெக்டர் தலையிடுகிறார் என, 2 நாட்களுக்கு முன் தலைமை செயலாளருக்கு புகார் அனுப்பியுள்ளனர்.
நேற்று திடீரென சென்னை வணிகவரித்துறை இணை கமிஷனராக மாற்றப்பட்டார்.
என்னதான் ஆள்வோர் எண்ணப்படி நடந்து கொண்டாலும் கட்சிக்காரர்கள் வரவு-செலவுக்கு இடைஞ்சலாக இருந்தால் மூட்டையை கட்ட வேண்டியதுதான்.இது இன்னொரு முறை நிருபணமாகியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

.“ஷாக்கடிக்குது சோனா.. நீ நடந்து போனா.. !”

  டிக்-டாக்கால் வாழ்க்கை போச்சு மதுரை ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும், தல்லாகுளம் பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும் செல்ப...